” நான்தான் சாகப் போறேன்..! நீ எதுக்கு என்கூட வரே.. ?”
” நீ சாகறதை பாக்க.. ”
” ஓ.. !!” என்றாள்.
அந்த ஒற்றையடிப் பாதையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவு நடந்திருப்பார்கள். அதே வழியில் போனால்.. வேறு வேறு ஊர்களுக்கு எல்லாம் பாதை வரும். இடையில் ஒரு சின்ன மலை மீது முருகன் கோவிலும் உண்டு. அந்த கோவில்வரை ஊர் பக்கம் சேராமல் ஒற்றைடபடிப் பாதையிலேயே போகலாம்.. !!
கொஞ்சம் தாமதமாக கிழக்கு வானில் நிலா உதயமாகிக் கொண்டிருந்தது. மேலும் சிறிது தூரம் நடந்தவள் நின்றாள்.
” கால் வலிக்குது.”
அவனும் நின்றான்.
” சாகறவளுக்கு அதெல்லாம் வலிக்க கூடாது ”
அவனைப் பார்த்தாள். மெல்லப் புன்னகைத்தாள். ஆனால் பேசவில்லை. அருகில் தெரிந்த ஒரு ஏரித் திட்டின் மீது போய் உட்கார்ந்தாள்.
” நெருஞ்சி முள் இருக்கும்.. பொச்சுல ஏத்தி ரத்தம் வர வெச்சிரும்..” என்றான் ராசு.
” ஹாஹா.” என்று வாய் விட்டு சிரித்து விட்டாள். ”பரவால்ல..”
அவனும் அவளுக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான். ஆனால் அவளைத் தொடாமல் சற்று இடைவெளி விட்டு உட்கார்ந்தான்.
” என் வாழ்க்கைல இனி நான் அனுபவிக்க என்ன இருக்கு. ?” என்று கேட்டாள்.
அவளைப் பார்த்தான். பெருமூச்சு விட்டான்.
” எல்லாத்தையும் அனுபவிச்சிட்டேன். புருஷன் கள்ள புருஷன் எல்லாமே.. !!”
” ம்.. அதுக்கு.. ??”
” இல்ல.. நான் செத்தாக்கூட.. என் ஆவி பேயா வந்து அலையாதில்ல.. ??”
” ஹ்ஹா. !” இப்போது அவன் வாய் விட்டு சிரித்தான் ”செத்துதான் பாரேன்..!!”
” போடா.. நீ கூட வந்து அதையும் கெடுத்துட்ட.. ! இப்ப சாக மாட்டேன். ஆனா.. அடுத்த டைம்.. செஞ்சாலும் செய்வேன்..!!”
” பெஸ்ட் ஆப் லக்.. !!”
” தேங்க் யூ.. !!”
” சரி.. இப்ப போலாமா.. ??”
” ஏ.. காலு வலிக்குதுனுதான உக்காந்திருக்கேன்.. ?”
அவன் அமைதியானான். கிழக்குப் பக்கம் திரும்பி நிலவைப் பார்த்தான். அவளும் பார்த்தாள். பின் அவள் கழுத்தில் இருந்த தாலியை கழற்றினாள்.
” இந்தா..” என்றாள்.
ராசு திரும்பி அவளைப் பார்த்தான்.
” என்ன.. ?”
” தாலி..”
” ஏன்.. ??”
” இது ஒண்ணுதான் இத்தனை பிரச்சினைக்கும் காரணம்..! இனி இது எனக்கு வேண்டாம். நான் அவன் கிட்ட மனசால சித்ரவதை ஆகறத விட.. எங்கப்பன் என்னை வெட்டி கொன்னாலும் பரவால்ல..!!” அவன் மடி மீது தாலியை தூக்கிப் போட்டாள்.
அவன் கையில் எடுத்துக் கொண்டு திகைப்பாக அவளைப் பார்த்தான்.
” என்ன குட்டிமா இதெல்லாம்.. ??”
” சத்தியமா முடியலடா என்னால..” அவள் குரல் உடைந்து அழுகை வந்தது. ”நான் சிரிச்சிட்டே பேசறதுனால.. விளையாட்டுக்கு சொல்றேனு நெனைச்சிட்டே இல்ல..?”
ராசு பேசவில்லை. அவளை வெறித்துப் பார்த்தான். மெல்ல அவன் பக்கம் நகர்ந்து அவன் மடியில் சரிந்து படுத்து அழுதாள். அவன் ஒன்றுமே சொல்லவில்லை. மெதுவாக அவளது முதுகை மட்டும் தடவிக் கொடுத்தான்.. !! ஒரு ஐந்து நிமிடம் அப்படியே அழுது கொண்டிருந்தவள் நிமிர்ந்து உட்கார்ந்தாள். மூக்கைச் சிந்தி.. முந்தானையால் முகத்தை துடைத்து விட்டுக் கேட்டாள்.
” இப்ப சொல்லு.. நான் என்ன பண்றது.. ??”
நிலா நன்றாக உதித்து விட்டது. மேலே வந்திருந்த நிலா வெளிச்சம் பரவலாகத் தெரிந்து கொண்டிருந்தது..!!
” சொல்லுடா.. நான் இப்ப என்ன பண்றது.. ??” மீண்டும் கேட்டாள் பாக்யா.
” இந்த தாலியை எடுத்து கழுத்துல மாட்டு..” என்று அமைதியாகவே சொன்னான்.
” அது வேண்டாம். தூக்கி போட்று..! வேற ஏதாவது சொல்லு..?”
அவளையே வெறித்துப் பார்த்தான்.
” என்னை சாகச் சொன்னாலும் சரிதான். நான் செத்தர்றேன். அதை நீ சொல்லு..” அலட்டிக் கொள்ளாமல் பேசினாள். ”அவனுக்கு பொண்டாட்டியா இல்ல. உனக்கு அக்கா மகளா.. இல்லேன்னா உனக்கு ஒரு வெப்பாட்டியா.. ??”
” அட ச்சீ.. நாயே..! இப்படி பேசினே.. காத பாத்து ஒண்ணு விட்றுவேன்.”
” விடு..!!”
மீண்டும் சிறிது நேரம் இரண்டு பேரும் பேசிக் கொள்ளாமல் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.
” போலாமா.. ??” ராசு கேட்டான்.
” எங்க. ?”
” வீட்டுக்கு.. ?”
அவள் பேசவில்லை. அமைதியாக இருந்தாள்.
” உன் புருஷன்கிட்ட நான் பேசறேன் வா..” என்றான்.
” உன்கிட்ட ஒண்ணு சொல்லனும்..”
” என்ன.. ??”
” நீ வந்தா.. அவன் ஏன் என்னை விடறதில்ல தெரியுமா.. ?”
” ஏன்.. ??”
” நான் உன்னை வெச்சிருக்கேன்னு மனசார நம்பறான்..”
” எ.. எப்படி சொல்ற.. ?”
” மப்புல அன்னிக்கு கொஞ்சம் ஒளறுனான. எனக்கு அதுல வருத்தமே இல்ல. என்னை நேரா கேட்றுந்தா ஆமானுகூட சொல்லிருப்பேன்..”
” என்கிட்ட நீ இதை சொல்லவே இல்ல.. ?”
” உன்னைப் பத்தி எனக்கு தெரியும். அதான் சொல்லல. ! அதில்லாம.. உன் கூட அந்த மாதிரி இருக்கறதுல எனக்கு வெக்கமும் இல்ல..!!”
ராசு வாயடைத்துப் போயிருந்தான். அவன் தோளுடன் ஒட்டி உட்கார்ந்தாள். அவன் கையை எடுத்து விரல்களை கோர்த்துக் கொண்டாள்.
” இத இன்னும் நான் அம்மாகிட்ட கூட சொல்லல..”
” கஷ்டமா இருக்குடி. ! இது என் தப்புதான்.. நான் ஒதுங்கியிருக்கனும்.. ”
” இனி நீ ஒதுங்கினாலும்.. நான் விட மாட்டேன். நீ ஒரு கல்யாணத்தை பண்ணிட்டு வேணா என்னை விட்டு ஒதுங்கிக்கோ.. ! அவனுக்காக இல்ல.. உனக்காக..! உன் வாழ்க்கையாச்சும் நல்லா இருக்கனும் இல்ல..! நீ ஒதுங்கிருந்தாலும் நான் நல்லா வாழ்ந்திருக்க மாட்டேன்.. !!”
” பெரிய மனுஷி மாதிரி பேசுற..?”
” நீ என்னமோ சொல்லிக்க. ஆனா இதான் உண்மை..!!”
மீண்டும் அமைதி. கொஞ்சம் ஆழமான சிந்தனை.
” பைய்யா..”