எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 9 54

“ஹ்ம்ம்.. நீ சொல்றது சரிதான்.. இருந்தாலும் மனசு கேக்கலை..!! அந்த போர்ட் பார்த்ததும் எனக்கு இன்னொரு ஆசை வேற..!!”

“என்ன..??”

“கூடிய சீக்கிரம்.. அதே போர்ட்ல.. நீ டைரக்ட் பண்ணப்போற மூவியோட அட்வர்டைஸ்மன்ட் வரணும்.. ‘எண்ணமும், இயக்கமும் அசோக்’னு.. பெருசா உன் பேரோட..!! காலைல எந்திரிச்சதும்.. அந்த போர்ட்ல நான் கண்ணு முழிக்கணும்..!!”

உதிர்த்த ஒவ்வொரு வார்த்தையிலும்.. உண்மையான ஆசை தெறிக்குமாறு.. மீரா அப்படி சொல்ல.. அசோக் அவளுடைய அழகு முகத்தையே.. அன்பு பொங்கப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான்..!!

அப்போதுதான் மீரா திடீரென.. ஜன்னலுக்கு வெளியே கை நீட்டி.. குரலில் ஒரு புது உற்சாகத்துடன் கத்தினாள்..!!

“ஹேய் அசோக்.. அங்க பாரு அங்க பாரு.. அதேதான்.. அதைத்தான் சொன்னேன்.. ஸேம் ஸ்டில்.. ஸேம் சைஸ்..!!”

அசோக் இப்போது தலையை குனிந்து பேருந்துக்கு வெளியே பார்த்தான். அந்த ஃப்ளக்ஸ் போர்ட் பார்வையில் பட்டது. மழைத்தூறலின் பின்னணியும், மஞ்சள் விளக்கின் வெளிச்சமுமாய்.. கூரிய பார்வையுடன் சாலை வெறிக்கும் அவனும், குதுகலத்துடன் துப்பட்டா விரிக்கும் அவளுமாய்.. சினம் கொண்ட சிங்கம் போல, சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது அந்த சிவப்பு நிற கவாஸாகி..!!

“காதலின் முடிவிலா பயணம்.. கவாஸாகியுடன்..!!!!” என்ற வார்த்தைகள் பொன்னிறத்தில் ஜொலித்தன.

“எப்டி..??? செமையா இருக்குல..???”

முகமெல்லாம் பூரிப்பாக.. குரலெல்லாம் உற்சாகமாக.. குழந்தைக்கே உரிய சந்தோஷத்துடன் மீரா அவ்வாறு கேட்க.. ‘எப்போதிருந்தடி நீ இப்படி மாறிப்போனாய்..??’ என்பது போல.. அசோக் அவளையே வித்தியாசமாக பார்த்தான்..!!

மீராவிற்கு அசோக்கிடமும், அவனுடைய தொழில் மீதும் மட்டும் புதிதாக அக்கறை பிறக்கவில்லை..!! முன்பெல்லாம் அசோக்கின் நண்பர்களை அவள் மதிக்கவே மாட்டாள். அறிமுகம் செய்து வைத்த நாளுக்கப்புறம், அவர்களை அருகிலேயே அவள் அண்ட விடுவதில்லை. அவள் முன்பே சொல்லியிருந்த மாதிரி, எப்போதும் தூரத்திலேயே அவர்களை நிறுத்தி வைத்திருப்பாள். சில நேரங்களில்.. அவள் ஃபுட் கோர்ட்டுக்கு தாமதமாக வருகிற தருணங்களில்.. அசோக் தன் நண்பர்களுடன் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்திருந்தால்.. அவர்களை கடந்து செல்கிற மீரா, ஒரு முறைப்பான பார்வையுடனே.. ‘ம்ம்.. எந்திரிச்சு வா..’ என்று அந்த பார்வையாலேயே அவனுக்கு சொல்லி.. அவனை மாத்திரம் தனியாக கிளப்பிக் கொண்டு செல்வாள்..!!

ஆனால் இப்போதெல்லாம்.. இவளும் அவர்களுடன் சேர்ந்து கொள்கிறாள்.. அவர்களுடன் சகஜமாக பேசிக்கொண்டே உணவருந்துகிறாள்..!!

“இன்னைக்கு என்ன.. சாலமன் அண்ணாவ ஆளை காணோம்..??” மீராவின் கேள்விக்கு,

“அவனுக்கு ஏதோ உடம்பு சரி இல்ல..!!” கிஷோர் பதில் சொன்னான்.

“ஓ..!! என்னாச்சு..??”

“ஃபீவர்னு நெனைக்கிறேன்..!!”

“என்னது.. நெனைக்கிறீங்களா..?? என்ன ஃப்ரண்ட்ஸ் நீங்க..??” கிஷோரை சற்றே கடிந்து கொண்ட மீரா, வேணுவிடம் திரும்பி,

“வேணு அண்ணா.. உங்க செல்ஃபோன் கொஞ்சம் கொடுங்களேன்..!!” என்று உரிமையாக அவனுடைய செல்போனை வாங்கி, சாலமனுக்கு கால் செய்தாள்.

“ஆங்.. அண்ணா.. நான் மீரா பேசுறேன்..!!”

“உடம்பு சரியில்லன்னு சொன்னாங்க.. என்னண்ணா ஆச்சு..??”

“ஓ..!! டாக்டர்ட்ட போனீங்களா..??”

“ஹையோ.. ஏண்ணா இப்படி பண்றீங்க..??”

“சரி.. நான் ஒன்னு சொல்றேன் கேக்குறீங்களா..?? ஒரு டேப்லட் சொல்றேன்.. அதை இப்போ ஒன்னு.. நைட் ஒன்னு போடுங்க.. காலைல எல்லாம் சரியாயிடும்..!!”

மீரா சாலமனுக்கு ஃபோனிலேயே மருந்து பரிந்துரைக்க.. வேணு, கிஷோருடன் சேர்ந்து.. அசோக்குமே அவளை வியப்பாக பார்த்தான்..!!

ஆமாம்..!! மீராவின் இந்த மாதிரியான மாற்றங்கள்.. வியப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதாகவே அசோக்கிற்கு இருந்தன..!! அவனுக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்துகிற மாதிரி.. ஒருநாள் நள்ளிரவு அசோக்கிற்கு கால் செய்தாள்..!! அதற்குமுன்பே ஆழ்ந்த தூக்கத்தில் அமிழ்ந்திருந்த அசோக்.. உறக்கம் கலைந்தும், கலக்கம் களையாமலே.. கால் பிக்கப் செய்து..

“ஹலோ..!!” சொன்னான்.

“என்னப்பா தூங்கிட்டியா..??” அடுத்த முனையில் மீராவின் குரல் மிக மென்மையாக ஒலித்தது.

“ம்ம்ம்ம்..!! எ..என்னாச்சு.. இந்த நேரத்துல கால் பண்ணிருக்குற..??”

“ஒ..ஒன்னுல்ல.. சு..சும்மா..”

“ஹ்ம்.. இன்னும் தூங்கலையா நீ..??”

“இ..இல்ல.. தூக்கம் வரல..!!”

“ஏன்..??”

“தெரியல..!!”