கோவம் என் மேல.. கவலை உங்க மேல.. 81

எனக்குள் கலவையான உணர்ச்சிகள்.. கோவில்.. நமக்கு பிடித்த ஆண்.. நம்மை விரும்புவது. வானில் பறப்பது போன்று இருந்தது.
“நீயும் ரொம்ப அழகா இருக்க காவ்யா.. உன்கிட்ட பிடிச்சதே உன் சிரிப்பும் குழந்தைத்தனமும் தான்”..
இந்த வார்த்தைகளுக்கு உலகில் ஈடே இல்லை..
முதன்முதலாக அவன் கைகளை காதலால் மென்மையாக இறுக்கினேன்.
கொஞ்ச நேரத்தில் மலை உச்சியில் போய் சேர்ந்தோம். அங்கே சென்று சேரும் வரையில் அவர் கைகளை நான் விடவில்லை. அங்கே அம்மாவும், அப்பாவும், பாட்டியும் எங்களுக்காக காத்திருந்தனர். தண்ணீர் வைத்திருந்தனர். முதலில் எனக்கு வாங்கி தந்தான், பின்னர் எனக்கு தந்தான். ஒவ்வொரு கணத்திலும் என்னை உருக வைத்துக்கொண்டிருந்தான்.. சாமி கும்பிட்டு கீழே இறங்க முயலும் போதும். “நாம லாஸ்ட் ஆ போலாமா?” இம்முறை உரிமையோடு கேட்டேன்.
“சரி காவ்யா, எனக்கும் உன்கூட பேச சான்ஸ் கெடச்ச மாதிரி இருக்கும். பெரியவங்களை பாத்துகிட்ட மாதிரியும் இருக்கும்” என்றார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. என்னுடன் பேச வாய்ப்புக்காக ஏங்குபவனை பார்த்து மகிழ்வதா? இல்லை.. என் வீட்டு பெரியவர்களை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் நல்லெண்ணத்தை நினைத்து மகிழ்ந்து பெருமை கொள்வதா?
அவருடைய கல்லூரி கதைகள், என்னுடைய கல்லூரி கதைகள் எல்லாம் பேசி மலையிலிருந்து கீழே இறங்கியபோது எனக்கு அவர் மேல், காதலை தாண்டி அன்பும், அன்யோன்யமும், மரியாதையும் அதிகரித்திருந்தது. இவர் நமக்காக எது வேண்டுமானாலும் செய்வார். நம் மேல் அன்பும், நம் குடும்பத்தினர் மேல் மரியாதையும் வைத்திருக்கிறார் என்று ஒரு நம்பிக்கை உருவானது. வீட்டிற்கு திரும்ப வந்தபோது வண்டியில் அசதியில் தூங்கி போனேன்.
வீட்டிற்கு வந்து சேர்ந்த போது தான், நான் அவர் தோளிலேயே தூங்கிப்போயிருந்ததை அறிந்தேன். எனக்கு வெட்கம் ஒரு புறம் பெருமிதம் ஒரு புறம். அவரிடம் “sorry..” என்றேன்.. மென்மையாக சிரித்து“எதுக்கு” என்றார்.. நான் மனதுக்குள் ‘அடப்பாவி’ என்று நினைத்து. “சும்மா” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் ஓடிவிட்டேன்.
மனம் முழுக்க சந்தோசமாக இருந்தது.
அசதியில்.. சேலையுடனேயே உறங்கிப்போனேன்.. கண்விழித்தபோது மணி 4.00. வியர்வையாலும் பட்டுசேலையாலும், கச கச வென்று இருக்க. உடல் அலுப்பு தீர குளிக்க சென்றேன். வெதுவெதுப்பான நீரில் குளியல் போட்டு, என்னிடமிருந்த வான் நீல காட்டன் சுடியும், அதற்கு matching ஆக வெள்ளை நிற bra வும், அடர் நீல panties ம், சிம்மீஸ் ம் அணிந்துகொண்டேன். வெள்ளை நிற shawl அணிந்து கொண்டு ஹால் க்கு வந்தேன்.
அம்மா அழைத்தாள், “காவ்யா, மாப்ளைக்கு coffee குடு டி”.. இதற்காகவே காத்திருந்தது போல “சரி ம்மா” என்று மகிழ்ச்சியாக coffee வாங்கிக்கொண்டு எங்கள் அறையை நோக்கி நடந்தேன். ஆம் இனிமேல் அது எங்கள் அறை என்று தோன்றியது. கதவை தட்டினேன். தாழ் போடப்படவில்லை. தள்ளினேன்.. திறந்துகொண்டது. அவர் பனியன் அணிந்து தூங்கிக்கொண்டிருந்தார். நல்ல அழகான புஜங்கள். உள்ளே சென்று கதவை தாழ்பாள் போடாமல் சாத்தினேன். சத்தம் கேட்டு எழும்பி விட்டார். என்னை பார்த்து மென்மையாக சிரித்தார். “coffee” என்றேன் நானும் ஒரு மென் புன்னகையோடு. அவர் கட்டிலில் எழும்பி அமர்ந்தார். அவர் சொல்லாமலேயே கட்டிலின் மறுபக்கத்தில் நான் அமர்ந்துகொண்டேன். இப்போது அவரை பார்க்கும்போது பயம் இல்லை, மாறாக ஒரு பாதுகாப்பு உணர்வு இருந்தது. படபடப்பு இல்லை, ஆனால் ஒரு தோழமை இருந்தது. என்ன ஆனாலும் இவர் நம்மை கை விடமாட்டார் என்று நம்பிக்கை வந்தது.
“ஒரு நிமிஷம் காவ்யா..” என்று எழுந்து bathroom சென்றார். பெட் ஐ சீர்படுத்தி வைத்தேன்.. வெளியே வந்தவர்.
“நீ coffee சாப்டியா” என்றார். “இல்ல கிட்சேன் ல இருக்கு” என்றேன் மரமண்டையாக.
“பரவால்ல.. நாம இத ஷேர் பண்ணிக்கலாம்” என்றார்.
‘அட.. இத முதல்லையே சொல்லியிருந்தா, வீட்ல coffee யே இல்ல ன்னு சொல்லி இருப்பனே’ என்று தோன்றியது.
அவர் ஒரு சிப், நான் ஒரு சிப் என்று coffee உடன் காதலையும் சேர்ந்து பருகினோம்.
பத்து நிமிடம் பருகியிருப்போம்.. coffee குறைந்தாலும் எங்களுக்குள் காதல் பெருகியிருந்தது.
பின்னர்.. “ஒரு நிமிஷம்” என்று அவர் trolley ஐ திறந்தார். “இது உனக்காக” என்று ஒரு கவர் ஐ தந்தார். கவர் க்குள் எட்டிப்பார்த்தேன். நான்கு kitkat சாக்லேட். ஒரு நோக்கியா மொபைல் போன். ஒரு அழகான பிங்க் நிற பட்டு சேலை இருந்தது.
எனக்கு கண்ணீர் முட்டியது. முதல்முறையாக, ‘இவன் அன்பிற்கு நான் தகுதியானவளா’ என்று என்னையே கேட்டேன். நா எழாமல் இருந்த என்னை பார்த்து. என்ன என்றார்.
கவர் க்குள் கை விட்டு kitkat ஐ மட்டும் எடுத்துக்கொண்டு, “எனக்கு இது போதும்” என்றேன்.
“ஏன்?” என்றார்.
“அப்பா திட்டுவாங்க..”
“புருஷன் வாங்கித்தந்தா கூடவா?”
அவனை அப்படியே கட்டிக்கொள்ளலாம் போல இருந்தது. மென்மையாக சிரித்தேன். ‘ஆமாம்’ என்று தலையாட்டினேன். “அப்பா முன்னாடி வச்சு தாங்க…. வாங்கிக்கறேன்” என்றேன்.
என் கண்ணில் இருந்து நீர் வருவதற்குள் அங்கிருந்து நகர்ந்துவிட வேண்டும் என்று தோன்றியது.
“சரிங்க நான் கீழ போறேன்” என்று சொல்லி கீழே அம்மாவின் அறைக்குள் வந்து பாத்ரூமுக்குள் நுழைந்து கண்ணாடியை பார்த்தேன்.
ஒரு துளி நீர் என் கன்னம் வருடி கீழே இறங்கியது. மனதில் பாரம் இல்லை. மாறாக மனம் முழுக்க அவர். மனம் முழுக்க மகிழ்ச்சி. என்னை விட இந்த உலகத்தில் கொடுத்து வைத்தவள் யாரும் இல்லை என்று மனம் கர்வம் கொண்டது. முகம் கழுவி, துண்டைக்கொண்டு துடைத்தேன். பவுடர் போட்டுக்கொண்டு. shawl அணிந்து கொண்டேன். அவர் கீழே வரும் சத்தம் கேட்க, என்னை அழைக்க காத்திருந்தேன். “காவ்யா, இங்க வாம்மா” அப்பா அழைத்தார். “தோ.. வரேன் பா”.. ஹால் க்கு சென்றேன்.
“மாப்ள, உனக்கு செல்போன் ம், சேலையும் வாங்கி வச்சிருக்காராம், வாங்கிக்கோம்மா” என்றார்.
“நான் புன்னகையோடு அவர் கண்களை நேராக பார்த்து வாங்கினேன்”, மீண்டும் கண்களை பார்த்து புன்னகைத்தார்.
‘எனக்காக நீ பிறந்தால், உனக்காக எத்தனை ஜென்மத்திலும் நானே பிறப்பேன்’ என்று மனதில் தோன்றியது.

அறைக்குள் அவர் தந்த கவரோடு நுழைந்த போது என் இதயம் என்னிடமிருந்து பறிபோனதை உணரவில்லை. அவரை பார்த்தால் தான் நான் முழுமை பெற்றவளாக இருப்பதாகவே உணர்ந்தேன். அதற்குள்ளாகவே என்னில் ஒரு பாதியாகியிருந்தான்.
அவன் எனக்காக வாங்கி வந்த பரிசை பார்க்கவேண்டும் என்றல் ஆசை மேலோங்கியிருந்தது. கவரில் இருந்து சேலையை வெளியே எடுத்தேன். மிக அழகாக இருந்தது. செல்போன் பாக்ஸ் ஐ எடுத்து பார்த்தேன். நோக்கியா என்று எழுதியிருந்தது. உள்ளே இன்னொரு கவர் இருந்தது. மாடியில் வைத்து பார்த்தபோது, இந்த கவர் இருந்த ஞாபகம் இல்லை. என்னவாக இருக்கும் என்ற ஆவல் தொற்றிக்கொள்ளவே.. வேகமாக பிரித்தேன்.
உள்ளே ஒரு greeting கார்டு இருந்தது. சிகப்பு வண்ணத்தில் அழகாக இருந்த greeting கார்டு ஐ தொட்டு வருட.. அவனை தொடுவதை போலவே இருந்தது. மனம் சிறு பிள்ளை போல் துள்ளியது. இதுவரை யாரும் எனக்கு greeting கார்டு பரிசளித்ததில்லை. முதன் முதலாக நான் விரும்பும் ஒருவனிடமிருந்து, இவ்வளவு அழகான greeting கார்டு.