இந்த வீட்டின் உரிமையாளர் 3 100

நான் சென்றதும் அவர் என் பக்கம் திரும்பி மேடம் நீங்க தான் நித்தியாவா நவீன் என்பவரின் மனைவியா உங்க மேலே ஒரு புகார் உங்க கணவர் குடுத்திருக்கிறாரே அவர் இருக்கிறாரா என்று கேள்விகளை அடுக்க நான் எல்லா கேள்விகளுக்கும் ஆம் இல்லை தெரியாது என்று மட்டும் பதில் சொன்னேன். அவர் மேடம் இப்படி பேசினா பிறகு தீவிர விசாரணைக்கு ஸ்டேஷன் அழைத்து போக வேண்டி இருக்கும் என்று மிரட்ட. ரோஷன் என் பாதுகாப்புக்கு வந்து சார் அது தான் புகார் வாபஸ் வாங்கியாச்சே அப்புறம் என்ன விசாரணை என்று நடுவே பூந்து பதில் சொல்ல அந்த ஆள் சார் நீங யாரு மேடமுக்கு உறவா இல்லை நவீனுக்கு உறவா என்று ரோஷனை மடக்க ரோஷன் சார் நான் வேணும்னா ஸ்டேஷன் வரேன் அங்கே வச்சு கேள்வி கேட்டுக்கோங்க என்றான். அந்த ஆள் என் மேலேயே குறியாக சார் இது நவீன் என்பவர் அவர் மனைவி பற்றி குடுத்த புகார் அது இன்னும் திரும்பி பெற்று கொள்ள படவில்லை அதனால் எங்க விசாரணை எங்க வசதிப்படி தான் இருக்கும் நீங்க குறுக்கே வந்தா உங்களை அரசு அதிகாரியை வேலை செய்ய தடுக்கிறாய் என்று கேஸ் போட்டு உள்ளே தள்ளி விடுவேன் அதனால் வாயை மூடி இருங்க.

ரோஷன் என் அருகே வந்து நித்து நான் இங்கே இருந்தால் தேவையில்லாமல் உனக்கு ஆதரவாக பேச வேண்டி இருக்கும் இந்த ஆள் அதையே வில்லங்கமாக்க முயற்சிப்பான் என்றதும் ரோஷனும் சென்று விட்டால் தனியாக என்னால் சம்மாளிக்க முடியாது என்று தெரிந்து அவன் கையை பிடித்து கொண்டு ரோஷன் நீ இங்கேயே இரு எனக்கு பயமாக இருக்கு என்றேன். உண்மையில் ரோஷன் நடத்தும் நாடகத்தின் கரு பொருளே அது தானே நித்தியா தன்னை வெளியே துரத்த கூடாது தான் இருப்பதே அவளை பாதுக்காக்கவும் உறுதுணையாக இருக்கவும் தான் என்று அவளை நம்ப வைக்க தானே இப்படி ஒரு போலி இன்ஸ்பெக்டரை வரவழைத்தது. இதெல்லாம் நேற்று இரவு நித்தியா ரோஷனை ஹாலில் இருக்க விட்டு தன்னுடைய அறைக்கு சென்று கதவை அடைத்து கொண்டதும் ரோஷனுக்கு உதித்த ஒரு வழி முறை. நித்தியா இந்த நிமிடம் அவனிடம் சரண்டர் என்று தெரிந்து கொண்டவன் அவள் காதில் சரி நான் இந்த ஆளை பணம் குடுத்து சம்மாளிக்க பார்க்கிறேன் என்றான்.

ரோஷன் என்னை படுக்கை அறைக்கு இழுத்து செல்ல ஹாலில் இன்ஸ்பெக்டர் என்ன மிஸ்டர் நான் இங்கே இருக்கும் போதே அவங்களை படுக்கை அறைக்கு கூட்டி போகிறாய் அப்போ நவீன் சார் குடுத்த புகார் உண்மை தானா ரெண்டு பேருக்கும் கள்ள தொடர்பு இருக்கா என்று கேட்க எனக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. அப்போ நவீன் புகார் செய்ததே எனக்கும் ரோஷனுக்கும் தொடர்பு என்ற நிலையில் தானா வெளியே இன்ஸ்பெக்டர் பேசி கொண்டிருந்தார்.

1 Comment

  1. Next part mng lanthu waiting

Comments are closed.