இடை அழகி மேடம் சங்கீதா 14 83

அருகே John சம்பத்தின் தோளில் அவனது இரும்பு கைகளை போட்டு அங்கிருக்கும் கூட்டத்துக்கு நண்பர்கள் நடந்துசெல்வதுபோல நடந்து அவன் எங்கும் ஓடாமலிருக்க அவனை ஒட்டி வந்தான். நால்வரும் அந்த அரண்மனை வீதியின் ஓரத்தில் இருக்கும் ஒரு பெரிய வேன் ஒன்றில் ஏறி.. அமர்ந்தார்கள்.. உள்ளே இவர்களின் பிடியில் இருக்கும் சம்பத் என்ன செய்வதென்று தெரியாமல் எப்படியாவது எதாவது ஒரு கதவை திறந்து ஓட முயற்சிக்கும்போது ஜான் அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட.. இன்னும் திமுறிக்கொண்டு தப்பிக்க முயற்சித்தான்.. ஆனால் பலன் இல்லை.. என்னதான் காட்டானாக இருந்தாலும், நம்மூர் காட்டான்களுக்கெல்லாம் ஜாம்பவான் போல இருக்கும் ஜானின் பிடியில் அவன் கைகள் பின்புறம் முறுக்கி மடக்கி வைக்கப்பட்டு இருந்தது.. அவன் எவ்வளவு முயற்சி செய்தும் ஒரு இன்ச் கூட அவனுடைய பிடியில் இருந்து நகர முடியவில்லை.. கருப்பு நிற கண்ணாடியை கொண்ட நான்கு கதவுகளும் மூடப்படிருந்ததில் உள்ளே என்ன நடக்கிறதென்று யாருக்கும் தெரியவில்லை.. சம்பத்தின் சத்தமான கூச்சலும் காரின் உள்ளேயே அடங்கியது.. “எதுக்கு என்ன கொல்ல வந்த?” – ராகவ் அவன் கண்களை உத்து பார்த்து கேள்வி எழுப்பினான்.. “அது எனக்கு துரை குடுத்த வேல… அவ்வளோதான்..” – வசமாக மாட்டி இருந்தாலும் மூர்கமான முகத்தோடு திமிரான குரலில்தான் பதில் வந்தது சம்பத்திடமிருந்து … “ஆஸ்பெத்ரியில குமார எதுக்கு துரை கொல்லனும்?…. அன்னிக்கி ராத்திரி அங்க ஒரு வார்டன் டிரஸ்ல காம்பவுண்ட் சுவர் ஏறி குதிச்சி ஓடினது நீதான?..” சம்பத்திடம் ஒரு நீண்ட மௌனம்… ராகவ் ஜானைப் பார்த்து மெதுவாக கண் அசைக்க.. சம்பத்தின் கைகளை கொஞ்சம் அழுத்தமாக முறுக்கினான் ஜான்.. “ஆஹ்ஹ்ஹ்ஹ..” வலியில் கதறினான் சம்பத்.. “சொல்லுறியா?.. இல்ல… உன் கைய முருக்கியே மொத்தமா எடுத்துட சொல்லவா?….” “சொல்றேன் சொல்றேன்..” என்று வலி தாங்காமல் மேலும் தொடர்ந்தான்.. “துரைக்கு ஆஸ்பெத்ரியில குமாரை கொல்லுறதுக்கு நான் தான் எல்லா ஏற்பாடும் பண்ணி குடுத்தேன்.. ஆனா அவன் எதுக்கு குமாரை கொல்லணும்னு எனக்கு தெரியாது..” “ஒரு நாள் நடு ராத்திரி என் கார் பின் புற கண்ணாடியில கல் எறிந்சதும் நீதான?..” என்றான் ராகவ்.. “ஆமா.. எதையுமே நான் செய்யல.. என்னை செய்ய வெச்சாங்க..” “ராகவிடம் ஒரு மௌனம்.. எதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்.. சில வினாடிகள் கழித்து.. “எதுக்கு துரை ராத்திரி நேரத்துல குமார கொல்லுறதை நீ ஒழிஞ்சி இருந்து வீடியோ எடுத்து வெச்சிருக்க?” சம்பத்திடம் ஒரு அதிர்ச்சி.. அந்த வீடியோ பற்றி எப்படி ராகவுக்கு தெரியுமென்று எண்ணி அவன் முகம் வேர்த்தது.. “அதெப்படி உனக்கு தெரியும்?.. எந்த வீடியோ பத்தி பேசுற?..” – என்று மீண்டும் எகிறினான் சம்பத்.. “உன் கைய திரும்பவும் முறிக்க வெக்காத…. சீக்கிரம் சொல்லு..” – என்று ஜானைப் பார்த்து ராகவ் மீண்டும் கண் அசைக்க.. ஜான் ஏதும் செய்வதற்குள் சொல்லிவிடலாம் என்று பேச ஆரம்பித்தான் சம்பத்.. “நான் துரை சொன்ன எந்த ஒரு விஷயத்துக்கும் மாட்டேன்னு சொன்னதில்ல.. ஆனா எனக்கு சரியான கூலி தர்றதா சொல்லி ஏமாத்திட்டான்.. அவன் கிட்ட இருந்து எனக்கு வர வேண்டிய பணத்தை வாங்குறது எப்படின்னு புரியல.. அப்போ அவனை மிரட்டுறதுக்கு எனக்கு ஏதாவது ஒரு விஷயம் தேவைப் பட்டுது.. அதுக்காக எடுத்து வெச்ச வீடியோதான் அது..” “இன்ட்ரஸ்டிங்.. ஹ்ம்ம்..” – மீண்டும் சற்று ஆழ்ந்து யோசித்தான் ராகவ்.. “அந்த மரத்துன்டு பத்தி உனக்கு எதாவது தெரியுமா?..” – இந்த கேள்விக்கு ரொம்ப ஆர்வமாக சம்பத்திடம் இருந்து பதிலை எதிர்பார்த்தான் ராகவ்.. “அது…” – என்று சம்பத் சொல்ல ஆரம்பிப்பதற்குள் ராகவின் செல்ஃபோன் சிணுங்கியது.. சங்கீதா நீண்ட நேரம் ஆகியும் ராகவ் எங்கிருக்கிறான் என்று தெரிந்துகொள்ள அழைத்திருக்கிறாள்.. “oh.. my goodness.. John.. my wife is coming towards this place.. I dont want her to see me.. so please have this bastard under your custody, I want to take him alive to India soon.. he is very important to me.. got it?” – என்று அவசரமாக சொல்லிவிட்டு ஜானின் கையில் ஒரு தொகையை குடுத்துவிட்டு அங்கிருந்து நழுவி வேறொரு பக்கமாக சென்று சங்கீதாவின் பின்னால் வந்து நின்றான் ராகவ்..“எங்கடா போயிட்ட பொற்கி.. எவ்வளோ நேரமா தேடிட்டு இருக்கேன்..?.. உனக்கு அக்கறையே இல்ல என் மேல.. போ..” என்று அவள் சிணுங்க.. அப்படியே அவள் உதடில் தன் உதடை பதித்து ப்ச் ப்ச் ப்ச் என்று லிப் கிஸ் செய்து பேசிக்கொண்டே இருந்த அவளது லிப்பை லாக் செய்தான் ராகவ்..

முத்தத்தில் ஆழ்ந்திருக்கும்போது சங்கீதாவின் பின் பக்கம் அந்த வேன் மெல்ல நகர்ந்து செல்வதைப் பார்த்தான்… அப்போது ராகவின் செல்லில் ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது.. “Dont worry, I will have him with me, come and take him whenever you can – John” என்ற மெசேஜ் பார்த்து சற்று தெம்படைந்து மீண்டும் தன் காதல் மகாராணி சராவுடன் இங்கிலாந்து மகாராணியின் அரண்மனையை சுத்தி பார்க்க பக்கிங்ஹம் பாலஸ் உள்ளே குஷியாக சென்றான் ராகவ்…. (இப்போது அதே நாள்….

2 Comments

  1. Next post please. Very superb…

  2. Next please 15

Comments are closed.