உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Part 1 250

அதெல்லாம் ஒண்ணுமில்லை, இன்னிக்கு உங்க கல்யாண நாள் இல்லையா?! இதுக்காக, நீங்க எவ்ளோ மெனக்கெட்டீங்க. சின்னச் சின்ன விஷயம்னாலும், ப்ரியாவுக்காக எவ்ளோ பாத்து செய்யுறீங்க?! அதைப் பாத்ததும் எனக்குச் சந்தோஷமா இருக்குது!

இதுதான் மைதிலி! அவள் குரலில் மெல்லிய ஏக்கம் இருந்தது! ஆனால் கொஞ்சமும் பொறாமை இல்லை. எனக்கு தெரியும், அவளது மண வாழ்வில், அவளது உணர்வுகள் பெரிதாக மதிக்கப் படவில்லை என்று.

சட்டென்று சுதாரித்த அவள், ஹல்லோ, லேட்டாகும்னு சொன்னப்ப, ஃபீல் பண்ணிட்டு, இப்ப கேள்வி கேட்டே லேட் பண்றீங்க. சீக்கிரம் வண்டியை எடுங்க!

வேளச்சேரி அவுட்டரில் இருந்த அபார்ட்மெண்ட்டை அடைந்த போது மணி சரியாக 5.
என்னிடம் ஒரு சாவி இருந்தது! லக்கேஜையெல்லாம் பிறகு எடுத்துக் கொள்ளலாம் என்று கேக்கினை மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டைத் திறந்து மெதுவாக உள்ளே நுழைந்தோம். உள்ளே நுழைந்ததுமே, இருவருக்குமே தெரிந்து விட்டது. ப்ரியா ஏற்கனவே வந்துவிட்டாள் என்று! ஹாலில் இருந்த சோஃபாவில் அவளது லாப்டாப் இருந்தது. பக்கத்திலேயே அவளது ஹேண்ட்பேகும்!

எனக்கு கொஞ்சம் பாவமாகக் கூட இருந்தது. பாவம் ரொம்ப எதிர்பார்த்திருப்பாள். கடுப்பில் சீக்கிரம் ஆஃபிசிலிருந்து வந்திருக்கலாம். பரவாயில்லை டெகரேட் செய்யாவிட்டாலும், கேக் கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்து விடலாம் என்றெண்ணி, மைதிலியிடம் சத்தம் செய்யாதே என்று சைகை செய்தேன்.

அவளும் தலையாட்ட, நான் ப்ரியாவைத் தேடி எங்கள் பெட்ரூமுக்கு சென்றேன். எங்களுடையது 3 பெட்ரூம் ஃப்ளாட். நான் வேலைக்குப் போக ஆரம்பித்து 10 வருடங்கள் ஆகிறது. ஆல்ரெடி, ஊரில் நல்ல வெல் டு டூ, ஏறக்குறைய 8 வருடங்கள் ஆன்சைட்டில் வேலை, இப்பொழுதும் மிடில் மேனேஜ்மெண்ட்டில், நல்ல சம்பளம். ஆகையால் பணத்திற்கு பஞ்சமேயில்லை. கல்யாணத்திற்கு முன்பே, நான் அந்த வீட்டை வாங்கியிருந்தாலும், எங்களது பெட்ரூமாக, கடைசி ரூமை தேர்ந்தெடுத்தது கூட ப்ரியாதான்.

3 பெட்ரூம்களும் ஓரளவு ஒரே சைஸ் என்றாலும்., கடைசி ரூம் ஏனோ மிகவும் உள்ளே இருப்பது போல் தோன்றும் எனக்கு. ஆனால், ப்ரியாவிற்கு அதுதான் ப்ரைவசி என்று அதை அடம்பிடித்து தேர்ந்தெடுத்தாள். நானும் விட்டு விட்டேன்!

பெட்ரூம் முழுதாக சாத்தப்படவில்லை. ஒரு வேளை தூங்கிக் கொண்டிருக்கிறாளோ என்று எட்டிப் பார்த்த என்னை, யாரோ செருப்பால் அடித்தது போல் இருந்தது!

நினைத்தது போல் ப்ரியா தூங்கிக் கொண்டுதான் இருந்தாள். ஆனால், தனியாக அல்ல, மைதிலியின் கணவன் ப்ரேமுடன்!

அதை விட முக்கியம், இருவரது உடம்பிலும் வெறும் ஜட்டி மட்டுமே இருந்தது. ப்ரியாவின் முலைகளின் மேல் ப்ரேமின் கைகள் இருந்தது. இருவரது ஆடைகளும் கீழே சிதறிக் கிடந்தது.

இருவர் இருந்த நிலையும் மிகத் தெளிவாகச் சொல்லியது, அவர்களுக்கு இது புதிதல்ல என்று!

ECR ரோட்டில், கடலோரத்தில், நானும் மைதிலியும் உட்கார்ந்திருந்தோம். அவளது கண்களில் சாரை சாரையாகக் கண்ணீர். அவளைச் சமாதானப் படுத்த எந்த முயற்சியும் நானும் எடுக்க வில்லை. சொல்லப்போனால், நான் என்ன நினைக்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை!

கடலுக்கும் எங்களுக்கும் அதிக இடைவெளி இல்லை. அழுது கொண்டிருந்த மைதிலி, திடீரென எழுந்து கடலை நோக்கி ஓட ஆரம்பித்தாள்! அதிர்ச்சியில் இருந்த நான், உடனே சுதாரித்துக் கொண்டேன். கடலில் மிக உள்ளே செல்லும் முன் அவளை பிடித்து விட்டேன்.

விடுங்க என்னை, விடுங்க! என்று கதறி அழுதாள்!

2 Comments

  1. சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அந்த
    நாய்கள் வச்சு செய்யனும்

  2. Raji un msg waiting maa

Comments are closed.