கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 7 19

“மீனா வர மாதிரி இருக்கு; பேசாம சாப்பிடு, எதுவாயிருந்தாலும் நம்ப ரூம்ல போய் பேசிக்கலாம்,” நடராஜன் அவள் வலது தொடையை அழுத்தினார். வெரண்டாவில் வெறும் தரையில் படுத்திருந்த செல்வாவிடம் தட்டில் நாலு இட்லியையும் சட்டினியையும் வைத்துக் கொடுத்துவிட்டு மீனா அவன் பக்கத்திலேயே உட்க்கார்ந்து தானும் சாப்பிட ஆரம்பித்தாள்.
“அண்ணா, போன்ல யார்கிட்ட சொன்னே நீ – எனக்கு சுகன்யான்னு யாரையும் தெரியாதுன்னு – அண்ணியோட கோவம் தீந்து போச்சா? சுகன்யாதான் கால் பண்ணாளா?” அவள் அவனை பார்த்து கண்ணடித்தாள்.
“மீனா என்னை சும்மா வம்புக்கிழுக்காதடி, என் மூடு சரியில்லை அப்புறம் நான் முரடனாயிடுவேன்”

“என்னடா” சுந்தரி சற்றே பதறினாள்.
“ஒண்ணுமில்லே அக்கா … செல்வாவுக்கு சுகன்யான்னு யாரையும் தெரியாதாம்” அவர் தன் மருமளைப் பார்த்து புன்னகைத்தார்.
“காலையில மீனா எனக்கு கால் பண்ணி – நான் செல்வாவோட தங்கை பேசறேன்னு சொன்னா – நான் சொன்னேன் செல்வான்னு எனக்கு யாரையும் தெரியாதுன்னு” சுகன்யா களையிழந்த முகத்துடன் முனகினாள்.
“மாமா, செல்வா என்ன சொல்றான்?” சுகன்யா அவர் முகத்தை ஆவலுடன் பார்த்தாள்.
“சுகா, நீ காலையில அவனைத் தெரியாதுன்னு சொன்னே, அவன் மாலையில உன்னைத் தெரியாதுங்கறான். இதைத் தவிர அவன் வேற எதுவும் பேசலை. உங்க ரெண்டு பேருக்கிட்டயும் முதிர்ச்சியில்லை. ஒருத்தருக்கொருத்தர் சின்னப்பிள்ளைத்தனமா சண்டை போட்டுகிட்டு இருக்கீங்க.”
“மாமா, அவங்க வீட்டுக்கு நீங்க போனா நானும் வரணுமா? அவனோட அம்மாவை நினைச்சா எனக்கு பயமா இருக்கு.”
“உரல்ல தலையை குடுத்துட்டு உலக்கைக்கு பயந்தா முடியுமடா கண்ணு?” அவர் உரக்கச் சிரித்தார்.
“என்னடா ரகு, நாளைக்கு அந்த பையன் போன் பண்ணுவானா?”சுந்தரி சந்தேகமாக இழுத்தாள்.
“என்னாக்கா பேசறே, நீ ஏன் டென்ஷன் ஆகறே? இவ அப்பா மேல இவளுக்கு ஆறாத கோபம், தீராத கோபம் யாருக்கு லாபம்? உன் பொண்ணு கோபத்துல புத்தி கெட்டுப்போய் அவனை அர்த்தமில்லாம கத்திட்டு வந்துட்டா? அதோட நின்னாளா? சமாதானமா பேசின அவன் தங்கச்சி கிட்ட அவனை எனக்கு தெரியாதுன்னு ரவுசு பண்ணா, இப்ப அந்த காளை தலையை ஆட்டி என்னை முட்டப்பாக்குது. அவன் இவளை கட்டிக்க மாட்டேன்னு நேரா இவகிட்ட சொன்னானா? இல்லயே? நம்ம பொண்ணை கட்டிக்க அவனுக்கு கசக்குதா? இதை வெச்சுத்தான் நான் சொல்றேன்; அவன் நாளைக்கு கண்டிப்பா நாம சொல்ற இடத்துக்கு வருவான் பாரு.”
“அக்கா, ஒரு வேளை நீ நினைக்கற மாதிரி அவன் வராமா இருக்கறதுக்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கு; அவன் தலையை ஆட்டி தன் கொம்பால நம்பளை முட்ட வர்றதுக்கு சுகா தான் இடம் குடுத்துட்டா? இவதானே சொல்லிட்டு வந்திருக்கா, நீயும் வேணாம் உன் கல்யாணமும் வேணாம்ன்னு?”
“அப்படி அவன் நாளைக்கு வரல்லேன்னா, நான் நேரா அவனோட அப்பன் கிட்ட போயிடறேன். நல்லத்தனமா பேசிப் பாக்கறேன், மசியலனா; உனக்காக ஒரு தரம் தூக்கின அருவாளை, இவளுக்காக ஒரு தரம் தூக்கிட வேண்டியதுதான்?” ரகு குலுங்கி குலுங்கி சிரித்தார். அவர் தோளில் தன் தலையைச் சாய்த்து கொண்டிருந்த சுகன்யாவின் உடல் லேசாக நடுங்கியது, இது எங்கே போய் முடியும்? என்னால எத்தனை பேருக்கு பிரச்சனை? அவள் உடல் நடுங்கியதை உணர்ந்த ரகு,
“சுகா கவலைப்படாதேம்மா எல்லாம் நல்லபடியா நடக்கும்ன்னு நம்புவோம். நீ போய் படுத்து நிம்மதியா தூங்கு; மீதியை காலையில பாத்துக்கலாம்.”அவர் சிரித்தார். அம்மாவின் முதுகு பக்கமாக ஒருக்களித்து படுத்து தன் வலக்கையால் அவள் இடுப்பை கட்டிக்கொண்ட சுகன்யாவிற்கு லேசில் தூக்கம் வரவில்லை. அவள் தூங்கவும் இல்லை; விழித்திருக்கவும் இல்லை; இரண்டும் கெட்டான் நிலையில் அவள் இமைகள் மூடியிருந்தன; ஆனால் மனம் மட்டும் இன்னும் அயராமல் விழித்திருந்து பட்டாம்பூச்சியாக அவள் எண்ணச் சோலையில் இறக்கை அடித்து பறந்து கொண்டிருந்தது. அம்மா சரியாத்தான் கேட்டா? அவ கேட்ட ஒரு கேள்விக்கு கூட என்னால பதில் சொல்லமுடியலயே; செல்வா இன்ஸல்ட் பண்ணிட்டான்ற கோபத்துல என்னைப் பாக்காதே, எங்கிட்ட பேசாதேன்னு சொல்லிட்டு வந்துட்டேனே? செல்வாவை என்னால அவ்வளவு சுலபத்துல மறந்துட முடியுமா? இந்த மனசு பகல்லே ஒண்ணு பேச சொல்லிச்சு; யோசிக்காம பேசிட்டேன்; இப்ப ராத்திரியில ஓஞ்சு படுத்த பின்னாடி, அதே பாழும் மனசு சும்மா இருக்குதா? அவனையே திரும்ப திரும்ப நெனைக்குது. ச்சை … அவனை திட்டிட்டு வந்ததுக்கு அப்புறம்தான் அவன் ஞாபகம் அதிகமா வருது? நமக்கு ரெண்டு மனசு இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்? ஒரு மனசால அவனைத் திட்டலாம்? ஒரு மனசால அவனை சீண்டி சிரிச்சு சிரிச்சு ஜாலியா இருக்கலாம். நான் காலையில அவனை அவ்வளவு தூரம் வாரி கொட்டி திட்டினேன்; பேசாமதானே இருந்தான். ஒரு வார்த்தை பேசலையே? அவன் என்னை நேசிக்கவேதானே என்னைத் திருப்பித் திட்டலை. அப்படின்னா இப்ப ஏன் என்னை தெரியாதுன்னு நான் சொன்ன அதே பஞ்ச் டயலாக்கை மாமாகிட்ட சொல்றான்?

அவனும் என்னை மாதிரி மனுஷன் தானே? அவனுக்கு மட்டும் கோவம் வராதா? மீனாதான் சொன்னாளே அவன் அம்மா வேற அவனை சண்டைப் போட்டு திட்டினான்னு; அவன் அப்பா சும்மா இருக்கார்ன்னா அவர் எங்க காதலை ஆதரிக்கிறாரா? பாவம் அவன் மிருதங்கம் மாதிரி எங்கிட்டவும் ஒதை வாங்கறான்; அவன் அம்மாகிட்டவும் ஒதை வாங்கறான். உன்னை ஆசையா பாக்க வந்திருக்கேன்னு சொன்னான். அப்பாவை பத்தி கேட்டுட்டான்னு, அவனை மூட்டைப் பூச்சியை நசுக்கறமாதிரி அவனைப் பேசவிடாம, என்னை பேச விடுன்னு கத்திட்டு வந்துட்டேன்.