அதலாம் இல்ல போன வட்டி என் புருஷன மட்டும் தனியா வச்சு ஏதோ சொன்னிங்க இப்ப எங்க அக்காவ தனியா இருக்க சொல்றிங்க எதுவும் எனக்கோ என் குழந்தைக்கோ பிரச்சனைன்னா அத என் கிட்டயும் சொல்லுங்க அத தாங்கிகிற சக்தி எனக்கு இருக்கு வீணா மறைக்கதிங்க என்றாள் .யே ஒரு பிரச்னையும் இல்ல சும்மாதான் என்று டாக்டர் அவளை சமாதனபடுத்தினார் .
அதலாம் முடியாது நானும் இருப்பேன் நீங்க என் கிட்ட உண்மைய சொல்லி ஆகணும் என்றாள் .
ஓகே உக்காரு உன் கிட்டயே சொல்றேன் .உன் ஹாஸ்பண்ட் இப்ப உன்ன நல்லா பாத்துகிறாரா என்றார் .எஸ் எஸ் நல்லாத்தான் பாத்துக்கிறார் என்றாள் .போன மாசத்துக்கும் இந்த மாசத்துக்கும் உன் ஹாஸ்பண்ட் கிட்ட எதுவும் வித்தியாசம் தெரியுதா என்றார் ,அப்படி எதுவும் எனக்கு தெரியல என்றாள் .
போன மாசம் உன் ஹெல்த் கொஞ்சம் வீக்கா இருந்துச்சு நான் கூட பயந்தேன் அப்புறம் உன் ஹாஸ்பண்ட் கிட்ட உன்னையே நல்லா பாத்துக்க சொன்னேன் அதுனாளவோ என்னவோ இந்த மாசம் உன் ஹெல்த் நல்லா இம்புருவ் ஆகி இருக்கு அதான் உங்க அக்கா கிட்ட சொல்லி உன் புருஷன முடிஞ்சா இன்னும் உன் கூடவெ இருந்து உன்னையே அக்கறையா பாத்துக்க சொல்றதுக்கு தான் இருக்க சொன்னேன் அதுக்குள்ள நீ என்னமோன்னு நினச்சு கிட்டு கத்த ஆரம்பிச்சுட்ட என்றார் .
ஐ அம் சாரி டாக்டர் என்றார் .பரவல பாத்து இரு மாண்டே உன் ஹாஸ்பண்ட் வந்து மறக்காம ஸ்கேன் ரிப்போர்ட் வாங்கிட்டு போ சொல்லு என்றார் .ஓகே டாக்டர் என்று சொல்லி விட்டு இருவரும் வெளியேறினார்கள் .என்னடி உன் ஆள்கிட்ட எதுவும் வித்தியாசமா தெரியுதா என்றாள் .அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல ஏன்னா போன மாசத்துக்கு இந்த மாசம் கொஞ்சம் கம்மியா திட்டுனான் அவளவுதான் என்றாள் .
அப்ப உன் மேல அவனுக்கு ஆச வந்துருச்சுன்னு தானே அர்த்தம் என்றார் .ம்ம் அப்படி எல்லாம் இல்ல போன வட்டி அவன் கூட வந்தப்ப டாக்டர் எதாச்சும் சொல்லி இருக்கணும்
எதுவும் எனக்கு ஆச்சுனா அப்புறம் போலிஸ் கிட்ட போயிடுவோம்னு பயந்து திட்டாம இருக்கணும் அப்புறம் அவனாவது மாறுறது ஆச்சு என்று சொல்லி கொண்டே சுவாதி வேறு எங்கோ பார்த்தாள் .அதலாம் இல்லடி அவனுக்கு உன் மேல ஆச வந்து இருக்கணும் என்றாள் .ஒரு நிமிஷம் இருங்க அக்கா அந்த பொண்ண எங்கயோ பாத்த மாதிரி இருக்கு என்றாள் .எந்த பொண்ணுடி என்றாள் அஞ்சலி .அதோ அந்த ரிசப்சன்ல உக்காந்து இருக்கே அந்த பொண்ணு என்றாள் .
நம்ம ஹாஸ்டல் பொண்ணு இல்லன்னு மட்டும் எனக்கு தெரியும் என்றாள் அஞ்சலி .இங்கயே இருங்க நான் போயி அவள கிட்ட பாத்துட்டு வந்துறேன் என்று அவள் அந்த பெண்ணிடிம் வந்தாள் . வந்து அவளை கூப்பிட்டாள் . excuse மீ என்றாள் எஸ் என்றாள் . உங்களோ எங்கயோ பாத்த மாதிரி இருக்கே என்றாள் .
உங்கள எங்கயோ பாத்த மாதிரி இருக்கே என்று சுவாதி கேட்க இல்லங்க எனக்கு நீங்க யாருன்னே தெரியல என்றாள் பூஜா ,இல்லையே எனக்கு உங்கள எங்கயோ பாத்த மாதிரி இருக்கு என்றாள் சுவாதி மறுபடியும் .ப்ளிஸ் நீங்க வேற யாரோன்னு நினச்சு பேசுறிங்க நான் எங்க அக்காவ டாக்டர் கிட்ட காட்டனும் சோ கொஞ்சம் விலகிகிரெங்கலா நான் போகணும் என்று சொல்லிவிட்டு அவள் சுவாதியை கடந்து வேகமாக டாக்டரை பார்க்க போனாள் .
என்னடி போகலாமா என்று அஞ்சலி கேட்க இருங்க அக்கா அந்த பொண்ணு எனக்கு தெரிஞ்ச பொண்ணு நான் கொஞ்ச நேரம் இருந்து பேசிட்டு டேக்சி பிடிச்சு போயிக்கிறேன் என்றாள் .
ஒழுங்கா பாத்து போயிடுவியா இல்ல நானும் வேணும்னா நீங்க ரெண்டு பேரும் பேசுற வரைக்கும் இருந்து வெயிட் பண்ணவா என்றாள் .இல்லக்கா நீங்க போயிட்டு வாங்க அந்த பொண்ணு கிட்ட வொர்க் சம்பந்தமா பேசணும் நான் வேலைய வேற விட்டு நின்னுட்டேலே அத பத்தி கொஞ்சம் பேசணும் அதுனால ரொம்ப நேரம் ஆகும் என்றாள் .
ஓகேடா தங்கம் பாத்து இரு ஒரு வேல டேக்சி எதுவும் கிடைக்காட்டி அக்காவுக்கு போன் அடி நான் நீ ஏங்க இருக்கியோ அங்க வந்து உன்னையே பிக் ஆப் பண்ணிக்கிறேன் ஓகேவா என்றாள் ,ஓகே சுயர் அக்கா என்றாள் .
பின் சுவாதி அங்குள்ள சேரில் உக்காந்து யோசித்தாள் .யாரு இந்த பொண்ணு எங்கயோ பாத்த மாதிரி இருக்கே என்று நன்கு யோசித்தாள் ,ம்ம் ஞாபகம் வந்துருச்சு ஒரு நாள் நடு ராத்திரி நம்ம வாந்தி எடுக்குறத பாத்து விக்கி கூட கத்தி சண்ட போட்டு போன பொண்ணு தான் இவ இவ பேர் கூட என்னமோ சொன்னாலே ம்ம் பூஜா
வரட்டும் பேசுவோம் என்று நினைத்து கொண்டு உக்காந்து கொண்டு இருந்தாள் .பின் ஒரு அரை மணி நேரம் கழித்து பூஜா மட்டும் அங்கு உள்ள மருந்து வாங்கும் இடத்திற்கு வந்தாள் .
உடனே சுவாதி மெல்ல அவள் அருகே போயி ஹாய் பூஜா என்றாள் .அவள் ஒன்னும் சொல்ல வில்லை .ஹலோ மேடம் பூஜா தானா உங்க பேரு என்றாள் சிரித்து கொண்டே .அவள் மிகவும் சலிப்போடு உங்களுக்கு இப்ப என்னங்க வேணும் ஏன் இப்படி தொந்தரவு பண்றீங்க என்னையே என்றாள் .