அசுரன் Part 36 35

சகோச்சி பறவை போல பறந்து வந்து பூமியில் வந்து இறங்கினாள்..”வா காத்தவராயா..!இந்த கேடு கெட்டவனுக்கு உதவ நீ வருவாய் என நினைத்தேன்..ரெண்டு பேரும் ஒரே இனம் அல்லவா..இன்றோடு நீ தொலைந்தாய்..”

காத்தவராயன் கடகடவென சிரித்தான்.

“சகோச்சி,நான் மானிட உடலில் பிரவேசிக்கும் வரை உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது.அது உனக்கே தெரியும்.இப்போது நாம் மீண்டும் சண்டையிட்டாலும் அது ஒரு முடிவில்லாத யுத்தமாகவே தொடரும் என்றும் உனக்கே தெரியும்..”

“தெரியும் காத்தவராயா..!நீ மானிட உடலில் பிரவேசிக்காமல் பிரியங்காவை நீ அனுபவிக்க முடியாது என்றும் எனக்கு தெரியும்..நீ மானிட உடலில் பிரவேசிக்கும் தருணத்தை எதிர்பார்த்து நான் காத்து இருக்கிறேன்.நீ மானிட உடலில் நுழைந்த உடன் உன் கதையை முடிக்க வேண்டியது என் பொறுப்பு..”

“அது கனவிலும் நடக்காது விலாசினி என்கிற சகோச்சி…”

இம்முறை சகோச்சி கடகடவென சிரித்தாள்.

“மடையனே..!பிரியங்காவை அடைவதாக நீ சொல்லி 36 மணிநேரம் கடந்து விட்டது.என்னிடம் போட்ட சபதத்தின் படி மீதம் 36 மணி நேரமே உள்ளது.இன்னும் நீ பிரியங்காவை நெருங்க முயற்சி கூட செய்யவில்லை என்பதை நான் அறிவேன்..சொன்ன நேரத்திற்குள் நீ பிரியங்காவை அடையாவிட்டால் என்னிடம் சரணடைவதாக சொல்லி உள்ளாய்..”என்று அவனுக்கு ஞாபகப்படுத்தியது.

“அரக்கர் குலத்தில் எப்பவும் கொடுத்த வாக்கை மீறும் பழக்கம் இல்லை விலாசினி..நீ மட்டும் குறுக்கே இல்லாவிட்டால் இந்நேரம் அறுசுவை கனியான என் பிரியங்காவை ஆசை தீர சுவைத்து இருப்பேன்..என்ன செய்வது..?எதிர்த்து நிற்பது சாதாரண மனுஷியாக இருந்த விலாசினி என்றால் பரவாயில்லை..இப்போ சகோச்சியாக மாறி இருக்கும் விலாசினி ஆயிற்றே..!அதனால் கொஞ்சம் யோசித்து தான் செயல்பட வேண்டும்.”

சகோச்சி கோபத்துடன்”பிரியங்காவை நீ தொடுவது ஒருபுறம் இருக்கட்டும்,இப்போ என்னிடம் இருந்து முதலில் இவனை காப்பாற்ற முடியுமா..என்று பார்..”என தன் சக்தியை பிரயோகம் செய்தது..

காத்தவராயன் அதை தடுத்தான்..”எனக்கு கஜா தேவை..இவன் உயிரோடு இருந்தால் தான் என்னுடல் பெற முடியும்.இல்லையெனில் இவளிடம் நான் சண்டை செய்ய அவசியமே இல்லை. இவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று விட்டு சென்று இருப்பேன்..”என மனசுக்குள் நினைத்தான்..

சகோச்சியின் தாக்குதல்கள் பயங்கரமாக இருந்தது..காத்தவராயனால் சமாளிக்க முடியவில்லை..அவள் சக்தியை கண்டு காத்தவராயனே மிரண்டான்.. தன் முழு சக்தியை பயன்படுத்தி சகோச்சி,காத்தவராயன் மீது ஏவ,அது ஒரு நெருப்பு கயிறு போல அவனை சுற்றி கொண்டது..

அந்த இடமே அதிரும்படி சகோச்சி சிரித்தது..”என் வெறியை தீர்த்து கொள்ள ஓரு மானிட பதர் தான் கிடைத்ததே என்று உள்ளூர கொஞ்சம் வருத்தம் இருந்தது காத்தவராயா…ஆனால் அரக்கர்களின் அரசன் காத்தவராயனே வந்து சிக்கி கொண்டான்.உன்னை இக்கணமே அழித்து என் வெறியை தீர்த்து கொள்ள போகிறேன்….”என சகோச்சி காற்றில் மிதந்து கொண்டு வந்தது.

காத்தவராயன் ஒரு நொடி சிந்தித்தான்..இப்போ இந்த கயிறை என்னால் அறுக்க முடியும்..ஆனால் இக்கயிறை அறுத்தால் மீண்டும் சண்டை தொடர செய்யும்..சண்டை தொடருவது அநாவசியமானது..இது தேவையில்லாத சண்டை..இங்கு இருந்து தப்பித்தாலே போதுமானது..அதற்கு எனக்கு தேவை ஒரு நொடி மட்டுமே..”என காத்தவராயன் சிந்தித்தான்..

சகோச்சி காத்தவராயனை நெருங்கி வந்தது..

அவள் நெருங்கி வர,கயிற்றோடு பிண்ணபட்டு இருந்த காத்தவராயன் அவளை எட்டி அணைத்தான்.இதை சகோச்சி சற்றும் எதிர்பார்க்கவில்லை.காற்றும், காற்றும் உரசியது..இரண்டும் சூறைக்காற்று போல சுழன்றது..”காத்தவராயன் சகோச்சி காதில்,நீ விலாசினியாக இருந்த பொழுது,நான் விராடன் உடலில் இருந்து கொண்டு உன்னை ஆசை தீர சுவைத்து மகிழ்ந்தேன்..ஞாபகம் இருக்கா விலாசினி..ஆகா..உன்னோட இதழ்கள் தேனை விட சுவையாக இருந்ததே..உன்னோட பொன்மேனியை ஆசைதீர அனுபவிக்க கொடுத்தாயே…!கட்டிதழுவி ,நாமே நமக்கு ஒருவருக்கொருவர் ஆடையாக மாறி மஞ்சத்தில் காதல் களியாட்டங்கள் புரிந்து புணர்ந்தோமோ..அவை எல்லாம் மறந்து விட்டதா..!”என காத்தவராயன் சொல்ல விலாசினி நினைவுகள் பின்னோக்கி சென்றது..

தன் பெண்மையை அவன் துவம்சம் செய்த பொழுது ஏற்பட்ட இன்ப சுகம் நினைவுக்கு வர,ஒரு நிமிடம் அவள் செயல் இழந்தாள்.அந்த நொடியை பயன்படுத்தி கொண்ட காத்தவராயன் அவள் கட்டுக்களை உடைத்து கொண்டு,கஜாவை தூக்கி கொண்டும் மறைந்து விட்டான்..

தன் உணர்வுக்கு மீண்டும் சகோச்சி திரும்பிய பொழுது அங்கே வெறும் சூன்யம் தான் இருந்தது..வெறும் மரம், செடி ,கொடிகளை பார்த்து சகோச்சி,”டேய் காத்தவராயா இம்முறை தந்திரமாக ஏமாற்றி தோல்வி அடைய செய்து விட்டாய்.ஆனால் அடுத்த முறை கண்டிப்பா நடக்காது..”என்று அவள் கத்த அந்த இடமே அதிர்ந்தது.

அதே சமயம் கோயம்பேடு ஆம்னி பஸ் ஸ்டாண்டில் லிகிதா ராஜபாளையம் செல்லும் பேருந்தை தேடி கொண்டு இருந்தாள்.தொடர் விடுமுறை காரணமாக கூட்டம் அலைமோதி கொண்டு இருந்தது..எந்த பேருந்திலும் ஒரு சீட் கூட கிடைக்கவில்லை.. கூட்டம் அதிகமா இருந்த காரணத்தால் கார் பார்க்கிங் செய்ய கூட பிரியங்காவால் முடியவில்லை..அதன் காரணமாக லிகிதா மெயின் ரோட்டில் இறங்கி கொண்டு,அவளை அனுப்பி விட்டாள்.

ராஜபாளையம் பேருந்து தான் கிடைக்கவில்லை,மதுரை பேருந்திலாவது சீட் கிடைக்கும் என்று பார்த்தால் அதிலும் கிடைக்கவில்லை..

“என்ன செய்வது..!பேசமால் வீட்டுக்கே திரும்பி விடலாமா..!” என்று செல்ல எத்தனித்த பொழுது அங்கு ஒரு பெண்ணின் குரல் கேட்டது..

“Excuse me”என்று லிகிதாவை அழைத்தது அனு தான்.. உருக்கி வடித்து வைத்த செப்பு சிலை போல எழில் ஒவியமாக இருக்கும் அனுவை பார்த்து லிகிதாவிற்கே பொறாமை எட்டி பார்த்தது..பேச்சு உடனே வரவில்லை.

1 Comment

  1. Pls stop this shitty story. Because of this, no new story is releasing. Pls pls.

Comments are closed.