பவி, வெவ்வே…………வெவ்வே………….
அவருக்கு பழிப்பு காண்பிச்சிட்டு வெளியில் வர
ஹசன், டேய், மெதுவா படி இறங்கு.
பவி, சரிங்க……. அவரை பார்த்துட்டு சிரிச்சிட்டு வெளியில் வந்தா.
வயித்தை புடிச்சிட்டு மெதுவா படி இறங்கி கீழ வந்த பவித்ரா
நேரா கிட்சன் போனா.
அங்கே இருந்த பெண்மணியிடம், சின்ன ஐயா
வந்துட்டு இருக்காங்க.
அவங்க வந்தா கீழ ரெண்டாவது ரூமுல நான் இருக்கேன், அவங்களை அங்கே வர
சொல்லுங்க.
பத்து நிமிஷம் கழிச்சி ரெண்டு ஜூஸ் கொண்டுட்டு வாங்க.
சரிங்கமா, புது முதலாளியின் கட்டளையை ஏற்று கொண்டார்.
பவித்ரா நடந்து அந்த ரூமிற்கு போய் கட்டிலில் உட்கார்ந்தா.
அங்கே,
சதீஷ் பவித்ராவிடம் பேசிட்டு அமைதியாக இருந்தான்.
அவன் வந்த டாக்சி மாநகரத்தின் ஜன தொகையினால்
தத்தளித்த டிராபிக்கை கஷ்ட பட்டு கடந்து கொண்டு இருந்தது.
சார் வீடு தெரியுமா இல்லை விசாரிக்கணுமா சார்.
டாக்சி ஓட்டுநர் குரல் இவனை கலைக்க
தெரியும் பா.
அந்த தெருவுக்கு போனா கண்டு பிடிச்சிடுவேன்.
ஓட்டுநர், சரிங்க சார்,
அரை மணி நேரம், ஜன சந்தடியில் நீந்தி,
ஒரு வழியாக டாக்சி அவன் சொன்ன தெருவுக்குள் நுழைய
சதிஷ் ஹசன் பங்களாவை அடையாளம் கண்டு கொண்டு
டாக்சி ஓட்டுனருக்கு தெரிய படுத்த
டாக்சி ஊர்ந்து கொண்டு நின்றது.
அவருக்கு பணத்தையும் ஒரு நன்றியையும் கொடுத்துட்டு
டாக்சி கிளம்புவதை வேடிக்கை பார்த்த சதிஷ்
பின்பு தான் தொலைத்த தன்னுடைய எதிர்காலத்தை
நம்பிக்கையுடன் தேடி
ஹசன் பங்களாவிற்குள் நுழைந்தான்.
தொடரும்