எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 11 52

“……………………..” அசோக் அமைதியாக கேட்டுக்கொண்டிருக்க, மீரா பேச்சை சற்று நிறுத்தி பிறகு தொடர்ந்தாள்.

“உன்னை மண்டை காய வைக்கணும்.. அப்படியே தலையை பிச்சுக்க வைக்கணும்.. உன் பணத்திமிரை ஒடுக்கனும்.. ஆம்பளைன்ற கர்வத்தை அடக்கணும்.. பொண்ணுகன்னா நீ பயந்து மெரளணும்.. ‘ஏண்டா இவ கூட பழக ஆரம்பிச்சோம்’னு வெறுத்து போகணும்.. ‘விட்டா போதும்’னு சொல்லாமக்கொள்ளாம என்னைவிட்டு ஓடனும்..!!”

“……………………..” அசோக் மீராவையே சற்று மிரட்சியாக பார்த்தான்.

“ஆரம்பத்துல இருந்தே உன்னை நான் டாமினேட் பண்ண ஆரம்பிச்சேன்..!! ஆர்டர் போட்டேன்.. அதிகாரம் பண்ணினேன்.. அசிங்கப் படுத்தினேன்.. என் கால்ல விழ வச்சேன்.. ஒரு வேலைக்காரன் மாதிரி உன்னை ட்ரீட் பண்ணினேன்..!! தப்பான நம்பர் குடுத்து உன்னை காயவிட்டேன்.. தடிப்பசங்க ரெண்டு பேர்ட்ட அடி வாங்கி தந்தேன்.. டிக்கெட் விக்க சொல்லி தெருத்தெருவா அலைய வச்சேன்.. எதுக்கெடுத்தாலும் கை நீட்டி அறைஞ்சேன்.. இன்னும் என்னன்னவோ..!! உன்னோட ஈகோதான் என்னோட டார்கெட்..!! I..I just wanted to humiliate you.. and make you pay the price for choosing me..!! நான் பண்ற டார்ச்சர் தாங்காம.. கொஞ்ச நாள்லயே நீ தலைதெறிக்க ஓடிடுவன்னு நெனச்சேன்..!! ஆ..ஆனா.. நடந்தது என்ன தெரியுமா அசோக்..??”

ஆதங்கத்துடன் பேசிய மீரா சற்றே நிறுத்தி, அசோக்கின் முகத்தை ஏறிட்டாள். அவனோ ஒருவித திகைப்புடன் நின்றிருந்தான். அவனுடைய கண்களிலும், முகத்திலும் ஏதோ ஒருவித சோர்வு. உடலில் மெலிதாக ஒரு களைப்பு. இமைகளை மூடி மூடி திறந்தான். மீரா இப்போது காதலும், மென்மையும் கலந்த மாதிரியான குரலில் பேச ஆரம்பித்தாள்.

“பேசுன மொதநாளே நீ என்னை இம்ப்ரஸ் பண்ண ஆரம்பிச்சுட்ட.. ‘பில்லுக்கு பணத்தை வச்சுட்டு எடத்த காலி பண்ணு’ன்னு சொன்னியே..? I was really impressed.. you are different-ன்னு தோணுச்சு.. என்னையும் அறியாம ‘ச்சோ.. ச்ச்வீட்’ன்னு சொன்னேன்..!! அப்புறம் நாம அடிக்கடி மீட் பண்ணோம்.. நீயும் அடிக்கடி என்னை இம்ப்ரஸ் பண்ணின.. எல்லாம் உன்னோட நல்ல மனசால..!! நானும் ஒவ்வொரு முறையும் ‘ச்சோ.. ச்ச்வீட்’ சொல்லி.. அந்த நல்ல மனசை அப்ரஷியேட் பண்ணுவேன்..!! உன்னோட இன்னோசன்ஸ்.. இரக்க குணம்.. பொறுமை.. தொழில் திறமை.. ஒரு பொண்ணுக்கு நீ தர்ற மதிப்பு.. முடியாதவங்க மேல நீ காட்ன அன்பு.. எல்லாத்துக்கும் மேல, என் மேல நீ வச்சிருந்த அந்த Pure and Blind Love.. I started to loose myself..!! உன்னை ஏமாத்த நெனச்சேன்.. ஹ்ஹ.. கடைசில நான்தான் ஏமாந்து போயிட்டேன் அசோக்..!!”

“……………………..”

“உன்கூட பழகுறது கொஞ்சம் கொஞ்சமா எனக்கு புடிக்க ஆரம்பிச்சிடுச்சு.. என் சிச்சுவேஷனும் அந்த மாதிரி.. சிரிப்பையே மறந்து போயிருந்த எனக்கு.. உன்னோட சேர்ந்து சிரிக்கிறது பிடிச்சிருந்தது..!! உன்னை சீண்டுறது.. கேலி பண்றது.. வெளையாடுறது.. அதையெல்லாம் நீ பொறுமையா சகிச்சுக்குறது.. எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது..!! அன்னைக்கு நான் தண்ணில குதிச்சது கூட.. அந்த மாதிரி உன்னை சீண்டி விளையாடுறதுக்குத்தான்.. சத்தியமா உன்னை டெஸ்ட் பண்றதுக்காக இல்ல.. நீ கண்டிப்பா தண்ணில குதிச்சு என்னை தேடுவன்னு எனக்கு நல்லா தெரியும்..!!”

கண்களில் தேங்கிய நீருடன் மீரா சொன்னாள். அசோக் அவளையே பிரமிப்பாக பார்த்தவாறு நின்றிருந்தான். நெற்றி வலிப்பது மாதிரி இருக்க, மெல்ல பிசைந்து கொண்டான்.

“ஆனா.. என் மனசுல உள்ளதுலாம் உனக்கு தெரியக்கூடாதுன்னு நெனைப்பேன்..!! அன்னைக்கு ட்ரிங்க்ஸ் சாப்பிட்டு போதைல.. என் மனசுல இருந்தது என்னையும் அறியாம வெளில வந்துடுச்சு.. உன்கிட்ட உளர்னதுக்காக நான் எவ்வளவு ஃபீல் பண்ணினேன் தெரியுமா..?? அன்னைக்கே என் புத்தில ஒரு அலாரம் அடிச்சது.. its getting too serious-ன்னு..!! But.. அப்போ அதை அசால்ட்டா விட்டுட்டேன்..!! அப்புறம்.. அன்னைக்கு ஏரில அந்த இன்சிடென்ட் அப்போ.. நீ உன் மனசுல இருந்ததெல்லாம் கொட்டுனியே.. அப்போத்தான்.. நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டு இருக்கேன்னு, பொட்டுல அறைஞ்ச மாதிரி எனக்கு புரிஞ்சது..!!”

“……………………..”

“உன்கிட்ட இருந்து உடனே விலகிடணும்னு நெனச்சேன்.. அன்னைக்கு சிக்னல்ல இறங்கி ஓடுனனே.. அதுக்கப்புறம் உன்னை மீட் பண்ணவே கூடாதுன்ற முடிவோடதான் இறங்கிப் போனேன்.. கால் பண்ணாம, கான்டாக்ட் பண்ணாம இருந்தேன்..!! But.. Do you know, what happened..?? என்னால ஒருநாளுக்கு மேல தாக்குப் பிடிக்க முடியல அசோக்.. உன்கூட பேசாம என்னால இருக்க முடியல.. என் வைராக்கியம்லாம் ஒரே நாள்ல செத்துப்போச்சு.. பைத்தியக்காரி மாதிரி உன்கிட்ட ஓடிவந்து.. ‘நேத்து என்னை மிஸ் பண்ணுனியா’ன்னு பல்லை இளிச்சுக்கிட்டு நின்னேன்..!!” மீரா கலங்கிய கண்களுடன் பரிதாபமாக சொல்ல, அசோக் அவளை இப்போது ஏக்கமாக பார்த்தான்.

“……………………..”

“அப்புறமும் அடிக்கடி காணாம போனேன்..!! சரி.. ஒரேடியா முடியல.. கொஞ்சம் கொஞ்சமா ஒதுங்கிடலாம்னு தோணுச்சு.. அதான் இண்டர்வ்யூ அது இதுன்னு பொய் சொன்னேன்..!! ஆனா.. உன்னை ஏமாத்தின மாதிரி என் மனசாட்சியை என்னால ஏமாத்த முடியல அசோக்.. ‘இவனை நம்ப வச்சு கழுத்தறுத்துட்டு இருக்குற’ன்னு எந்த நேரமும் என் மனசுல ஒரு உறுத்தல்.. ராத்திரில நிம்மதியா தூங்க கூட விடாது அந்த உறுத்தல்..!! நேத்து உன் ஃபேமிலியை பாத்தப்புறம்.. அவங்க கூட பேசினப்புறம்.. அந்த உறுத்தல் ரொம்ப அதிகமாயிடுச்சு..!! தெனமும் உன்னை நெனச்சு அழுவேன்.. நேத்து ரொம்ப அதிகமா அழுதேன்..!!” தழதழத்த குரலில் மீரா சொல்ல,

“ஹேய்.. மீரா..!!”

என்று அசோக் அவளுடைய புஜத்தை ஆதரவாக பற்றினான். மீரா இப்போது தனது தளிர்க்கரங்கள் இரண்டையும் உயர்த்தி, அசோக்கின் கன்னங்களை மென்மையாக தாங்கிப் பிடித்துக் கொண்டாள். அவளுடைய கண்களிலும், மனதிலும் காதல் பொங்கி வழிய சொன்னாள்.

“நீ என் மனசுக்குள்ள எப்போ வந்த, எப்படி வந்தன்லாம்.. சத்தியமா எனக்கு தெரியல அசோக்.. நான் யோசிச்சு சுதாரிக்கிறதுக்கு முன்னாடி, என் மனசை மொத்தமா நெறைச்சுட்ட..!! ‘அவனை நீ லவ் பண்றியா’ன்னு கண்ணாடி முன்ன நின்னு, என்னை நானே கேட்டுக்குவேன்.. அப்புறம் ‘அதுலாம் ஒன்னும் இல்ல..’ன்னு நானே பதிலும் சொல்லிக்குவேன்.. ‘இன்னும் கொஞ்ச நாள் பேசிட்டு.. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா விலகிட போறோம்.. அவ்வளவுதான்..’னு மனசை சமாதானப் படுத்திக்குவேன்.. என்னை நானே ஏமாத்திக்குவேன்..!!”