உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Part 1 250

நானும் எவ்வளவோ பொறூத்து பாத்துட்டேன், ப்ரியா திருந்துவான்னு! ஆனா, அவள்லாம் என்னிக்கும் திருந்தாத ஜென்மம்னு புரிஞ்சிடுச்சி! எனக்கு ப்ரேமையும் அவ்வளவா புடிக்காது! ஆரம்பத்துல ப்ரியாவுக்காக அவனை பொறுத்துகிட்டு இருந்தேன். ஆனா, கடைசி ஒரு வருஷமா அவனை பொறுத்துகிட்டது உனக்காகத்தான் மைதிலி. அவன் உன்கிட்ட நடந்துகிட்ட முறையெல்லாம் தெரிஞ்சும், நீயே கம்முனு இருந்தாலும், அவனை நான் பொறுத்துகிட்டதுக்கு காரணம், அவன்கிட்ட சண்டைக்கு போயிட்டா, உனக்கு நான் எந்த ஹெல்ப்பும் பண்ண முடியாதேன்னுதான். நீயே, என்கிட்ட மட்டுந்தான், அப்பப்பனாச்சும், மனசு விட்டு ஏதாச்சும் சொல்ற. அதுவும் இல்லாம போயிடுச்சின்னா??? அதான் கண்டுக்காம இருந்தேன். ஆனா, இனி பொறுக்க முடியாது!

மைதிலி அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தாலும், அவளுக்காக பொறுத்துக்கொண்டதாய் சொன்னதும், அவளது கண்கள் விரிந்தது! மனதில் ஏதோ புது இதம் பரவியது!

இனியும் பொறுக்க மாட்டேன் மைதிலி! அவிங்க என்னை இளிச்சவாயன்னு நினைச்சுகிட்டாங்க. இனி விடமாட்டேன்…

என் வார்த்தைகளில் இருந்த கோபத்தில் மைதிலிக்கே சற்று பயம் வந்தது! பயத்திலேயே கேட்டாள், என்ன பண்ணப் போறீங்க? அவிங்களை கொல்லப் போறீங்களா?

நானும் முதலில் அப்படி நினைத்தவந்தானே! அதனால் எனக்கு லேசாக சிரிப்பு வந்தது! கொன்னுட்டு, நான் போயி ஜெயில்ல உக்காந்துக்கனுமா? கண்டவங்களுக்காக, இன்னமும் நான் கஷ்டப்படனுமா?

நான் அப்படி கேட்டதும், மைதிலி பெருமூச்சு விட்டாள்! அப்பா, இப்பதான் எனக்கும் நிம்மதியா இருக்கு! எங்க நீங்க அதுமாதிரி பண்ணிடுவீங்களோன்னு பயந்தே போயிட்டேன் என்றாள்.

எனக்கு மைதிலியிடம் தெரிய வேண்டியது இன்னும் சில இருந்தது! அதனால் வேகமாக கேட்டேன்! ஏன், உன் புருஷன் உயிருக்கு ஆபத்துன்னு ஃபீல் பண்றியா மைதிலி?

அவள் டக்கென்று அடிபட்ட ஒரு பார்வையை என்னை நோக்கி வீசினாள். நீங்களா இப்படி பேசுறீங்க என்று! இருந்தாலும், மெதுவாகச் சொன்னாள், நானும் மனுஷி தாண்ணா! எனக்கும் சுய மரியாதை இருக்கு! இனி, அவன் என் புருஷன் கிடையாது! சின்ன இடைவெளி விட்டவள், தொடர்ந்தாள், நான் ஃபீல் பண்ணது, இவங்களை கொன்னு, இன்னும் உங்க வாழ்க்கையை வீணக்கிக்கனுமான்னு, உங்களுக்காக அண்ணா!

எனக்கே ஒரு மாதிரி ஆகி விட்டது! ச்சே, யார் மேலயோ இருக்கிற கடுப்பை, இவகிட்ட காமிக்கிறேனே என நொந்தவாறே, சாரி மைதிலி! எனக்கு நீ இன்னும் என்ன நினைக்கிறன்னு புரியலை, அதைத் தெரிஞ்சிக்கதான் அப்பிடி பேசிட்டேன்!

அதை நேரடியாகவே கேட்டிருக்கலாம்ண்ணா என்று சொன்னவள், நான் தலை குனிந்து இருந்ததைப் பார்த்தவுடன், சரி விடுங்க, என்ன ப்ளான்னு சொல்லுங்க என்றாள்.

நான் சில முடிவுகளை எடுத்திருக்கேன் மைதிலி! அதைப்பத்தி உன் ஒப்பீனியனும், உனக்கு ப்ளான் ஓகேன்னா, உன் ஒத்துழைப்பும் வேணும்!

கண்டிப்பாண்ணா, என்னான்னு சொல்லுங்க!

அதுக்கு முன்னாடி என் கேள்விக்கு பதில் சொல்லு. இனி உன் வாழ்க்கை எப்படி? நாளை ப்ரேம் மன்னிப்பு கேட்டா, அவனோடு சேர்ந்து வாழப்போறியா? உன் முடிவு என்ன?

வேகமாக வந்தது மைதிலியின் பதில். இனியும் அவனோடவா? வாய்ப்பே இல்லை. எங்க வாழ்க்கை பெருசா சொல்லிக்கிற மாதிரி இல்லைன்னாலும், எங்க அப்பா பாத்த மாப்பிள்ளைன்னுதான் பொறுத்துகிட்டேன். சின்ன வயசுலியே அம்மா போனாலும், அவ்ளோ வேலையிலியும் என்னை வளத்தவர். அவர்கிட்ட போயி, நீங்க பாத்து கட்டி வெச்ச மாப்பிள்ளை சரியில்லைப்பான்னு நின்னா, உசிரையே விட்டுடுவாருன்னுதான் பொறுத்துகிட்டேன்.

மைதிலி மேலும் தொடர்ந்தாள், ரெண்டாவது அவன் பண்ணதை எல்லாம், அனுபவிச்சவிங்களுக்குதான் வலி தெரியும். வெளிய சொன்னா, இது ஒரு காரணமான்னு இருக்கும். அவிங்கம்மாவே ஒரு தடவை அவன் என்ன அடிச்சு கொடுமைப் படுத்துறானான்னு கேட்டாங்க.

அவன் பண்ணதுக்கு, அடிச்சிருந்தா கூட பரவாயில்லை. மரியாதை இல்லாம நடத்துறது, என்னை வேலைக்காரி மாதிரி ட்ரீட் பண்றது, என்னை கலர் கம்மினு நக்கல் அடிக்கிறது, என்னமோ அமெரிக்கால பொறந்த மாதிரி என்னை பட்டிக்காடுன்னு சொல்றது, அவன் கலருக்கும், ஸ்டைலுக்கும், படிப்புக்கும் நான் மாட்ச் இல்லைன்னு திரும்பத் திரும்ப சொல்றதுன்னு சொல்லிட்டே போகலாம். இத்தனைக்கும் அவன் பேமெண்ட் சீட், நான் மெரிட்! நானா, அவனை கல்யாணம் பண்ணிக்கோன்னு கேட்டேன். அப்ப அவிங்க அப்பாம்மாகிட்ட காசுக்காக மண்டையை ஆட்டிட்டு, கல்யாணத்துக்கு அப்புறம் என்கிட்ட மாட்ச் இல்லைன்னு எதுக்கு பேசனும்? அதுவும் என்கிட்டவே சொல்லுவான், காசு மட்டும் இல்லாட்டி அவனை மாதிரி அழகன் எனக்கு கிடைச்சிருக்காதாம்! இது எல்லாத்தையும் கூட பொறுத்துக்கிடேன். ஆனா, அதுக்கும் மேல ஒண்ணு பண்ணுவான் பாருங்க…இவ்வளவு நேரம் வெடித்து குமுறியவள், திடீரென உடைந்து அழ ஆரம்பித்தாள்.

அவள் சொன்ன எல்லாமே, ஏற்கனவே நான் அறிந்ததுதான் என்றாலும், அவள் மனக் குமுறல்கள் வெளிவருவது நல்லது என்று அமைதியாக இருந்த நான், அவள் அழுததைப் பார்த்தவுடன், தாங்க முடியவில்லை. அதையும் தாண்டி எனக்கு தோன்றிய கேள்வி, இன்னும் என்ன அனுபவிச்சிருக்கா? என்னிடம் சொன்னதில்லையே?

அதுக்கும் மேல என்ன மைதிலி? என்ன பண்ணுவான் அவன்? கோவமாக வந்தது என் வார்த்தைகள்!

கொஞ்ச நேரம் அழுதவள், மெல்ல நார்மலானாள்! ஒண்ணுமில்லைண்ணா, உங்க ப்ளானைச் சொல்லுங்க!

அவளையே அமைதியாகப் பார்த்த என் கண்கள் கேட்ட கேள்வி மைதிலிக்கும் புரிந்தது!

என் முகம் பார்ப்பதை தவிர்த்து தலை குனிந்தவள், தொடர்ந்து அவளையே நான் பார்க்கவும், எங்கோ பார்த்த படி மெல்லச் சொன்னாள், எல்லாத்துக்கும் மேல ஒண்ணு சொல்லுவாண்ணா, படுக்கைல, எல்லாத்தையும் முடிச்சிட்டு, என் கூட, அவனுக்கு பெருசா திருப்தியா இல்லைன்னு சொல்லுவாண்ணா…

எனக்கு மிகப் பெரும் அதிர்ச்சி. கன்னா பின்னாவென்று கோபம் வந்தது. அவர்களைப் பழி வாங்கும் உணர்ச்சி பெருகியது!

கோபமாகவே சொன்னேன், என் ப்ளான் கேட்டீல்ல?! என் ப்ளான், அவிங்களைப் பழிவாங்கனும்ங்கிறதுதான்!

அதான் எப்படின்னு கேக்குறேண்ணா

2 Comments

  1. சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அந்த
    நாய்கள் வச்சு செய்யனும்

  2. Raji un msg waiting maa

Comments are closed.