உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Part 1 250

இன்று எங்களுடைய கல்யாண நாள். கல்யாணம் ஆகி 5 வருடம் முடிகிறது. ப்ராஜக்ட் விஷயமாக 2 நாட்கள் மும்பை சென்று விட்டு, கல்யாண நாளை மனைவி ப்ரியாவுடன் கொண்டாட வேண்டும் என்பதற்க்காகவே, 3 நாள் வேலையை நைட் அதிகம் கண் விழித்து, 2 நாளில் முடித்து விட்டு திரும்பி வருகிறேன். அதுவும், மனைவிக்கு சர்ப்ரைசாக இருக்க வேண்டும் என்பதற்க்காக, நேற்று இரவு பேசும் பொழுது கூட, சோகமாய் நான் கல்யாண நாளுக்கு உன்னுடன் இருக்க முடியாது ப்ரி என்று ஃபீல் பண்ணி பேசி, 12 மணிக்கு, வாழ்த்தெல்லாம் சொன்னேன்.

அவளுக்கும் செம கடுப்பு. இருந்தாலும், ப்ரியாவும் வேலைக்குச் செல்வதால், அதை புரிந்து கொண்டாள். நானும், புன் சிரிப்போடு, காலையில் 11 மணிக்குள் ரிப்போர்ட் சப்மிட் செய்துவிட்டு, மீட்டிங்கையும் முடித்து விட்டு சென்னை வந்தடைந்த பொழுது மணி 3.

சர்ப்ரைசிற்க்கான ப்ளான் எல்லாம் ரெடி.

மும்பையில் ஏற்கனவே டிசைனர் சாரி வாங்கியிருந்தேன். அவளுக்கு இது எவ்வளவு செக்சியாக இருக்கும் என்று யோசித்து, யோசித்து வாங்கியது. மைதிலியிடம் ஏற்கனவே கேக்கினை வாங்கி வரச் சொல்லியாகிவிட்டது. அவள் கேக்குடன் வருவதற்க்கும், நான் வீட்டை அடைவதற்க்கும் சரியாக இருக்கும். நேராக கிண்டியில் இருக்கும் என் அலுவலகத்திற்குச் சென்று, அங்கு பார்க் பண்ணியிருந்த காரை அடைந்ததும் மைதிலிக்கு கால் செய்தேன்.

ஹாலோ, மைதிலி!

அண்ணா வந்துட்டீங்களா?

பார்க்கிங்லதான் இருக்கேன்!

பார்றா! ப்ரியாவைப் பாக்க அவ்ளோ ஆசையா?

ஏம்மா இருக்கக் கூடாதா?

இருக்கலாண்ணா, தப்பேயில்லை.

சரி மைதிலி, கேக்கு வந்துடுச்சா? இப்ப கிளம்புனாதான் 5 மணிக்குள்ள வீட்டுக்கு போக முடியும். ப்ரியா வீட்டுக்கு வர 6.30 ஆயிடும். அதுக்குள்ள சின்ன ஏற்பாடு பண்ண முடியும்!

எல்லாம் ரெடிண்ணா! ஈசியா டெகரேட் பண்ற அயிட்டம்ஸ் வாங்கிட்டேன், ஃப்ரஸ்ஸா இருக்கனும்னு, 3.30 மணிக்கு மேல கேக்கு கொண்டு வரச் சொல்லியிருந்தேன், அதுவும் இப்பதான் வந்துது. நீங்க, ப்ரியா கூட இருக்குற ஃபோட்டோசை, சும்மா டேப் போட்டு ஒட்டாம, கொஞ்சம் டிசைனா ஒட்டலாம்னு, அந்த ஐடம்சும் ரெடியா இருக்கு. நான் 30 நிமிஷத்துல, நீங்க சொன்ன லைட் டெக்கரேஷனை செஞ்சு கொடுத்திட்டு, நான் வீட்டுக்கு கெளம்பிடுவேன்!

ஏன் மைதிலி, இவ்ளோவும் பண்ணிட்டு கேக் கட் பண்ணதுக்கப்புறம் போலாம்ல?

நமக்கு எதுக்குப்பா, உங்க சாபம்லாம், இது உங்க கல்யாண நாள். சார் வேற, 2 நாள் கழிச்சு ஊர்ல இருந்து வரீங்க. இதுல நான் எதுக்கு கரடி மாதிரி?

ஹா ஹா, சரி இப்டியே பேசிட்டிருந்தா போதுமா? நான் பார்க்கிங்லதான் இருக்கேன். நீ சீக்கிரம் வர வேணாமா? இதுலியே லேட் பண்ணிடுவ போல?

அண்ணே, ஒரு 30 நிமிஷம் ஆகும் பரவாயில்லையா? கடைசி நேரத்துல மேனேஜர் வேலை கொடுத்துட்டாரு?!

இன்னும் 30 நிமிஷமா? ஐய்யய்யோ!

நான் என்னண்ணா பண்றது?!

கடுப்பாக இருந்தாலும், மைதிலியிடம் காட்ட மனம் விரும்பவில்லை. பெருமூச்சு விட்ட படியே, சரி மைதிலி நீ சீக்கிரம் முடிச்சிட்டு வா. நான் கார்ல வெயிட் பண்றேன். பை!

2 Comments

  1. சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அந்த
    நாய்கள் வச்சு செய்யனும்

  2. Raji un msg waiting maa

Comments are closed.