வழிமறியவள் – Part 47 29

EPISODE – சதிஷ் வேலையை ராஜினாமா செய்து இந்தியா வருகை

எல்லா பார்மாலிட்டிஸ் முடிச்சிட்டு தன் உடமைகளை பெற்று கொண்டு

வெளிய டாக்சி ஸ்டான்ட் வர சதீசுக்கு முழுசா ஒருமணி நேரம் போயிருந்தது.

வெளிய வந்த அவன் ஒரு டாக்சி அமர்த்தி வீட்டின் ஏரியாவை ஓட்டுனரிடம்

கூறிவிட்டு அமைதியாக வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சான்.

நாலு மாசத்துக்கு பிறகு தன் சொந்த பூமிக்கு வந்துருக்கான் சதிஷ்.

நான்கு மாதத்திற்கு முன்பு அவன் வரும்போது இருந்த மன நிலைமை வேற.

இப்பொது அவனுக்கு இருக்கும் மன நிலைமை வேற.

நான்கே மாதத்தில் அவன் வாழ்க்கை தலை கீழாக மாறி விட்டது.

வீட்டின் தலைவனாக அதிகாரம் செலுத்தி,

மனைவி மேல அன்பு செலுத்தி,

வாழ்க்கையை வாழ வேண்டிய சதிஷ்,

இப்போ, இன்றில் இருந்து அவன் ஒரு அடிமை வாழ்க்கை வாழ

தன்னையே அர்ப்பணித்து தன் மனசை

அதற்கு ஏற்றாற்போல மாற்றி

இன்று அந்த வாழ்க்கையை ஏற்று கொள்ள தாய் மண்ணில்

காலை வைத்து இருக்கிறான்.

எல்லா தப்பையும் செய்தவர்கள் அவனை சுற்றி இருக்கும் அனைவரும்………..
நல்லவர்கள்

அதற்கு தண்டனை சதிஷ் என்ற கெட்டவனுக்கு……..

என்ன உலகமடா இது.

என்ன சார், ரொம்ப நாள் கழிச்சி இந்தியா வந்துருக்கீங்களா

ஓட்டுனரின் கேள்வியில் கலைந்த சதிஷ்,

என்ன சொன்னீங்க

ஓட்டுநர் அதே கேள்வியை கேட்க

சதிஷ், ஆமாங்க

ஓட்டுநர், ரொம்ப சந்தோசமா இருக்குமில்லை சார்

சதிஷ், ஆமா,

உண்மையை சொல்லி அவர் மனசை கஷ்ட படுத்த சதிஷ் விரும்பல.

ஓட்டுநர், குழந்தை இருக்கா சார்.

சதிஷ், அவரின் கேள்வி யாரோ மண்டையில் அடித்தார் போல

உணர்ந்த சதீஷ்,

யோசிக்க ஆரம்பிச்சான்.

நாம் வெளி நாடு போகும் போது பவித்ராவுக்கு ஒரு குழந்தையை கொடுத்துட்டு

போயிருந்தா ஒரு வேலை இவ்வளவு பிரச்சனை வந்து இருக்காது.