கோவம் என் மேல.. கவலை உங்க மேல.. 81

ஆனந்தமாக ஒரு குளியல் போட bathroom க்குள் சென்றேன்..
உடைகளை களைந்து, வெற்றுடம்புடன் குளிர்ந்த shower ல் நிற்க.. என் மேனி பூ போல் பூத்துக்குலுங்கியது போல் உணர்ந்தேன். பூவில் விழும் பனித்துளி போல், என் மேனியில் விழுந்த நீர்த்துளிகள், விழ மனமில்லாமல் ஒட்டி இருந்தன.
புது nighty ம் உள்ளாடைகளும் அணிந்து கொண்டு. இரவு உணவு சாப்பிட போனோம். அவர் track pants அணிந்திருந்தார். எதேச்சையாக அமர்வதுபோல், பேசிக்கொண்டே அவர் அருகில் அமர்ந்துகொண்டேன். குளிர்ந்த நீரில் குளித்ததாலோ இல்லை அவர் அருகில் அமர்ந்திருப்பதாலோ, என் மேனியெங்கும் மயிர் கூச்செறிந்தது. அவ்வப்போது என்ன சாப்பிடுகிறார் எப்படி சாப்பிடுகிறார் என்று அவர் தட்டையும் பார்த்துக்கொள்வேன். அப்படியாக சாப்பிட்டு கை கழுவி முடித்தும் அவர் பக்கத்திலிருந்து எழும்ப மனமில்லை.
இந்த சம்ப்ரதாயம் எல்லாம் இல்லாமல் இருந்திருந்தால், எங்களை யாராலும் பிரித்து வைத்திருக்க முடியாதே என்று தோன்றியது.
எல்லாரும் தூங்க செல்லலாம் என்று எழும்ப, குட் நைட் காவ்யா என்று சொல்லி கையில் ஒரு பாக்ஸ் ஐ திணித்து செய்கை காட்டினான். நானும் கையில் மூடி வைத்துக்கொண்டு அறைக்குள் சென்று பார்த்தேன். ஒரு அழகான வெள்ளிக்கொலுசு. ‘இப்போதே காலில் அணிந்து கொள்ளலாமா’ என்று யோசித்தேன்… ‘அம்மா ஏதென்று கேட்பாள், இப்போ வேண்டாம்’ என்று தோன்றியது.
செல்போன் ல் மெசேஜ் வந்தது. “குட் நைட் சிரிப்பழகி” வெட்கம் என்னை பிடுங்கி தின்றது.
“குட் நைட் சிரிப்பழகா” என்று பதில் அனுப்பினேன்.
“ஐ லவ் யு சிரிப்பழகி ”.
பார்த்ததும்.. மனசுக்குள் ஆயிரம் கலர் கலர் பட்டாம்பூச்சிகள்… வெட்கத்தில் கன்னம் பெரிதாகி வலித்தது.
பக்கத்தில் படுத்திருந்த அம்மா முகத்தில் வெளிச்சம் விழாமலிருக்க. ஒருக்களித்து படுத்தேன்.
nighty க்குள் மார்பை குத்திய தாலியை வெளியே எடுத்து போட்டேன். தாலியை பார்க்க பார்க்க எனக்கு அவன் மேல் அன்பு பெருக்கெடுத்து. தாலியை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டேன்.
அவர் அனுப்பிய மெசேஜ் வந்து மூன்று நிமிடங்கள் ஆகியிருந்தன.
சந்தோஷமாக பதில் அனுப்பினேன், “ஐ லவ் யு சிரிப்பழகா”
“தூங்கிட்டியா” என்றார்.
“இல்லை படுத்திருக்கேன்” என்றேன்.
“சரி ஓகே குட் நைட்.” என்றார்.
“எப்போ எழும்புவீங்க” என்றேன்..
“5.30 க்கு ”
நாளை காலை அவருக்கு surprise கொடுக்கவேண்டும் என்று முடிவெடுத்தேன்..
அனால் கடவுள் அதற்கும் மேலே எழுதி வைத்திருப்பார் என்று அந்த இரவில் எனக்கு தெரியவில்லை.

நாளை அவனை எப்படி எப்படி surprise பண்ணலாம் என்று யோசித்துக்கொண்டே என்னை அறியாமல் தூங்கிப்போனேன். விடியலின் ஆச்சர்யங்கள் இருட்டுக்கு புரிவதில்லை கன்னியின் கனவுகள் சுகமாக இருக்கும் வரை. காலை 4.30 மணிக்கே அலாரம் வைத்து, அம்மாவுக்கு கேட்காமல் இருக்க vibration ல் வைத்திருந்தேன்.
குளித்து முடித்து அவன் தந்த சேலையை உடுத்தி அவன் முழிக்கும் போது சென்று surprise தரலாம் என்று எண்ணி இருந்தேன்.
துண்டையும் சேலையையும் எடுத்துக்கொண்டு bathroom சென்று மெல்ல தாழிட்டேன். இரவில் பிரஷர் க்கு மாத்திரை எடுத்துக்கொண்ட அம்மா கண்ணயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள். வெந்நீர் இல்லை, குளிர்ந்த நீரிலேயே குளியல் போடவேண்டும்.
ஒரு mug தண்ணீர் எடுத்து காலில் ஊற்றிப் பார்த்தேன். நல்ல குளிராக இருந்தது.
குளிக்க வேண்டுமா என்று திரும்பவும் மனதில் கேள்வி எழுந்தது.
‘உன்னவன் வாங்கித்தந்த சேலையை அணிந்து அவனை பார்க்கச் செல்லும்போது, சுத்தமாகவும் அழகாகவும் மணம் வீசவேன்டாமா? காவ்யா’ என்று ஏற்கனவே அவனுடன் காதலில் விழுந்துவிட்ட காவ்யா உள் மனதில் கண்டிஷன் போட, சிரித்துக்கொண்டே nighty யுடன் பாவாடையையும் உயர்த்தி முழங்கால் வரை தண்ணீர் ஊற்றிக்கொண்டேன்.
என் வழு வழு கால்களில், தன் குளிரை போக்கியது தண்ணீர். கொஞ்சம் நம்பிக்கை வர, nighty ஐயும் உள்ளாடைகளையும் கழற்றி, hanger ல் போட்டு, முன் தொடைகளையும் பின் தொடைகளையும் குளிர்ந்த நீரால் நனைத்தேன். பற்கள் நடுங்கி தாளமிட, ‘இனி பொறுத்து பயனில்லை’ என்று, மடக் மடக் என்று இரண்டு mug நீரை, கழுத்து வழியாக இடப்பக்கமும், வலப்பக்கமும் ஊற்ற, கொஞ்சம் நடுங்கி சமநிலைக்கு வந்தாலும், காம்புகள் விறைத்து திண்மையாகி ஒரு வித அவஸ்தையை தந்தன.
இன்னும் நான்கு ஐந்து mug நீரை தலை வழியாக ஊற்றி தலைமுடியை மீரா ஷாம்பூ போட்டு கழுவினேன். உடல் ஓரளவுக்கு குளிருக்கு பக்குவப்பட்டிருந்தது. அக்குளை தொட்டு பார்த்தேன், முடி முளைக்கும் சாத்தியங்கள் தென்படாததால் விட்டுவிட்டேன். என் பெண்மையை தொட்டு பார்க்க, லேசாக முரு முரு முடியின் நுனி வெளிவரதுவங்கியிருந்தது.
ஐயர் சாந்திமுகூர்தத்திற்கு குறித்த தேதி நாளையே. நாளை shave பண்ணிக்கலாம் என்று விட்டுவிட்டேன்.. dove soap போட்டு குளித்து, துண்டால் உடல் ஒற்றி எடுத்தேன், ஈரத்தாலியை துண்டில் ஒற்றி எடுக்க என்னவனின் குறும்பான முகம் என்னுள்ளே வந்து போனது. உள்ளடைகளையும், ஜாக்கெட் பாவாடைகளையும் அணிந்துகொண்டு, சேலையை ஒருவாறு சுற்றி பெட்ரூம் க்குள் வந்தேன். அம்மா இன்னும் கண் விழிக்கவில்லை. இப்போதே 5.10 am ஆகியிருந்தது. சேலையை கட்டும்போது, இடுப்பு பக்கம் கொஞ்சம் loose ஆக விட்டு கண்ணாடியை பார்த்தேன். ‘ஹ்ம்ம்.. பார்த்தால் பார்த்துவிட்டு போகட்டும்’ என்று சிரித்துக்கொண்டேன். புது சேலையில் கொசுவம் மடக்க பெரும்பாடு படவேண்டியதாகிவிட்டது. இத்தனையும் செய்து முடிக்கவே 5.30 am ஆகி இருந்தது. அவசரமாக அவன் வாங்கித்தந்த கொலுசை தேடி எடுத்து அணிந்துகொண்டேன்.
ஐந்து நிமிடத்தில் coffee போட்டு, மெல்ல அவன் அறைக்குள் செல்லும்போது செல்லும் போது மணி 5.40 am ஆகி இருந்தது.
பவுர்ணமி நிலவின் ஒளி அவன் அறையில் சன்னமாக பரவியிருந்தது. அவன் படுக்கையில் இல்லை, குளியலறையில் சத்தம் கேட்டது. குளிக்க சென்று விட்டான் போலும். கட்டிலில் அமர்ந்தேன். படுக்கை விரிப்பை அழகாக மடித்து வைத்திருந்தான். சூடாக இருந்த படுக்கை, குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு வந்த எனக்கு கதகதப்பாக இருந்தது. காலை கட்டிலின் மேல் சம்மணம் போட்டு உட்கார்ந்தேன்.
ஐந்து நிமிடம் கடந்திருக்கும். தாழ்ப்பாள் விலகும் சத்தம். குளியலறையின் வாயிலை என் கண்கள் மேய. என்னை பார்த்த அவர் shock ஆகி “hey காவ்யா என்ன இந்த நேரத்துல” குறும்பாக கேட்டார்..
அய்யய்யோ இதற்கு பதில் ஏதும் யோசிக்கலையே. அவரை பார்த்தேன்..
நான் வாங்கி தந்த சட்டை, மிக அழகாக இருந்தார்.. அவர் வாங்கி தந்த சேலையில் நானும், நான் வாங்கி தந்த சட்டையில் அவரும்.
ஒரு சிறு புன்னகையுடன், எப்படி இருக்கு என்பது போல் புருவத்தை உயர்த்திக்கேட்க.. நானும்.. சூப்பர் என்பது போல பெருவிரலும் ஆட்காட்டி விரலும் மடித்து கைகளால் சைகை செய்ய.. பக் என்று இருவரும் சிரித்துக்கொண்டோம்.
coffee ஐ அவர் கையில் தந்தேன்.. ஒரு சிப் அருந்தி என் கையில் தர, நான் சந்தோஷமாக வாங்கி ஒரு சிப் அருந்தினேன்.. தலை துவட்டிய துண்டை உதறி திறந்திருந்த ஜன்னலில் காயப்போட்டார். coffee கப் ஐ திரும்ப அவரிடம் நீட்டினேன்.. சிரித்துக்கொண்டே வாங்கிக்கொண்டார்..
“இன்னைக்கு என்ன ஸ்பெஷல்”.. சிரித்துக்கொண்டே கேட்டார்..
அவன் என் கொலுசை காணும் விதமாக நான் சம்மணமிட்டிருந்த காலை மெல்ல கட்டிலின் கீழே இறக்கி அவனுக்கு வலபக்கமாக திரும்பி அமர்ந்தேன். அவனுக்கும் புரிந்த மாதிரி தெரியவில்லை. வயிற்றையும் இடுப்பையும் மூடியிருந்த சேலை லேசாக அகன்றிருந்தது. அவன் அருகிலிருக்கும்போது சரி செய்தால் நன்றாக இருக்குமா என்றொரு குழப்பம். casual ஆக சேலையை இழுத்து இடுப்பை மறைத்துவிட்டேன். ஒரு second அவன் பார்வை என் வயிற்றையும் இடுப்பையும் மார்பையும் வருடிச்சென்றது. நான் வெட்கி தரையை பார்த்தேன். இரண்டு second அறையே அமைதியாக இருந்தது.