28 வயது அழகுப் புயல் – பாகம் 35 140

உன் கழுத்துல உடனே தாலி கட்டணும்னு நெனச்சேன். அதுக்குள்ளே அகல்யா இப்படி பண்ணிட்டாளே…

காவ்யாவுக்கு அகல்யாவின் லெட்டர் கண் முன்னே வந்து போனது.

நீங்கள் என் காதலைப் புரிந்துகொள்ளப்போவதில்லை. நான் என் காதலனைத் தேடிப் போகிறேன். ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொண்டு நானே தொடர்பு கொள்ளுகிறேன். என்னைத் தேடவேண்டாம்.

போலீஸ் ஸ்டேஷனில் அகல்யாவைப் பற்றிய தகவல்களை கொடுத்துவிட்டு மனதில் பாரத்தோடு திரும்பி வந்தார்கள். ஐயோ அகல்யா எப்படியெல்லாம் கஷ்டப்படப் போறாளோ… இப்படி பண்ணிட்டாளே படுபாவி…. அகல்யா திரும்ப வந்துடுடி ப்ளீஸ்…… – காவ்யா மனமுடைந்தாள். எனக்கு சந்தோஷமா இருக்க அதிர்ஷ்டமே இல்லையா…

கண்ணன் அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தபோதுதான் ராஜ்ஜும் நிஷாவும் வந்து கெஞ்சிவிட்டுப் போனார்கள். இப்போது நிஷாவின் அழுகை வேறு அவளை வாட்டி எடுத்தது.

நீ இந்த நேரத்துல அழக்கூடாது. கோபப்படக்கூடாது. போலீஸ் அகல்யாவை நல்லபடியா நம்மகிட்ட ஒப்படைச்சிடுவாங்க. அவ நம்ம சொல் பேச்சு கேட்கலைன்னா நாம என்ன பண்ண முடியும்? அவ நல்லபடியா திரும்ப வருவா. திரும்ப வந்ததும் முதல்ல நாம கல்யாணம் பண்ணிக்கணும்.. என்றார்.

இங்கே –

மலர்க்கு, அவளது திருமணமான தோழி ஒருத்தி சொன்னது நினைவுக்கு வந்தது. மாமியார்கிட்ட முதல்லயே தலைகுனிஞ்சி பேச பழகிட்டீன்னா உன்ன கொட்டிக்கிட்டே இருப்பாங்கடி. கொஞ்சம் கெத்தாவே நடந்துக்க. ஆட்டோமேட்டிக்காக வழிக்கு வருவாங்க.

அவளது மிதப்பை இது இன்னும் அதிகப்படுத்தியது.

பத்மாவை மதிக்காமல் உதாசீனப்படுத்தினாள். எப்போது argument வந்தாலும் மாமியார் பத்மாவிடம்தான் தப்பு இருப்பதுபோல் அவர்களை நினைக்க வைத்தாள். ஏற்கனவே சட் சட்டென்று பேசும் பத்மா இதில் சுலபமாக விழுந்துவிட்டாள். விளைவு – மோகன் முன்னாலேயே மலர் பத்மாவிடம் எரிந்து விழுந்தாள்.

விஷயம் ராஜ் காதுக்குப் போனது. கொஞ்சம் அடஜஸ்ட் பண்ணிப் போ மலர். அவங்க இருக்கப்போறதே இன்னும் கொஞ்ச காலம்.

அவன் அம்மாவை விட்டுக்கொடுக்க முடியாமல் பேசினான்.

அவள் மூளை வேறுவிதமாக யோசித்தது. இப்பவே பணிஞ்சி போயிட்டா காலத்துக்கும் அட்ஜஸ்ட் பண்ணிப் போகணும். இப்போ நான் எடுக்கற முடிவைப் பார்த்துட்டு, இவ கோவக்காரி, பிடிவாதக்காரி, அவ சேஞ்ச் ஆகமாட்டா நாமதான் விட்டுக்கொடுக்கணும்னு இவங்க எல்லாரும் ஒரு முடிவுக்கு வரணும்!

அவள் தன் வீட்டுக்கு கிளம்பினாள். தடுத்தபோது, உனக்கு உன் அம்மாவை விட நான்தான் முக்கியம்னு எப்போ சொல்றியோ அப்போதான் வருவேன் என்று எரிக்கும் விழிகளால் சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

ராஜ் அவளை சமாதானப்படுத்துவதற்காக போன் பண்ண, அது இன்னும் பெரிய சண்டையாக முடிந்தது.

அவளது வீட்டில் அவளுக்கு புத்திமதி சொல்ல, அவள் அதையெல்லாம் கேட்கும் நிலைமையில் இல்லை. ராஜ்க்கு உண்மையிலேயே என்மேல பாசம் இருந்தா என்கிட்டே வந்து கெஞ்சட்டுமே… என்று நினைத்தாள். மானம் ரோஷம் கெட்டு என்னால அங்க குப்பை கொட்டமுடியாது… என்றுவிட்டு, அக்கா வீணாவின் வீட்டுக்குப் போய்விட்டாள். இங்கே கொஞ்ச நாட்கள் இருந்தால் சமாதானமாகிவிடுவாள் என்ற நம்பிக்கையில்… உன் வீடு மாதிரி நினைச்சுக்கோடி என்று சொல்லி, வீணா அவளை தங்கவைத்துக்கொண்டாள்.

8 Comments

  1. Really Gud story bro…Kavya pregnant by Kannan is expected..but nice..superb bro, update next part soon bro

  2. Author – please. Do not take the story as seeny and Nisha getting married after all this. Their relationship is purely based on physical attraction and lust. Probably get her married to someone genuine. Though it’s illegal affairs, seenu is not worth for Nisha apart from giving her physical pleasure.

  3. Kathir have marry nisha anda nisha musti be honest to him and love him please no more sex show good feelings and good end

  4. ராஜ்… வச்சியே ஆப்பு… சரியா வச்சுட்டியே…

  5. Soooooooper…..

  6. Next part quick

Comments are closed.