இருவரும் ரெடியாகி நம்ம அறைக்கு வர, “என்னைப் பாத்த ரமேஷும், நீங்களும் அர்ச்சனா சொன்ன மாதிரியே ‘ஆ’ ன்னு வாயைத் திறந்து அசந்துபோய் நின்னீங்க.
“அண்ணா,… உங்க பொண்டாட்டி எப்படி?”
“இத்தனை நாளா, மாடர்ன் ட்ரஸ்ல இவ்ளோ அழகா இருப்பான்னு தெரியாமப் போய்டுச்சே” என்று நீங்க அங்கலாய்க்க,
“ரொம்ப வேகாதீங்க. இங்க இருக்கிறவரைக்கும் இவதான் என் ஜோடி தெரியுமில்ல”என்று சொல்லி பெருமைப் பட்ட ரமேஷ், என்னை இழுத்து, இடுப்பில் கை கோர்த்து நிற்க,…
போதும் விடுங்க. அவ இப்பதான் கொஞ்சம் தைரியம் வந்து, இந்த மாதிரி ட்ரெஸ் போட்டு வெளியே வந்திருக்கா. அதையும், இதையும் சொல்லி திரும்பவும் அவளை ரூமுக்குள்ளே அனுப்பிடாதீங்க.” என்றாள் அர்ச்சனா.
“என்னங்க,… முதல்ல நைனா தேவி கோயிலுக்குப் போய்ட்டு அப்புறம் எங்க வேணும்னாலும் போகலாம்.” என்று நான் ரமேஷிடம் சொல்ல, அதை அனைவரும் ஒரு மனதாக ஏற்று, கிளம்பினோம்.
அர்ச்சனாவின் லேசாக உயர்ந்த ஹைஹீல்ஸ் சான்டக்கைப் போட்டுகொண்டு, நான் நடக்கவே ரொம்ப சிரமப் பட்டேன். அர்ச்சனா கை பிடித்து மெதுவாக நடக்க நடக்க,…கொஞ்சம் பழகிக் கொண்டேன்.
ரெஸ்டாரண்டில் நீங்க மூனு பேரும் டிஃபன் சாப்பிட, நான் வெறும் காஃபி மட்டும் குடித்தேன்.
மெதுவாக கிளம்பி, காரில் முதலில் நைனா ஆலயத்துக்கு சென்றோம்.
“ஏங்க,… நைனிடாலைப் பத்தி சொல்லுங்களேன்.”
இந்தியாவோட வடக்கு எல்லைலே மிக நீண்ட இமயமலைத் தொடர் இருக்கிறது உங்களுக்கு தெரியும். அந்த இமயமலைத் தொடரின் வெளிப்புறத்திலே இருக்கிற பல மலைப் பிரதேசங்கள்லே குமோன் மலைப் பிரதேசமும் ஒன்னு. அந்த குமோன் பிரதேசத்திலே, பள்ளத்தாக்கிலே அமைஞ்சிருக்கிறதுதான் நைனிடால் ஏரி. அதைச் சுத்தி உருவாகி இருக்கும் நகரம்தான் நைனிடால். இந்தியாவின் ஏரி மாவட்டம் என்று பெருமையோடு அழைக்கப்படும் நைனிடால் நகரம் குமாவுங்க் என்றழைக்கப்படும் மலைகளுக்கு இடையே அமைந்துள்ளது. வெகு அமைதியான சூழலும், சொர்க்கம் போன்ற இயற்கை அழகும் உள்ளது. 10 கிமீ தொலவில் கில்பரி எனும் அழகிய பிக்னிக் ஸ்தலம் உள்ளது. ஓக் மற்றும் பைன் மரங்களடர்ந்த இந்த பகுதியில் ஏகாந்தமாக பொழுதை போக்கலாம்.
புராணப்படி சிவனோட கோவத்துக்கு ஆளான சக்தி எரிக்கப்பட்டப்ப, சக்தியோட உடல் பாகங்கள் பல்வேறு இடங்கள்ல தெரிச்சு விழுந்தாகவும், அதிலே கண் பகுதி விழுந்த இடம் இந்த இடம்ன்றதாலே, இந்த இடத்துக்கு நைனிடாலுன்னு பேர் வந்தாவும் சொல்றாங்க. நைன்- சக்தியின் கண் என்று அர்த்தம். டால் என்றால் மிகப் பெரிய ஏரி என்று அர்த்தம்”.
“இது எந்த மாநிலத்துல, மாவட்டத்துலே இருக்கு?”
“உத்ரகாண்ட் மாநிலம், நைனிடால் மாவட்டத்துலே, இந்தப் பகுதி இருக்கு.”
“அப்ப… இந்தப் பகுதிக்கு நைனிடால்தான் முக்கிய இடம்னு சொல்லுங்க!”
“ஆமாம்., அதை வச்சிதான் மாவட்டத்துக்கும் அந்தப் பேர் வந்திருக்கு.”
“ம்…”
Next please 6