உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Part 1 250

முள்ளை முள்ளாலத்தான் எடுக்கனும்!

நான் சொன்னது என்ன என்று புரியாமல் கொஞ்ச நேரம் முழித்தவள், யோசனையில், அவளது கண்கள் பெரிதானது. ஏதோ ஒன்றை புரிந்து கொண்ட, அவள், என்னைப் பார்த்த பார்வையில் வலி, வேதனை, கோபம், வருத்தம் எல்லாம் கலந்த ஒரு உணர்வு இருந்தது.

நீங்களாண்ணா, இப்பிடி சொல்றது? இப்படிச் சொல்ல எப்பிடிண்ணா உங்களுக்கு மனசு வந்தது?

இல்லை மைதிலி நான் என்ன சொல்றேன்னா…

பேசாதீங்கண்ணா, உங்களை எப்பிடி நினைச்சிருந்தேன். எவ்ளோ உசரத்துல வெச்சிருந்தேன். சொல்லப் போனா, உங்களை மாதிரி ஒரு புருஷன் எனக்கு வந்திருக்கக் கூடாதான்னு நான் ஏங்கியிருக்கேன். ஆனா, நீங்க போயி் இப்படி…

இல்லை, மைதிலி நீ தப்பா புரிஞ்சிகிட்ட…

பின்ன, நீங்க சொன்னதுக்கு என்னண்ணா அர்த்தம்? முள்ளை முள்ளால எடுக்கலாம்ன்னா, அவிங்களை மாதிரியே நாமும் கள்ள உறவு வெச்சுக்கலாம்னு சொல்றீங்களா?

அவளையே, நான் பார்த்துக் கொண்டிருக்க, அவள் இன்னும் தொடர்ந்தாள். பழிவாங்கலாம்ன்னீங்க. ஓகே. ஆனா, அவிங்களை மாதிரி நாமும் செஞ்சா, அப்புறம் அவிங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? ஒருவேளை நாம் அப்பிடி பண்ணாலும், அவிங்களுக்கு அது சாதகம்தானே, அதைக் கூட நீங்க யோசிக்கலியா? இதுக்கு நீங்க என்னை சாகவே உட்டிருக்கலாம்ண்ணா!

இவ்வளவு நேரம் அவள் என்னிடம் உரிமையாய் காட்டிய கோபத்தை ரசித்தவன், கடைசியில் அவள் மீண்டும் சாவைப் பற்றி பேசியவுடன், எனக்கு கோபம் வந்தது. பேசி முடிச்சிட்டியா? இல்லை இன்னும் இருக்கா?

எனது கோபத்தில் ஏதோ நியாயம் இருப்பதை உணர்ந்தவள், சட்டென்று அமைதியானாள். எங்கோ பார்த்த படி கேட்டாள்,

பின்ன, ஏண்ணா அப்பிடிச் சொன்னீங்க?

நான் அப்பிடிச் சொன்னேனா??? நான் சொன்னது வார்த்தைகள்தான்… நீதான் அதுக்கு வேற அர்த்தம் கொடுத்துகிட்ட!

என்னைத் திரும்பி பார்த்தவளின் கண்கள் மலர்ந்தது! வேறு சேரில் உட்கார்ந்திருந்தவள், சட்டென்று எழுந்து என்னருகே மண்டி போட்டவள், சாரிண்ணா, வேற யாரு சொல்லியிருந்தாலும் அப்படி பேசியிருக்க மாட்டேன். நீங்க அப்பிடி பேசினதால, உணர்ச்சி வசப்படுட்டேன். சாரி. இப்ப, சொல்லுங்க என்ன ப்ளான்னு!

அவளை எழுப்பி, என்னருகே என் சோஃபாவில் உட்கார வைத்தவன், இப்பவும் சொல்றேன், முள்ளை முள்ளாலத்தான் எடுக்கனும் என்று சொல்லி இடைவெளி விட்டு அவளைப் பார்த்தேன்.

இந்த முறை அவள் சுதாரித்துக் கொண்டவள், என்னையும் புரிந்து கொண்டாள். சிரித்துக் கொண்டே, இன்னும் விளக்கமாச் சொல்லுங்க என்றாள்!

இங்க பாரு, என்கிட்ட இன்னமும் முழுத் திட்டமும் இல்லை. பாதிதான் ரெடி… ரெண்டு பேரையும் ஒரே டைம்ல பழி வாங்க முடியாது. முதல்ல ப்ரேம், அப்புறந்தான் ப்ரியா. ப்ரியாவை முதல்ல டார்கெட் பண்ணா, ப்ரேம் சுதாரிச்சுக்குவான். அப்புறம் அவனை பழி வாங்க முடியாது. அது கூட பிரச்சினையில்லை. ஆனா, அவன் ஷார்ப் ஆயிட்டானா, உனக்கு ஏதாவது ஆபத்து வரலாம். அதுனால, முத டார்கெட்டு அவன் தான். தென் ப்ரியா. என்று சொல்லியவன், மெல்ல என் திட்டத்தை விவரித்தேன்.

திட்டம் அவளுக்கும் ஓகே என்பதை அவள் முகமே சொல்லியது. எல்லாவற்றையும் சொன்ன பின், கேட்டாள். அப்ப நெக்ஸ்ட் ஸ்டெப் என்ன?

நாம என்ன செய்யுறதுக்கும் முன்னாடி, அவிங்களுக்கு எதிரா நிறைய ஆதாரம் வேணும். அதுக்குதான், முந்தா நேத்தே, மும்பைல இருந்து வந்தா மாதிரி வீட்டுக்கு போயிட்டாளும், ரெண்டு நாளா லீவ் போட்டு சில வேலைகள் செஞ்சிருக்கேன்!

2 Comments

  1. சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அந்த
    நாய்கள் வச்சு செய்யனும்

  2. Raji un msg waiting maa

Comments are closed.