எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 9 54

“தெரியலையா..?? என்ன சொல்ற..?? எனக்கு புரியல..!!”

“அ..அசோக்..”

“ம்ம்..”

“உ..உன்கிட்ட.. ஒன்னு சொல்லனும்..”

“என்ன..??”

“அ..அது.. அ..அதை எப்படி..”

மீரா சொல்ல வந்ததை சொல்லாமல்.. தயங்கி தயங்கி இழுத்தாள்..!! பிறகு அதுவுமில்லாமல் சில வினாடிகள் அவள் அமைதியாகிப் போக, அசோக்கிற்கு கொட்டாவி வந்தது..!!

“ஹ்ஹாஹாஹா.. என்ன மீரா.. சீக்கிரம் சொல்லு..”

“தூக்கம் வருதா உனக்கு..??”

“ம்ம்..”

“சரி.. தூங்கு..”

“நீ ஏதோ சொல்ல வந்த..??”

“காலைல சொல்றேன்..!!”

அவ்வளவுதான்.. காலை கட் செய்துவிட்டாள்..!! அசோக் சில வினாடிகள் எதுவும் புரியாமல் தலையை சொறிந்தான்.. பிறகு அவனது வாயைக் கிழித்துக்கொண்டு, பெரிதாக ஒரு கொட்டாவி வெளிப்பட.. கண்கள் செருகிப்போய் பொத்தென மெத்தையில் கவிழ்ந்தான்..!!

தனது மனதில் ஏற்பட்ட குழப்பத்தையும் வியப்பையும் பற்றி.. மீராவிடம் கேட்கவும் அசோக் தவறவில்லை.. அவ்வப்போது அவளிடம் அதுபற்றி பேசுவான்..!! ஆனால்.. அப்படி அவன் பேசியதால் ஏதாவது பிரயோஜனம் உண்டா என்று கேட்டால்.. இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.. தொடர்ந்து ஒரு குழப்ப நிலையிலேதான் அவன் இருக்க வேண்டி இருந்தது..!! இப்படி நள்ளிரவு மீரா கால் செய்தாள் அல்லவா.. அதற்கு அடுத்த நாள் கூட.. அசோக் மீராவிடம் அவனுடைய குழப்பம் பற்றிய பேச்சை எடுத்தான்..!!

“மீரா..”

“ம்ம்..”

“நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க கூடாது..!!”

“எ..என்ன..”

“உ..உனக்கு ஏதாவது பிரச்னையா..??”

“ஹ்ஹ.. ஏன் அப்படி கேக்குற..??”

“எனக்கு அந்த மாதிரி தோணுச்சு..!!”

“அதெல்லாம் ஒண்ணுல்ல.. எ..எனக்கு என்ன பிரச்னை.. ஐ’ம் ஆல்ரைட்..!!”

“இல்ல.. நீ முன்னாடி மாதிரி இல்ல..!!”

“ஓ.. வேற எப்படி இருக்குறேன்..??”
“உன்னோட யூஷுவல் சிரிப்பு, கேலி, கிண்டல்.. எதுவுமே இப்போ உன்கிட்ட இல்ல..!! ரொம்ப அமைதியா.. ரொம்ப சாஃப்டா மாறிட்ட..!! எந்த நேரமும் எதையாவது சீரியஸா யோசிச்சுட்டே இருக்குற.. மூஞ்சில ஒரு களையே இல்ல.. ஏதோ சோகத்துல இருக்குற மாதிரியே இருக்குற..??”

“ப்ச்.. அது ஒன்னும் இல்ல.. ஜாப்க்கு ட்ரை பண்ணிட்டு இருக்கேன்ல.. அதான்..!! அப்பா தயவு இல்லாம சொந்தக்கால்ல நிக்கனும்னு வைராக்கியம்.. நல்ல வேலையா கெடைக்கனுமேனு கவலை.. லைஃப் பத்தி திடீர்னு ஒரு பயம்.. அவ்வளவுதான்..!!”

“நெஜமா அவ்வளவுதானா..??” அசோக் நம்பிக்கையில்லாமல் கேட்க,

“அவ்வளவுதான்.. வேற என்ன..??” மீரா கூலாக திருப்பி கேட்டாள்.

“ஹ்ம்ம்ம்..!! சரி.. அதைவிடு.. நேத்து நைட்டு எதுக்கு கால் பண்ணின..??”

“அ..அதான் சொன்னனே.. சும்மா..!!”

“இல்ல… நீ எதோ சொல்ல வந்த..”

“என்ன சொல்ல வந்தேன்..??”

“ப்ச்.. என்கிட்ட ஏதோ சொல்லனும்னு ஆரம்பிச்சியே..??”

“அ..அதுவா..?? அ..அது ஒன்னுல்ல.. ஜஸ்ட் குட் நைட் சொல்ல வந்தேன்..!!”