28 வயது அழகுப் புயல் – பாகம் 29 184

லேசான தாடியுடனும் வாரப்படாத முடியுடனும், லேசாக திருகி விடப்பட்ட அடர்த்தியான, அழகான மீசையுடனும், கொஞ்சம் முரட்டுத்தனத்துடனும் வசீகரமான பார்வையுடனும் அங்கே உட்கார்ந்திருந்த கதிர், மோகனின் சொந்த தங்கை மகன். டிகிரி முடித்திருக்கிறான். வாட்டசாட்டமான உழைப்பாளி. மதுரைப்பக்கம் ஒரு கிராமம். சின்ன வயதில் நிஷா, ராஜ் இருவரும் அந்த கிராமத்தில் வளர்ந்திருக்கிறார்கள். அப்புறம்தான் நகரத்துக்கு வந்தார்கள். மோகன் பிசினஸில் மடமடவென்று வளர்ந்தபிறகு பத்மா அவர்களை ஒதுக்கிவைத்துவிட்டாள். ஒருமுறை இரு குடும்பமும் சென்னையில் சந்தித்துக்கொண்டபோது, கதிரிடம், ரொம்ப கஷ்டப்படுறீங்கல்ல? அவரோட ஆபிஸ்ல ஏதாவது ஒரு சின்ன வேலை போட்டுக் கொடுக்கச்சொல்றேன் என்று பத்மா மிதப்பாக சொல்ல… நாங்க சந்தோஷமாத்தான் இருக்கோம் அத்தை. விவசாயம் செயறதுதான் எனக்கு பிடிச்சிருக்கு… என்று கதிர் அப்பாவியாய் சொல்ல… அன்றிலிருந்து பத்மாவுக்கு இந்த (ஏழை) குடும்பத்தை கண்டாலே பிடிப்பதில்லை.

கதிர் சுறுசுறுப்பான இளைஞன் என்பதால்… கிராமத்தை விட்டுவிட்டு வந்து தன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தால், திறமையாக நடந்துகொண்டால், பின்னாட்களில் தீபாவை அவனுக்கு கட்டிக்கொடுக்கலாம் என்று மோகன் ஒரு கணக்கு போட்டிருந்தார். கதிராலும் பத்மாவாலும் அந்த எண்ணம் இப்போது சுத்தமாக இல்லாமல் போயிருந்தது.

நிஷாவுக்கு அவனைப் பார்த்தால் பாவமாக இருக்கும். அவன் இவளிடம் பேச கூச்சப்படுவதை பார்த்தால் சிரிப்பாக இருக்கும். ஆனால் அவன் விருப்பப்பட்டு விவசாயம் செய்வது, கடுமையாக உழைப்பது அவளுக்குப் பிடிக்கும்.

கதிர் சாப்பிட்டுவிட்டு எழுந்தபிறகு மோகன் நிஷாவிடம் சொன்னார்.

என் தங்கச்சி குடும்பத்து மேல நீயாவது பாசமா நடந்துக்கிறியேங்கிறதுக்காக… மதியத்துக்கு மேல வெளில போகலாம். பட் கண்ணன் லண்டனிலேர்ந்து வந்ததும் நீ அவர்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு கிளம்பனும். ஞாபகம் வச்சுக்கோ

நிஷா பேசாமல் இருந்தாள்.

நாங்க அவரை கன்வின்ஸ் பண்ணிடக்கூடாதுன்னு அவர் கிளம்புற அன்னைக்கு சொல்றீங்கள்ல? ஸ்மார்ட்

அப்பா… அவர் விருப்பப்பட்டுதான்…..

7 Comments

  1. Gud story bro update next part soon

  2. Next please Quikr podunga

  3. ஹூம்… கண்கெட்டபின் சூர்யநமஸ்காரம்… தனக்கு பின் ஒரு தங்கையிருக்கிறாள்… அவளுக்கும் திருமணம் நடைபெற வேண்டும் என்பது கூடவா மறக்கடிக்கும்!!!.

    சீனு காமினியை இன்னும் முமுமையாக விளையாட விட்டிருக்கலாம்… கசக்கி பிழிந்திருந்தால் , காமினியும் சீனுவிடம் சரணாகதி அடைந்துருப்பாள்.. பார்க்கலாம்..

  4. கதை டெய்லி காலைல ஆறு மணிக்கு போடுங்க ப்ளீஸ் அண்ட் வெஸ்ட் இன்று காலையில் போட்ட மாதிரி டெய்லியும் போடுங்கள் கதையை supr

  5. அடுத்த கதை சீக்கிரம் போடுங்க ப்ளீஸ் என்று போஸ்ட் 30

Comments are closed.