எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 15 53

“கொஞ்சம் பேசணும்..!!” என்றார் ஸ்ரீனிவாச பிரசாத்.

“உ..உள்ள வாங்க..!!” என்றாள் அவள்.

ஸ்ரீனிவாச பிரசாத் மட்டும் அறைக்குள் நுழைய.. அசோக்கும் கனகராஜனும் வாசலுக்கு அருகிலேயே நின்றுகொண்டார்கள்..!! உள்ளே சென்ற ஸ்ரீனிவாச பிரசாத்.. அந்தப்பெண்ணுக்கு அருகே கிடந்த இன்னொரு சேரை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தார்.. மென்மையான குரலிலேயே ஆரம்பித்தார்..!!

“இது.. ஜஸ்ட் ஃபார்மல் என்கொய்ரிதான் மிஸஸ் தேவராஜ்.. நீங்க ஒன்னும்..” ஸ்ரீனிவாச பிரசாத் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, அந்தப்பெண் இடைமறித்து,

“நிர்மலா..!!” என்றாள்.

“வாட்..??” ஸ்ரீனிவாச பிரசாத் புரியாதவராய் நெற்றி சுருக்கினார்.

“என் பேர் நிர்மலா.. அப்படியே என்னை கூப்பிடலாம்..!!”

அந்தப்பெண் இறுக்கமான குரலில் சொல்லிவிட்டு, குழந்தையின் வாயில் சாதத்தை திணித்தாள். ஸ்ரீனிவாச பிரசாத் ஒருசில வினாடிகள் ஒருவித திகைப்புடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். அப்புறம் ஒரு பெருமூச்சுடன், அந்த திகைப்பை சமாளித்துக்கொண்டு சொன்னார்.

“ஓகே.. மிஸஸ் நிர்மலா.. இ..இது.. இது ஜஸ்ட் ஃபார்மல் என்கொய்ரிதான்.. நீங்க எதும் டென்ஷன் ஆகிக்க வேணாம்னு சொல்ல வந்தேன்..!!”

“இல்ல.. டென்ஷன் ஆகல..!! கேளுங்க..!!”

“உ..உங்க ஹஸ்பண்டுக்கு எத்தனை நாளா இந்தப்பழக்கம் இருக்கு..??”

“குடிப்பழக்கம் கல்யாணம் ஆன நாள்ல இருந்தே இருக்கு..!! இப்போ ஒரு ரெண்டு வருஷமாத்தான்.. இதுலாம்..!!”

“ம்ம்..!! அவர் கன்ஸ்யூம் பண்ணிருக்குறது.. கொக்கைன்’ன்னு சொல்ற ஒருவகை போதைப்பொருள்..!! கேள்விப்பட்ருக்கீங்களா..??”

“இ..இல்ல.. கேள்விப்பட்டது இல்ல..!!”

“ரொம்ப காஸ்ட்லி.. ஒரு சின்ன பொட்டலமே இருபதாயிரம், முப்பதாயிரம் ஆகும்..!! இங்க சென்னைல அவ்ளோ ஈஸியா கெடைச்சிடாது.. ஸவ்த் அமெரிக்கால இருந்து ஸ்மக்ள் பண்ணி.. மும்பை, டெல்லி மூலமாத்தான் சென்னைக்கே வந்தாகனும்..!!”

“ஸோ..??”

“நத்திங்.. இந்த ட்ரக்ஸ்லாம் சென்னைல புழக்கத்துல இருக்குதுன்ற ந்யூஸே.. எங்க டிப்பார்ட்மண்ட்டுக்கு பெரிய தலைவலியான சமாச்சாரம்..!! மீடியாக்கு தெரிஞ்சா சொல்லவே வேணாம்.. ஒரு வழி பண்ணிடுவாங்க..!! It’s a serious issue for us Mrs.Nirmala..!! என்ன சொல்ல வரேன்னு புரியுதா..??”

“பு..புரியுது..!!”

“ம்ம்..!! அவருக்கு இந்த ட்ரக்ஸ்லாம் எப்படி கெடைக்குதுன்னு.. உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கா..??”

ஸ்ரீனிவாச பிரசாத் கேட்கவும், நிர்மலா இப்போது பட்டென அமைதியானாள். சிலவினாடிகள் சாதத்தை பிசைந்துகொண்டே, சற்று யோசித்தாள். பிறகு பிசைந்த சாதத்தை சுஜிக்கு தந்தவாறே, மெலிதான குரலில் சொன்னாள்.

“எனக்கு அந்த ஆள் பேர்லாம் தெரியாது.. ஆனா.. அந்த ஆள் மூலமாத்தான் இவருக்கு இதெல்லாம் கெடைக்குதுன்னு மட்டும் நல்லா தெரியும்..!! அப்பப்போ இங்க வருவான்.. இவரும் அவனுக்கு அப்பப்போ பணம் குடுக்குறதை நான் பாத்திருக்கேன்..!! நேத்து கூட.. இவர் வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்துல அந்த ஆள் பைக்ல இங்க வந்தான்.. இவர் வாசலுக்கே போய் அவன்ட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு வந்தாரு..!! அனேகமா.. அந்த கருமத்தை குடுக்குறதுக்குத்தான் அவன் வந்திருக்கணும்..!!”

“ம்ம்.. அ..அவன் பேர் தெரியாது சரி.. ஆள் பாக்குறதுக்கு எப்படி இருப்பான்னு கொஞ்சம் சொல்ல முடியுமா..??”

“கருப்பா.. குண்டா.. கொஞ்சம் குள்ளமா இருப்பான்.. சுருட்டை முடி..!! இந்த எடத்துல ஒரு வெட்டுக்காயமோ, தீக்காயமோ..!! அவனுக்கு ஏதோ நரம்புத்தளர்ச்சின்னு நெனைக்கிறேன்.. பேசுறப்போ அடிக்கடி வாய் ஒருமாதிரி கோணிக்கும்.. பல்லுலாம் கறையா இருக்கும்.. பாத்தாலே அப்படியே வெறுப்பா இருக்கும்..!!”