” ஏன்.. என்கூட அனுப்பினா என்ன.. ?”
” சே..சே.. ” உடனே சிரித்தான் ”அனுப்பறது பிரச்சினை இல்ல.”
” அப்பறம் வேற என்ன பிரச்சினை.. ?” அவள் மார்பில் இருந்த துப்பட்டா மெதுவாக சரிய.. ஒரு முனையை பிடித்து சுழற்றினாள். அவள் முகத்தில் லேசான வியர்வை அரும்புகள். அவளது திரண்ட மார்பகம் அவன் கவனத்தைக் கலைத்தது. அவளை குறுகுறுவெனப் பார்த்தான்.
மறுபடி கேட்டாள் சாந்தி.
” வேற என்ன பிரச்சினை பரத்.. ?”
” அது ஒத்து வராது..”
” ஏன். ?”
” அவ இருக்கட்டுங்க..! ஆமா நீங்க ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கலாமில்ல. ?”
” ஏன்.. ?” அவனைப் பார்த்தாள்.
” இல்ல.. இன்னும் சின்ன வயசுதான…?”
” ஒன்னே போதும்பா.. இந்த ஜென்மத்துக்கு..” சிரித்தாள்.
” பீலிங்.. இருக்குமில்ல.. ?”
” என்ன பீலிங்.. ?”
” எல்லாம்தான்.. ” அவன் ஒரு மாதிரி கோணலாக முகத்தை வைத்துக் கொண்டு இளித்தான்.
சாந்தி மெல்லப் புன்னகைத்தாள்.
” அதெல்லாம் பீல் பண்ற அளவுக்கு ஒண்ணும் இல்ல..”
” அப்போ.. இத்தனை அழகும் வேஸ்ட்டா.. ?”
அவன் பேச்சு திசை மாறுவது அவளுக்குப் புரிந்தது. அதற்கு மேலும் அவள்.. அவனுடன் பேசிக் கொண்டிருக்க விரும்பவில்லை.
‘ என்னையும் காளீஸ் மாதிரி நினைச்சுட்டானோ ? செரியான பொறுக்கியாதான் இருப்பான் போல.. ?’
” சரி.. பரத் நான் போறேன். பாக்யா வந்தான்னா நான் வந்துட்டு போனேனு சொல்லு..” என்று விட்டு வெளியே வந்து விட்டாள்.. !!
பாக்யா துணிகளை துவைத்துக் கொண்டு வீட்டுக்குப் போன போது வீட்டில் பரத் இல்லை. அவளுக்கு வீடு போனதுமே பசி எடுத்தது. துணிகளைக் காயப் போட்டுவிட்டு.. சாந்தி வீட்டுக்கு போகலாம் என்கிற எண்ணத்தில் புடவை கட்டிக் கொண்டு சாப்பி உட்கார்ந்தாள். அவள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே ராசு வந்தான்.! வெளியே நின்று.. உள்ளிருந்தவளை குனிந்து பார்த்தான்..!!
” என்ன மேடம்.. இப்பதான் சாப்பிடற மாதிரி இருக்கு.?”
” ஆமா சார். வாங்க சார் சாப்பிடலாம்.. ?”
” நல்லா சாப்பிடுங்க மேடம்..” என்று விட்டு அவள் அம்மா வீட்டுக்குப் போய் விட்டான்.
அவள் கையில் சாப்பாட்டுத் தட்டை எடுத்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு ஓடினாள். அவளது அம்மாவும் ராசுவும் பேச ஆரம்பித்திருந்தார்கள்.
” எப்படி இருக்க…?” ராசு பாக்யாவைக் கேட்டான்.
சிரித்தாள் ” அப்படியேதான் இருக்கேன்..”
அவளது அம்மா பாயை விரித்து விட்டாள். ராசு பாயில் உட்கார்ந்தான். பாக்யா அவன் பக்கத்தில் நெருக்கமாக உட்கார்ந்தாள். அம்மா காபி வைத்தாள். பாக்யாவும் சாப்பிட்டு விட்டு எழுந்து போய் தட்டைக் கழுவி வைத்து விட்டு வந்து மீண்டும் அவன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்..!!
ஒரு மணி நேரத்துக்கு மேல் ராசுவுடன் பேசிக் கொண்டிருந்தாள். சாந்தி வீட்டுக்கு நேரம் கிடைத்தால் போகலாம் என நினைத்தாள்..! மத்தியானம் ஆனபோது பரத் வீட்டுக்கு வந்தான்.! பாக்யா எழுந்து போனாள். !
” எங்க போன..?” என்று கேட்டாள்.
பரத் பேசவில்லை. ஏனோ அவன் முகம் உர்ரென்றிருந்தது.
” சாப்பிடறியா.?” அவனை இடித்துக் கொண்டு கேட்டாள்.
அவளைத் தள்ளி விட்டான். பாக்யா சிரித்தபடியே சொன்னாள்.
” ராசு வந்துருக்கான்..”
அவளை முறைத்தான்.
” ஏ.. இப்ப எதுக்கு மொறைக்கிறே..??” என்று கேட்டாள்.
அவன் விசுக்கென கீழே உட்கார்ந்தான். அவன் பக்கத்தில் மெதுவாக உட்கார்ந்தாள்.
”எங்க பாட்டிக்கு மறுபடி இன்னொரு கை வரதில்லையாம்… பாக்க போலாமா.. ?”
” அட ச்சீ.. சும்மா தொனதொனக்காத.. கொஞ்சம் வாய மூடு..” என்று எரிந்து விழுந்தான்.
அவளது மனசு கோணியது.
” ஏ.. இப்ப எதுக்கு இப்படி நாய் மாதிரி கத்தற.. ?”
‘பளீ ‘ ரென ஒரு அறை விட்டான்.
” வாயை மூடுறி.. முண்டை..” சத்தமாகக் கத்தினான். நிச்சயம் அது அவள் அம்மா வீட்டுக்கு கேட்டிருக்கும்.
” நாயே.. நான் முண்டையா..?” என அவள் எதிர்த்து கத்த.. அவன் மீண்டும் ஒரு அறை விட.. அது சண்டையாகிப் போனது. அடி வாங்கிய பாக்யா அழுதாள். சத்தம் கேட்டு ராசு வந்தான். உடனே பரத் வீட்டை விட்டு வெளியே போய் விட்டான்.!!
” ஏய்.. என்னாச்சுனு இப்ப சண்டை.. ?” ராசு கேட்டான்.
அழுது கொண்டிருந்தவள் கண்ணைத் துடைத்து மூக்கை உறிஞ்சினாள்.
”அவகூட என்ன சண்டையோ.. நாசமா போனவன் இங்க வந்து என்னை ஏர்றான்.. ”
” ஏய்.. என்ன வார்த்தை இது..?”
அவள் அழுகையை அடக்கினாள்.
” அடிச்சிட்டானா ?”
” ம்ம்…”
” நீதான் வாயடங்கி போறது..?”
” ஆமா அவன் அடிச்சா தப்பில்ல.. நான் மட்டும் பேசினா தப்பு.. ” என்று மூக்கை உறிஞ்சினாள்.
” சரி.. சரி.. வா..! அவன் வந்து அஞ்சு நிமிசம்கூட ஆகல.. அதுக்குள்ள சண்டை.. ” என்று அவள் கையைப் பிடித்து தூக்கி விட்டான்.
பாக்யா எழுந்து நின்று புடவையை இழுத்து சொருகினாள். அவள் இடுப்பை இறுக்கி.. கன்னத்தில் மட்டும் ஒரு முத்தம் கொடுத்தான் ராசு.
” என்னதான் வாழறியோ.. ??”
” நீ மூடு..” என்றாள். பரத் மேல் இருந்த ஆத்திரத்தில்.
” மூடிட்டேன் தாயி.. வா..” அவன் முன்னால் போனான்.
பாக்யா வீட்டைச் சாத்தி விட்டு அம்மா வீட்டுக்குப் போனாள். அவளது அம்மா வெளியில் வரவே இல்லை. இது கணவன் மனைவி சண்டை என்பதால்.. அனாவசியமாக வாய் விட விரும்புவதில்லை.!!
” நீ என்னடி கேட்ட அவன்கிட்ட.. ?” அம்மா கேட்டாள்.
நடந்ததை அப்படியே சொன்னாள். பின் ”இது என் மேல இருக்கற கோவம் இல்ல..! அவகிட்ட ஏதாவது பிரச்சினையா இருக்கும். அதான்.. இங்க வந்து என்னை அடிச்சிட்டு போறான். வரப்பவே அவன் மூஞ்சி நாய் மாதிரிதான் இருந்துச்சு..” என்றாள்.
” அப்படி இருக்கான்னு தெரிஞ்சா நீ கொஞ்சம் பேசாம இருக்க வேண்டியதுதான..?” என்றான் ராசு.
” ஏ.. சாப்பிட்டியானுகூட கேக்க வேண்டாமா.? அப்பறம் நீ வந்துருக்கேனு சொன்னேன். பாட்டிய பாக்க போலாமானு கேட்டேன். அவ்வளவுதான். அது பேசினது தப்பா.. ?”
அவளுக்கு அதன்பின் எதிலும் ஆர்வம் இல்லை. எதைப் பற்றியும் யோசிக்காமல் ராசு மடியில் தலை வைத்துப் படுத்து கண்களை மூடிக்கொண்டாள். ஆனால் அவள் மனசுக்குள் ஒரு வலி இருந்து கொண்டே இருந்தது ….. !!
மாலை நேரம். சூரியன் மேற்கில் மறையத் துவங்கியிருந்தான். பாக்யாவின் அம்மா மாலைச் சமையலைத் துவக்கியிருந்தாள்.
” சாப்பாடு செய்யலியாடி. ?” என்று பாக்யாவைக் கேட்டாள்.
இன்னும் படுத்துக் கொண்டிருந்தாள் பாக்யா. ஒரு தூக்கம் போட்டு எழுந்திருந்தாள். அவள் மனசு முழுக்க ஏதேதோ சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்தது.. !!
” காலைல செஞ்சதே இருக்கு..”