லைக்கு பின்னால் இருக்கும் ஓவியம் 2 74

“சரி வாங்கிட்டு வரேன்.. ”

“எப்போ வருவீங்க.” மீண்டும் ஆசையை அடக்க முடியாமல் கேட்டாள்….

“30 நிமிஷத்துல வரேன்பா சரியா ”

“ஹ்ம்ம் சரிங்க”

அசோக் வருகிறான் என்று தெரிந்ததும்.. அவள் மனம் உற்சாகத்தில் மிதக்க சோபாவில் இருந்து எழுந்து கிச்சன் நோக்கி சென்றாள். அவன்தான் சாப்பாடு வாங்கி வருகிறானே என்று மனம் மூளையில் அடிக்க…. அசோக் வரும்போது கொஞ்சம் அலங்காரம் செய்து அழகாக இருடி.. இப்படி எண்ணெய் வழியும் முகமும்.. வீங்கி போன விழிகளுமா இருக்காதே என அறிவுரை கூறியது

குளியலறை சென்று குளித்து புத்துணர்வோடு மாலையில் பூத்த மலராக வெளி வந்தாள்… உடலில் ஆடைகள் இல்லை என்றாலும்.. அங்கங்கே நின்ற நீர் திவலைகள் அவளது அங்கங்களை மறைக்க நினைத்து அவள் அழகை இன்னும் கூட்டியது…

நீர் திவலைகளை துடைத்துக்கொண்டு பிறந்த மேனியாக நின்ற அவள்… அசோக் தன்னை முதன் முதலாக பார்த்த புடவையை எடுத்து கட்டி கொள்ள ஆரம்பித்தாள்.. பாவாடையும் மேலாடையும் கட்டி புடவை புனைய ஆரம்பிக்க அசோக்கின் அழைப்பு மணி வாசலில் ஒலித்தது…

புடவையை அவசரமாக சரம் எடுத்து இடுப்பில் சொருகிக்கொண்டு முந்தனையை மேலே போட்டுக்கொண்டு.. வேகமாக ஓடினாள் அசோக்கை பார்க்க…

கதவை திறந்து அசோக்கை உள்ளே அழைக்க… அசோக் அவளை பார்த்தவுடன் திகைத்து நின்றான்…
இவள் டின்னர் வாங்கி வர சொன்னாளா அல்லது டின்னருக்கு வெளியே போக கேட்டாளா என்று…

“சீக்கிரம் உள்ளே வாங்க அசோக்.. எவ்ளோ நேரம் வாசலிலேயே நிப்பீங்க.. நான் வேற அரைகுறையா…”
சொல்லி நாக்கை கடித்து கொண்டாள்…. அவள் புடவை இருக்கும் நிலை கண்டு அசோக் உள்ளே வந்தான்… ஏனோ அவள் மேல் கோபம் இருந்தாலும் அவளின் புடவை அவன் மனதை அலை பாய வைத்தது..

கதவை மூடி விட்டு.. உள்ளே திரும்ப அர்ச்சனா அங்கேயே நின்று கொசுவத்தை மடித்து… அவள் வெள்ளை வயிறை காட்டி கொண்டு கொசுவத்தை உள்ளே சொருகும்போது தொப்புளும் லேசாக தெரிய அசோக்கிற்கு சகலமும் மறந்து அர்ச்சனாவின் அழகு மட்டுமே முழுதாக தெரிந்தது…

அசோக்கின் முகம் பார்த்த அர்ச்சனா இனி அப்டியே இருக்கட்டும் என்று முந்தானையை முழுதாக மூடாமல் விட்டாள்.. எல்லாம் அவன் பார்வைக்கு என்று..

“அசோக் ரொம்ப பசிக்குதுப்பா சாப்பிட என்ன வாங்கிட்டு வந்திருக்கே…”

“இதோ நீயே பாரு.. “