கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 7 19

அதுக்கப்புறம் மீனாக்கிட்ட செல்வாவை தெரியாதுன்னு வம்பு பண்ணேன். என்னை விட சின்னப்பொண்ணு; மீனா எவ்வளவு பொறுமையா எங்கிட்ட பேசினா? ச்சே … ச்சே … எனக்குத்தான் அறிவு இல்லயா? பாவம் செல்வா; சாவித்திரி மேல இருந்த கோவத்தை எல்லாம் அவன் மேல காட்டிட்டேன்; சாவித்திரி எனக்கு எதிரின்னா, அவனுக்கும் எதிரிதானே? நான் கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கணுமோ? செல்வாவின் புன்னகைக்கும் முகம் அவள் மனதிலாடியது.
“பாவம் செல்வா, அவனை கூப்பிட்டு சாரி சொல்லலாமா?” அறிவு கெட்டவளே! செத்த நேரம் பொத்திக்கிட்டு பொழுது விடியற வரைக்கும் சும்மா படுத்து கிடடி; வேலியில போற ஓணானை எடுத்து உள்ள வுட்டுக்காதேடி? இப்ப உன் மாமா வேற பிக்சர்ல வந்துட்டார். நீ அவன் கிட்ட ஏதாவது பேசி, அவன் ஒண்ணு பேசி, நீ ஒண்ணு பேசி, ரெண்டு பேரும் சேர்ந்து குட்டையை குழப்பணுமா நடுவுல, இப்ப நீ செல்வா கிட்ட பண்ற டீலிங் அவருக்கு புடிக்குமோ; புடிக்காதோ? செல்வா ஜானகியை போய் பாத்து இருப்பானா? அங்க என்ன நடந்து இருக்கும்? அதை தெரிந்து கொள்ள அவள் மனம் துடித்தது. அடியே! அவன் அவளைப் பாத்தா என்ன? பாக்கலைன்னா உனக்கு என்ன? மாமா சொன்ன மாதிரி அவன் என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லலை; அவன் ஜானகியை, அவங்க அம்மா சொன்னதுக்காக போய் பாக்கறான்; இது அவனுக்கும் அவங்க அம்மாவுக்கும் நடுவுல இருக்கற விஷயம்; இதை நான் ஏன் எனக்கு அவமானம்ன்னு நெனைக்கணும்? அவள் மனம் அலைந்து களைத்தது … அவள் தூக்கத்திலாழ்ந்தாள் … தூக்கம் வந்த அந்த நொடியை அவள் உணரவில்லை; தூக்கம் தொடங்கும் அந்த தருணத்தை, கணத்தை, நொடியை உணர்ந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா???? *** புயலடித்து ஓய்ந்தது போல் இருந்தது செல்வாவின் வீடு. பசி வயிற்றை கிள்ளியெடுத்த போதிலும் நாலு பேரும் ஆளுக்கொரு மூலையாக யாரும் யாரிடமும் பேசாமல் அமைதியாக கிடந்தார்கள். மீனா முதலில் எழுந்து மூஞ்சை கழுவி, எண்ணைய் விட்டு சாமி விளக்கை ஏற்றியவள், கிச்சனுக்குள் சென்று இட்லி பானையை அடுப்பில் ஏற்றினாள். தேங்காயை துருவி, உளுத்தம் பருப்புடன், சிவப்பு மிளகாய், வெங்காயம், தக்காளியை வதக்கி, அதனுடன் பச்சை கொத்துமல்லியை சேர்த்து மிக்ஸியில் ரெண்டு சுற்று சுற்றி எடுத்தாள். ஹாட் கேஸில் இட்லிகளை நிரப்பி, சட்னியையும் அதனுடன் டைனிங் டேபிளில் வைத்துவிட்டு, பசியில்லை என்று சலித்துக்கொண்ட பிடிவாதம் பிடித்த மல்லிகாவையும், பசியுடனிருந்த நடராஜனையும், ஹாலுக்கு இழுத்து வந்து, தட்டில் இட்லியை எடுத்து வைத்து சாப்பிடச் சொன்னாள்.

“ஏண்டி மல்லி, உன் பொண்ணு சட்னி நல்லாத்தாண்டி அரைச்சிருக்கா, உப்பு காரம் சரியாத்தான் இருக்கு இல்லே?”
“ஆமாம், அவளை நீங்க தான் மெச்சிக்கணும், என்னமோ மகராணி, வீடே பத்தி எரியுதேன்னு இன்னைக்கு அடுப்பாங்கரையில நுழைஞ்சிட்டா.”
“மல்லி நான் சொல்றேன்னு நினைக்காதே; வர வர வீட்டுல நீ எதுக்கெடுத்தாலும் சலிச்சுக்கிறே; இன்னும் முழுசா அதுக்கு இருபது முடியலடி, அவ வயசுக்கு அவ பொறுப்பாத்தான் இருக்கா,
“ பக்கத்தில் உட்க்கார்ந்திருந்த அவள் முதுகை தன் இடது கையால் பாசத்துடன் வருடினார். நடராஜனின் வருடலில் அவள் முதுகு சிலிர்த்து குலுங்கியது. அவள் கண்ணோரத்தில் நீர் தளும்பியது.
“கண்ணைத் தொடைச்சுக்கம்மா மல்லி, சட்டுன்னு ரொம்ப எமோஷனலா ஆயிடறே? அப்புறம் டக்குன்னு கண் கலங்கறே; பசங்க பாத்தா அம்மா அழறாளேன்னு அதுங்க மனசு பதறிபோகும். ரெண்டும் உன் மேல உசிரையே வெச்சிருக்குதுங்க.” அவள் எதையோ சொல்லவந்தவள், உணர்ச்சிகளின் உந்துதலால் பேச குரல் எழும்பாமல் விசும்பினாள்.
“மீனா வர மாதிரி இருக்கு; பேசாம சாப்பிடு, எதுவாயிருந்தாலும் நம்ப ரூம்ல போய் பேசிக்கலாம்,” நடராஜன் அவள் வலது தொடையை அழுத்தினார். வெரண்டாவில் வெறும் தரையில் படுத்திருந்த செல்வாவிடம் தட்டில் நாலு இட்லியையும் சட்டினியையும் வைத்துக் கொடுத்துவிட்டு மீனா அவன் பக்கத்திலேயே உட்க்கார்ந்து தானும் சாப்பிட ஆரம்பித்தாள்.
“அண்ணா, போன்ல யார்கிட்ட சொன்னே நீ – எனக்கு சுகன்யான்னு யாரையும் தெரியாதுன்னு – அண்ணியோட கோவம் தீந்து போச்சா? சுகன்யாதான் கால் பண்ணாளா?” அவள் அவனை பார்த்து கண்ணடித்தாள்.
“மீனா என்னை சும்மா வம்புக்கிழுக்காதடி, என் மூடு சரியில்லை அப்புறம் நான் முரடனாயிடுவேன்”
“அப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்ன கையை ஆட்டிகிட்டு அம்மாவை அடிக்க போறவன் மாதிரி ஓடி தடுக்கி விழுந்து நெத்தியை பேத்துகிட்டயே, அப்ப என்ன மனுசனா இருந்தியா? இனிமேல் தான் நீ முரடனாக போறியா?” செல்வாவுக்குத் தான் கால் தடுக்கி தலைக்குப்புற பள்ளத்தில் விழுந்தது போலிருந்தது.
“நான் அம்மாவை அடிக்கப் போனேனா? என்னடி உளர்றே?”
“அப்ப யார் உன்னைப் பார்த்திருந்தாலும் இப்படித்தான் நினைச்சிருப்பாங்க.”
“என்னாடி இது எனக்கு நேரமே சரியில்லைடி, நான் எழுந்து போய் அம்மா கால்ல விழுந்து, கை எடுத்து கும்பிட்டு, கொஞ்ச நேரம் பேசாம இரும்மான்னு கேக்க நினைச்சேண்டி; நான் எது பண்ண நினைச்சாலும் பண்றதுக்கு முன்னாடியே அது அனர்த்தமா முடியுதுடி” அவன் தட்டிலேயே தன் கையை கழுவினான். மீனா அவன் தட்டையும், தான் சாப்பிட்ட தட்டையும் கிச்சன் சிங்கில் போட்டவள், காய்ச்சிய பாலை இரு கிளாஸில் ஊற்றி எடுத்துக்கொண்டு, நடராஜனின் அறைக்குள் நுழைந்தாள். நடராஜன் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருக்க, மல்லிகா வெறும் தரையில், கையைத் தலையணையாக வைத்து காலை அகட்டிப் படுத்திருந்தாள்.
“அம்மா, மழை பேஞ்சு தரை சில்லுன்னு இருக்கு, எழுந்திரும்மா, கட்டில்ல படுத்துக்கம்மா,” அதற்கு மேல் எதுவும் பேசாமல் பால் தம்ளர்களை மல்லிகாவின் பக்கத்தில் வைத்தவள், அறைக்கதவை தன் பின்னால் இழுத்துக்கொண்டு ஹால் விளக்கை அணைத்துவிட்டு வெரண்டாவிற்கு வந்தாள். ***
“இப்ப சொல்லுடா அண்ணா, யார் கால் அது?” பசியடங்கியவுடன், செல்வாவுக்கு மனம் இலேசானது போலிருந்தது. மூளை நிதானமாக யோசிக்க ஆரம்பித்தது. தங்கையிடம் இதமாக பேச ஆரம்பித்தான்.
“நான் சுகன்யாவோட, தாய் மாமா ரகுராமன்; உங்களை பாக்கணும், நாளைக்குப் ப்ரீயான்னார்? அவளுக்கு மட்டும் தான் குசும்பு பண்ணத் தெரியுமா? எனக்கு சுகன்யான்னு யாரையும் தெரியாதுன்னேன்?”
“அந்த ஆள் அசரவேயில்லை; நான் தான் அசந்து போயிட்டேன். அப்படியா தம்பி? ரொம்ப நல்லது ராத்திரி பூரா யோசனை பண்ணுங்க, அப்படியும் நினைவுக்கு வரல்லன்னா, ஒரு மிஸ் கால் குடுங்க, நாளைக்கு சுகன்யாவோட உங்க வீட்டுக்கு வரேன், நேர்ல பாத்தா உங்களுக்கு ஞாபகம் வந்துடும்னு சொன்னாரு. ஆனா அந்தாளு என்னை மிரட்டலைடி; குரல்ல கோவம் இல்லடி, பரபரப்பு இல்லைடி, ரொம்ப அமைதியா பேசினார்டி.”
“அதாண்டா ஒரு பெரிய மனுசனுக்கு லட்சணம் – ஆனா இது மாதிரி ஆளுங்க ரொம்ப டேஞ்சரானவங்கன்னு அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. மீனா! உங்கப்பா சாதுடி, ஆனா அவரு மிரண்டா எதிர்ல நிக்க முடியாதுன்னுவாங்க – ஜாக்கிரதைய இரு, இன்னொரு தரம் அந்தாளுகிட்ட மொக்கை போடாதே.” அவள் சிரித்தாள்.
“செல்வா, நம்ம அப்பாவும் காலையிலேருந்து ஒரு தரம் கூட கோபப்படவே இல்லை பாத்தியா? அமைதியா வீட்டுல நடக்கற கூத்து எல்லாத்தையும் பாத்துகிட்டு இருந்தாரு. நான் காலையில நீ குடுத்த சுகன்யா போட்டோவை அவருகிட்ட காமிச்சேன்; அவருக்கு அவளை பிடிச்சு போச்சுடா, அம்மா கிட்ட கூட சொன்னாரு, பொண்ணு அழகா இருக்காடி, அவங்க கூட அவ அப்பா இல்லன்னா என்னாடி, இவளையும் தான் ஒரு தரம் பாப்போமேன்னார்”
“நிஜமாவா சொல்றே – அப்ப நம்ம வீட்டுல பாதி பிரச்சனை முடிஞ்சு போச்சா?” அவன் மனதுக்குள் மகிழ்ச்சியானான்.
“நான் ஏண்டா பொய் சொல்றேன்?”
“ஏண்டி அம்மா பாத்தாங்களா அவ போட்டோவை”
“அம்மாவா? அவங்க பாக்கலைடா … பல்லைக்காட்டிகிட்டு அந்த எடுபட்டவ படத்தை பாத்து பாத்து பூரிச்சு போறீங்களான்னு அப்பாவையே ஒரு ஏறு ஏறினாங்க”
“இப்ப என்னடி பண்றது? வீட்டுல ஏற்கனவே பூகம்பம் வந்த மாதிரி இருக்கு; நாளைக்கு சுகன்யாவோட அவ மாமா நம்ம வீட்டுல நுழைஞ்சா என்னாகும்ன்னு தெரியலை. சுகன்யா, நமக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு கூச்சல் போட்டுட்டு போனா, அதுக்குள்ள எப்படி அவளை அவர் தன் லைனுக்கு கொண்டாந்தார். அவ மாமா எப்ப சீன்ல வந்தாரு, எல்லாத்துக்கும் மேல நானும் சுகன்யாவும் லவ் பண்ற விஷயம், ஜானகிக்கு எப்படி தெரிஞ்சுதுன்னு புரியலடி. நீ வேணா சுகன்யாவுக்கு ஒரு தரம் போன் பண்ணி என்ன ஏதுன்னு கேக்கறயா? – அவ இன்னும் தூங்கியிருக்க மாட்டாடி.”
“நம்பளை ஆளை விடுப்பா நீ, எனக்கு தூக்கம் வருது. காலையிலேயே அம்மா, நான் உன் கூட கூட்டு சேர்ந்துகிட்டு அம்மாவுக்கு எதிரா சதி பண்றேன்னு என் மேல கோவப்பட்டா.” அவள் எழுந்தாள்.
“மீனா குட்டி, என்னை நட்டாத்துல வுட்டுட்டு போறீயேடி, என்ன பண்ணலாம்ன்னு அட்லீஸ்ட் ஒரு ஐடியாவாது குடுடி” அவன் கெஞ்சலாக பேசினான்.

“அண்ணா, தலைக்கு மேல வெள்ளம் போயாச்சு, பயந்து என்னடா பிரயோஜனம். காலையில அந்த ரகுராமனை பாத்து பேசேன். அவருதான் நல்லபடியா பேசறாருங்கறே; சுகன்யா ரூம்ல தான் அவரு தங்கியிருக்கப் போறாரு; நீ போய் பாத்துட்டு வா, உன் ஆளையும் பாத்து ஒரு வணக்கம் போட்டுட்டு வந்த மாதிரி இருக்கும். அவளும் உன்னைப் பாத்தாள்ன்னா, அவளுக்கு மிச்சம் இருக்கற கோபமும் போயிடும்
“ அவள் அவனைப் பார்த்து கிண்டலாக கண்ணடித்தாள்.
“அவர் சொல்றதை பொறுமையா கேட்டுட்டு வந்து அப்பாகிட்ட சொல்லு; அப்படி அவரு நம்ம அப்பாவை பாக்கணும்ன்னு சொன்னா, ஒரு பத்து நாளைக்கு பொறுத்துக்க சொல்லு. அதுக்குள்ள நம்ப அம்மா கோபம் தணிஞ்சிடும். ஜானகியும் தான் உன்னை வேணான்னுட்டா; மிஞ்சியிருக்கறது சுகன்யாதான்;” அவள் மீண்டும் நமுட்டு சிரிப்பு சிரித்தாள்.