வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் ஒன்று 115

காதலியின் உடலில் இருந்து வரும் வாசத்திற்கும், அன்னையின் உடலில் இருந்து வரும் வாசத்திற்கும் இடையிலிருக்கும் வித்தியாசத்தை உணர்ந்தவர்கள், இதை உணர்வார்கள்! நான் மெல்ல அவளை விட்டு பிரிந்தேன்.

அது மட்டுமில்லை, உன்னை இவ்ளோ கஷ்டப்படுத்துன, அந்த ரெண்டு பேரையும் நான் சும்மா விடப் போறதில்லை.

அப்பொழுதுதான் அவளுக்கு அவர்களைப் பற்றிய ஞாபகம் வந்தது. நான் இருக்கிறேன் என்ற தைரியம், அவளுக்கும் தெம்பினைத் தந்தது.

என்னடா பண்ணப் போற? நீ தனியா என்ன பண்ணுவ?

அவள் இன்னும் என்னை அதே சின்ன பையன் என்று நினைத்துக் கொண்டிருந்தாள் போலும்.

ஹா ஹா, நான் தனியாவாவா? நீ என்ன நினைச்சிட்டிருக்க என்னப் பத்தி? நான் சொசைட்டில எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா??? பிசினஸ்ல, என்னைப் பாத்து அவனவன் பயப்படுவான். உன் மாமானார்லாம் எனக்கு சுண்டைக்கா! அவனை அழிக்கறதுக்கு எனக்கு அரை மணி நேரம் போதும். ஆனா, அவனையெல்லாம் அவ்ளோ சுலபமா அடிக்கக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமா அடிக்கனும். அவன் உன் கால்ல விழுந்து கெஞ்சனும். அப்படி ஒரு அடியா இருக்கனும்.

அப்படி என்னடா பண்ணப் போற?

தெரியலை, இனிமேதான் யோசிக்கனும். அது என்னான்னு யோசிச்சிட்டு சொல்றேன்.

இப்ப நீ எதைப் பத்தியும் போட்டு குழப்பிக்காம நல்லா ரெஸ்ட் எடு! முடிஞ்சா, அவங்களை என்னா பண்றதுன்னு யோசி. ஓகே?

அடுத்த நாள் காலை!

சாப்பிடும் போது கேட்டாள், ஏதாவது யோசிச்சியா?

இன்னும் இல்லை. நேத்து நைட்டுதானே பேசுனோம். அதுக்குள்ள என்ன அவசரம்?

இல்ல, நான் ரெண்டு நாள்ல வரேன்னு சொல்லிட்டு வந்தேன். திரும்பி வரவா போறோம்னு நினைச்சு, ஆனா, இப்ப அவிங்க என்னை எதிர்பாப்பாங்க இல்ல? ஹரீஸ் இன்னிக்கு ஃபோன் பண்ணுவாரு! அவள் குரலில் கொஞ்சம் பயம் தென்பட்டது!

ஏய், நீ எவ்ளோ தைரியமான ஆளு? இதுக்கு ஏன் இப்புடி அப்செட் ஆகுற?

அவன் ரொம்ப வக்கிரம் புடிச்சவண்டா! அவன் வயசு என்ன, என் வயசு என்ன? என்ன உறவு? எப்புடி இப்புடில்லாம் பேச முடியுது?! அவன்கிட்ட என்னத்தை சண்டை போட முடியும்? தவிர, இதுக்கு என்ன பண்ணனுனும்னு தெரியாம, அங்க போகனும்னு நினைச்சாலே நடுங்குதுடா!

அவள் குரலே, அவன் எந்தளவு அவளை சித்ரவதை பண்ணியிருக்கான் என்று தெரிந்தது. அது என்னுள் இன்னும் கோபத்தை ஏற்படுத்தியது!

அவள் கையைப் பிடித்தேன். ஏதாவது காரணம் சொல்லி எப்புடியாவுது ஒரு வாரம் இருக்கப் பாரு! அதுக்குள்ள நான் வழி சொல்றேன். அவனை அடிக்கனும்னா, நிமிஷம் போதும், ஆனா, அவன் உனக்கு பண்ணதுக்கு, அவன் பொண்டாட்டி பண்ணதுக்கு ரெண்டு பேரும் அனுபவிக்கனும்! அப்படி ஒரு திட்டத்தோட வர்றேன்! ஓகே???

ம்ம்ம், ஓகே டா! இப்பதான் கொஞ்சம் ரிலீஃபா இருக்கு!

எல்லாம் சரி, இப்புடியே எத்தனை நாள் இருக்கப் போற? எங்க போச்சு உன் கான்ஃபிடண்ட்லாம், வேலைக்குப் போறப்ப எப்புடி இருப்ப?

பேசிக்கலாவே, நீ இண்டலிஜெண்ட் ஆச்சே? ஏன் அங்கப் போனதுக்கப்புறம், வேலைக்குப் போறதில்லை? ஹரீஸ் கூட உன்னை, அவர் கம்பெனிக்கே வரச் சொன்னாருன்னு சொன்ன? ஏன் இப்பல்லாம் போறதில்லை?

ஹரீஸுக்கும், நான் படிச்சிச்சு வீட்டுல இருக்குறது புடிக்கலைதான்! ஆனா, ஆஃபிஸ்லியும் அந்தாளு இருக்கான்ல? அவன் அங்கேயும் அசிங்கமா பேசுனான், அதான் போறதில்லை!

நான் கேட்குறேன்னு தப்பா நினைக்காத? ஹரீஸ் பத்தி நீ என்ன நினைக்குற? இவ்ளோ நடந்ததுக்கப்புறமும் நீ அவர் கூட… அதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியாமல் நிறுத்தினேன்.

அவள் மெதுவாகச் சொன்னாள்.

அவர் ரொம்ப நல்லவருடா! தாத்தா ஏன் அவரை கல்யாணம் பண்னனும்னு சொன்னாருன்னு, அவரோட கேரக்டரைப் பாத்தா புரியுது! எவ்ளோ காசு இருந்தும், கெட்ட பழக்கம் எதுவும் கிடையாது.

1 Comment

  1. Raji ma unaku tha comments pls reply

Comments are closed.