என் காதலி Part 11 72

யே விடு அத பத்தியே பேசி நம்ம ரெண்டு பேரும் ஏன் சண்ட போடணும் என்றான் .நீ சொல்றதும் சரிதான் ஓகே நீ சாப்பிட்டியா என்றாள் .நான் பார்ட்டில சாப்பிட்டேன் என்றான் .ஓகே அப்ப போயி நல்லா ரெஸ்ட் எடு என்றாள் .ஓகே என்று சொல்லிவிட்டு விக்கி எழுந்தான் .அதை பார்த்த சுவாதி வெயிட் வெயிட் அந்த காயத்தோட நடக்காத நான் வரேன் பொறு என்று சொல்லி கொண்டு சுவாதி அவன் அருகே வந்தாள் .

அவள் அவன் அருகே வந்ததும் மீண்டும் அவள் கண்களை அருகே பார்த்தான் . அவள் என் தோள்ல கை போட்டுக்கோ என்றாள் .ம்ம் வேணாம் இருக்கட்டும் என்றான் .யே இப்பதான் கட்டு போட்டு இருக்கு நடந்தேன்னா காயம் பெருசா ஆகிடும் அதனால என் தோள்ல கை போட்டுக்கோ என்றாள் .அது வந்து வந்து என்று அவன் திணறி கொண்டு இருக்க சுவாதி அவன் கையை எடுத்து அவள் தோள் மீது போட்டு கொண்டாள் .யே ஆஸ்பத்திரில காயம் வந்து இதே மாதிரி நடக்க முடியாம இருக்கப்ப நர்ஸ் தோள கை போட்டு நடக்க மாட்ட அந்த மாதிரி நினச்சுக்கோடா என்றாள் .

பின் அவன் அவளை பார்த்து கொண்டு மட்டும் இருக்க அவள் அவன் இடுப்பில் கை வைத்து அவனை கட்டியாக பிடித்து கொண்டாள் .அவன் கை அவள் தோள் பட்டையை பிடித்து இருந்தது ..இருவரும் மெல்ல நடந்தனர் .சுவாதி அவன் ரூமை திறந்து அவனை அவன் ரூம் கட்டிலில் கொண்டு போயி படுக்க வைத்தாள் . விக்கி அது வரை அவளையே பார்த்து கொண்டு இருந்தான் .பின் அவள் அவனை கட்டிலில் உக்கார வைத்ததும் அவன் வேற பக்கம் திரும்பி கொண்டான் .

சரி விக்கி நல்லா தூங்கு நான் வரேன் என்று சொல்லி விட்டு போனாள் . விக்கிக்கு அவள் முகத்தை மீண்டும் பார்க்க வேண்டும் போல இருந்தது . அதனால் ஆ வலிக்குது என்று சும்மா வலிப்பது போல கத்தினான் .உடனே அவள் திரும்பி பார்த்தாள் .என்னடா வலிக்குதா என்றாள் .ஆமான்னு சொல்லுவோம் அப்பதான் அவ கிட்ட வந்து காய்த்த பாக்கலாம் நம்மளும் அவள சைட் அடிக்கலாம் என அவன் மனம் சொல்ல ஆமா வலிக்குது என்றான் .

கொஞ்ச நேரம் மருந்து போட்ருக்கதலா எரியும் அப்புறம் சரி ஆகிடும் நீ கண்ண மூடி தூங்கு என்று சொல்லி விட்டு கதவை சாத்திவிட்டு போனாள் ம்ம் எல்லாம் வேஸ்ட் என்று தலையணையை தூக்கி எறிந்தான் .அது மேலே போயி திரும்ப அவன் புண்ணிலே விழ ஐயோ என்று கத்தினான் .நீ என்ன கத்துனாலும் அவ வர மாட்டா தூங்கு என்றது மனம் .அதுவும் சரி தான் என்று தலையணை எடுத்து விட்டு தூங்க போனான் .

ஆனால் அவனுக்கு வலி ஒரு பக்கம் இருந்தாலும் சுவாதி அக்கறையோடு அவனுக்கு மருந்து போடும் போது அவள் கூட தோளில் கை போட்டு வந்த போது அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்தது என்று எல்லாவற்றையும் யோசித்து கொண்டு இருந்தான் .என்ன கண்ணுடா இவ கண்ணு என் உமா கண்ணுக்கு அப்புறம் நான் பாத்த பவர் புல்லானா அழகான கண்ணு . அதுக்குன்னு இவ உமா ஆகிட மாட்டா எஸ் கண்டிப்பா உமா மட்டும் தான் என்னைக்குமே என் காதலி

இவ இல்ல வேற எவளும் அந்த இடத்த நிரப்ப முடியாது .என் உடம்ப வேணும்னா பல பொண்ணுகளோட பங்கு போட்டு அனுபிவிப்பேன் .ஆனா என் மனசுல இன்னும் உமா மட்டும் தான் இருக்கா என்று நினைத்து கொண்டு இருந்த போது சுவாதி கதவை தட்டினாள் .கதவை தட்டி கொண்டே விக்கி வரலாமா என்றாள் .ம்ம் வா என்றான் .பின் அவள் ஒரு தம்பலரில் பால் கொண்டு வந்தாள் .இவ என்ன பாரஸ்ட் நைட்க்கா வரா பால் கொண்டு வரா என்று நினைத்தான் .

நான் எதுக்கு வரலாமான்னு கேட்டேனா நீ எப்ப பாத்தாலும் உன் ரூம்ல mastrubert பண்ணி கிட்டே இருக்க அதுக்கு தான் தட்டிட்டு வந்தேன் இல்லாட்டி நீ ரொம்ப கோப படுவ என்றாள் .ம்ம் நான் என்ன பண்ண எல்லா என் நேரம் நீ வந்ததுல இருந்தே என்று பேசி கொண்டு இருந்த அவனை தடுத்து போதும் நான் வந்ததுல இருந்து சார்க்கு நேரம் சரி இல்ல அதானே இத கேட்டு கேட்டு எனக்கு அலுத்து போச்சு சார் வேற எதாச்சும் வார்த்த கண்டுபிடிச்சு திட்டுங்க என்றாள் சுவாதி .சரி இந்தா பால குடி தூக்கம் நல்லா வரும் தூங்கு என்றாள்

அதை வாங்கி கொண்டு கேட்டான் யே நான் மறுபடியும் கேக்குறேன் என்னால எதுவும் காரியம் ஆகணுமா என்றான் . ஒன்னும் இல்ல பேசாம படுத்து தூங்கு என்றாள் .பின் அவள் போயி விட்டாள் . இவன் அதை குடித்து விட்டு தூங்கினான் . பின் காலையில் சுவாதி வந்து மீண்டும் அவன் ரூம் கதவை தட்டினாள் அவன் நொண்டி கொண்டே திறந்தான் .என்ன சுவாதி என்றான் . என்ன இன்னைக்கு சனி கிழமை எங்கயும் போகலையா என்றாள் .இல்ல காயம் இருக்குல அதான் என்றான் .

ஓகே நான் ஆஸ்பத்திரி வரைக்கும் போயிட்டு வரேன் வீட்ல சாப்பாடு இருக்கு சாப்பிட்டு ரெஸ்ட் எடு என்றாள் . நான் வேணும்னா கார்ல கொண்டு வந்து விடவா என்றான் .எதுக்கு அப்புறம் இதுக்காக தான் நான் உன்னயே நேத்து கவனிச்சேன் நீ நினைக்கவா என்றாள் .எ அப்படி எல்லாம் இல்ல என்றான் .யே நானும் சும்மாதான் சொன்னேன் நான் அஞ்சலி அக்காவ வர சொல்லி இருந்தேன் அவங்களும் வெளிய இருக்காங்க நான் அவங்களோடவே போயிடுறேன் ஓகே நான் வரட்டா என்று சொல்லி விட்டு போனாள் .