அவள் குலுக்கியதில்… பீய்ச்சியடித்து கூச்சம் சற்று விலகியது 35

அங்கலாவரை நடந்தே போனார்கள். அங்கே போய் பேருந்துக்காக நின்றபோது.. தமிழ்நாட்டு பஸ் ஒன்று போவதைப் பார்த்துவிட்டு. . ஜமுனாவிடம் கேட்டான்.!
” தமிழ்நாட்டு பஸ் இதுல போகுது. .?”
” எப்பவுமே போகும். .” என்றாள்.
” இது எந்த வழி..? ”
” நான் சொன்னேன் இல்ல. .. ஊட்டி. .கூடலூர் ..முதுமலை.. அந்த வழி…”
” ஓ… ! அப்ப. .. முதுமலை பக்கமா..? ”
” ம்…! பக்கம்தான். .! ”
பேசிக்கொண்டுக்கும் போதே குண்டல் பெட் பஸ் வந்து விட்டது.! இம்முறை பஸ் பயணம் அவனுக்கு ஜாலியாக இருந்தது..!
குண்டல்பெட் போய்… கூட்டமில்லாத தியேட்டரில் காத்திருந்து… டிக்கெட் வாங்கிப் படம் பார்த்தார்கள்.!
லவ் ஸ்டோரி..படம்..! மொழிப் பிரச்சிணையால் அவனுக்கு ஒண்றும் புரியவில்லை. .! ஜமுனாதான் அவ்வப்போது விளக்கினாள் ! படத்தில் அவனுக்குப் பெரிதாக ஆர்வமில்லை என்றபோதும். .. ஜாலியான மனநிலையில்தான் இருந்தான்.! நிறையத் திண்பண்டங்களும் வாங்கிக் கொடுத்தான்.!
படம் முடிந்து வெளியேறும் போது… ஜமுனாவிடம் ரகசியமாகக் கேட்டான்.
” இங்க பிராண்டிக் கடையெல்லாம் எதுவும் இல்லையா..?”
”பிராண்டி கடையா…எதுக்கு?”
” சும்மாதான் ” எனச் சிரித்தான்.
அவளும் சிரித்தாள்.. ” இருக்கு.. ஆனா தூரம். .. மைசூர் ரோட்ல போகணும்னு.. எங்கப்பா சொல்லுவாரு… அதெல்லாம் உங்களால கண்டுபுடிக்க முடியாது. .”
மனதைத் தேற்றிக் கொண்டான்.
” சும்மாதான் கேட்டேன். கடை இருக்கானு தெரிஞ்சுக்கலாம்னு.!”
பெண்களோடு சேர்ந்து.. அவனும் கூல்ட்ரிங்கஸ் குடித்துவிட்டு. ..வந்தான்.!
ரோட்டோரமாக வழிநெடுக இருந்த. .. ஆலமரங்களைப் பார்த்துவிட்டுக் கேட்டான்.
” ரோட்டோரமா இத்தனை ஆலமரங்கள் இருக்கே எப்படி.?”
” ரொம்ப வருஷமா இருக்கு..” என்றாள் ஜமுனா.
” அதுசரி. . இத்தன மரங்கள யாரு வெச்சது…?”
” இதெல்லாம் ராஜா காலத்த மரம்.. ! அந்தக்காலத்துல ராஜா.. அடிக்கடி இந்தக் காட்டுக்கு வேட்டைக்கு வந்துருவாராம். அப்ப வெச்சதுதான் இந்த மரங்கள் எல்லாம். .”
” எந்த ராஜா…?”
” மைசூர் மகாராஜா…”
” ம்… பரவால்ல. . ராஜா வெச்ச மரங்கள இன்னும் அழிக்காம விட்டு வெச்சுருக்காங்களே.. நல்ல விசயந்தான் ” என்றான் தாமு. !
☉ ☉ ☉
”மழை வர்ற மாதிரி இருக்கு..” திடுமென திண்ணையிலிருந்து குதித்து இறங்கின கங்கா.. வானத்தை அன்னாந்து பார்த்தவாறு சொன்னாள்.!
வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்த தாமு.
” உண்மைலயே… நீ சொன்ன கதை செமக்காமெடிதான்… ” என விஜியின் தோளில் தட்டினான்.
அவனுக்கு மறுபக்கம் உட்கார்ந்திருந்த ஜமுனா..
” திருவாத்தான் கதையெல்லாமே… சிரிக்கற மாதிரிதான் இருக்கும் ” என சிரித்துக் கொண்டு சொன்னாள்.
” ஆமா. ..அதுயாரு…திருவாத்தான்.?” எனக் கேட்டான் !
விஜி..” உம்….! திருவாத்தான்னா… அவன் ஒரு கோமாளி…” என்றாள்.
” பரவால்ல… திருவாத்தான் நல்ல காமெடியன்தான்.”
” திருவாத்தான்… காமெடி மட்டுமில்ல… நல்லா காதலும் செய்வான்.” என்றாள். . கையைத் தூக்கி சோம்பல் முறித்த கங்கா. !
” அப்படியா.. சொல்லேன். அதையும் கேக்கலாம்.”
” இன்னிக்கு இது போதும். . நடங்க போய் படுத்து தூங்கலாம் ”
” மணி என்ன எட்டு இருக்குமா?”
” ஜாஸ்தியாவே இருக்கும். ஊரே அடங்கிருச்சு பாருங்க. ”
ஜமுனாவும் திண்ணையை விட்டு இறங்கினாள்.
” நடங்க… படுக்கலாம். எனக்கும் கஷ்டமா இருக்கு..” என்றாள்.
விஜியும் இறங்கினாள்.
மருபடி கங்கா ” மழ வந்தாலும் வரும் ” என்றாள்.
” எப்படி சொல்ற…?”

4 Comments

  1. Super famy sex enaku pidichuruku

  2. super story boss

  3. Super story,congrats

Comments are closed.