ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப – Part 5 22

பாகம் இரண்டை ஆரம்பித்திருக்கிறேன்.. !! பாக்யாவின் திருமணத்துக்கு பிறகு.. அவளது பெற்றோருக்கிடையில் இருந்த மனஸ்தாபங்கள் குறைந்து.. சண்டையின்றி வாழத் துவங்கினர்…!! பாக்யாவின் திருமண வாழ்வும் மகிழ்ச்சியாகவே துவங்கியது. மாமியார் வீட்டில் பாதி நாட்களும்.. தன் தாய் வீட்டில் மீதி நாட்களுமாக அவளது இரவு பகல்களை கழித்து வந்தாள்.. !!

முதல் மாதம் கடந்த நிலையில் வழக்கமான மாமியார்.. மருமகள் பிரச்சினை ஆரம்பித்து விட்டது.. வீடு கூட்டிப் பெருக்குவதில் தொடங்கி.. சமைப்பதுவரை அனைத்திலும் மோதல்கள் உருவாகின.. !! நேரடியாக அவள் மாமியாருடன் மோதிக் கொள்ளவில்லை என்றாலும் மனஸ்தாபத்தை குறைத்துக் கொள்ள இயலவில்லை..!! அவள் கணவன் வழக்காமான கணவனை போல.. அவன் அம்மா பையனாகவே இருந்தான்.. !! அதனால் பெரும்பாலும் பாக்யா தன் அம்மா வீட்டிலேயே இருந்து வந்தாள்.. !! இரண்டாவது மாதத்தில் நேரடியாக வாய்ப் பேச்சு வந்து.. கோபித்துக் கொண்டு தன் தாய் வீட்டுக்கு வந்து விட்டாள்.. !! அவள் தாய் வீடு வந்த பிறகு அவளது கணவன் அவளைப் பார்க்க மாலை நேரங்களில் மட்டுமே வந்து போனான். மற்றபடி அவளுடன் தங்கவில்லை.. !!

இரண்டாவது முறை வந்தபோது கேட்டான் அவள் கணவன் பரத்..!!
” என்கூட வரப் போறியா இல்லையா.. ??”

” என்னால வர முடியாது.. !!” என்று திட்டவட்டமாகவே சொன்னாள் ”உங்கம்மாளுக்கு என்னைக் கண்டாலே ஆகறதில்ல..!!”

” மாமியான்னா அப்படித்தான். நீதான் அனுசரிச்சு போகனும்.. !!”

” ஏன் உன் தங்கச்சியும்தான் இருக்குறா.. அவளை அந்த மாதிரி நொட்டை சொல்ல சொல்லேன் பாக்கலாம்.. ? அவள்ளாம் ஒரு வேலையும் செய்யுறதில்ல. நான் எல்லா வேலையும் செய்யுறேன்.. ஆனா.. நான்தான் உங்கம்மாளுக்கு ஆகாதவ.. !!”

” அப்ப வர மாட்டியா.. ??”

” ம்கூம்.. !! நீ வேணா இங்க வந்துரு.. !!”

” என்னாலயும் இங்க வந்து இருக்க முடியாது..! எங்கம்மா என்னை புடிச்சு ஏத்தும்..! நீ உங்கப்பாகிட்ட சொல்லி தனிக்குடித்தனத்துக்கு ஏற்பாடு பண்ண சொல்லு.. !!”

” ம்.. ம்ம். அதெல்லாம் சொல்லிட்டேன். இப்ப கைல காசில்லேன்னாங்க..!! அதுக்கு மொத வீடு பாக்கனுமில்ல..? ஊருக்குள்ள ஏதாவது வீடு இருந்தா நீயே பாரு.. !!”

” சரி ” எனச் சொல்லிவிட்டுப் போய் விட்டான்.. !!

கணவன் இல்லாமல் இரவில் தூங்குவது அவளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. கடந்த இரண்டு இரவுகளும் அவளுக்கு நீளமான ராத்திரிகளாகக் கடந்திருந்தன..!! மூன்றாவது நாள்..!! இரவில் சரியான தூக்கம் இல்லாததால்.. காலை உணவை முடித்துக் கொண்டு பாயை விரித்துப் படுத்தவள் அப்படியே தூங்கிப் போனாள்.. !!

” அலோ.. மேடம்.. !!” எனத் தட்டி எழுப்பப் பட்டு.. தூக்கம் கலைந்தாள் பாக்யா. ! கண் விழித்துப் பார்த்தவள் உடனே வியந்தாள்..!! ராசு நின்றிருந்தான்.. !!

” யேய்.. நாயீ.. !!” தடபுடலாக படுக்கையிலிருந்து எழுந்தாள்.

” பரவால்ல படுத்துக்க.. !!”

” எப்ப வந்தே.. ??” எழுந்து உட்கார்ந்தாள்.

” ஆச்சு.. அது ஒரு இருபத்தி…. ”

” ஏ.. நாயி.. ! நான் அதை கேக்கலே.. !!” எனச் சிரித்தாள். ”உக்காரு.. !!”

”ம்.. ம்ம்.. எப்படி இருக்க புதுப்பொண்ணே.. ??”

” ரெண்டு மாசமாச்சு. இன்னும் புதுப் பொண்ணாவே இருக்க முடியுமா.. ??” என்றவாறு எழுந்து நழுவிய புடவைத் தலைப்பை தூக்கி பிடித்தபடி போய் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள்.

வாங்கிக் குடித்தான் ராசு.. !! அவனையே ஆவலாகப் பார்த்தாள். உண்மையில் அவனைஇப்போது பார்த்ததில் அவள் மனசு பூரித்துப் போனது..!! அவனை அப்படியே இறுக்கிக் கட்டிக் கொள்ள வேண்டும் போலிருந்தது..!! உடனே ஆரம்பிக்க வேண்டாம் என தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டிருந்தாள்.. !!