எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 9 55

அடுத்த நாள் காலை.. இன்னும் இரண்டு மணி நேரத்துக்குள், வானத்தின் மையத்தை எட்டி விடவேண்டும் என்று.. சூரியன் மெல்ல மேல்நோக்கி ஊர்ந்து கொண்டிருந்த நேரம்..!! அந்த சூரியனை சுற்றிலும் கருப்பு நிற குளிர் மேகங்கள் சூழ்ந்து கொண்டிருக்க.. வெப்பத்தின் உக்கிரம் வலுவிழந்து போய்.. சற்றே குளுமையான வானிலை பூமியில்..!! மாலை அதற்குள் வந்துவிட்டதோ என மயக்கம் கொள்கிற அளவுக்கு.. மங்கிப்போன வெளிச்சமே எங்கெங்கிலும்..!! காற்றிலும் ஈரப்பதம் மிகுந்து போயிருந்தது.. ஜிலுஜிலுவென ஊருக்குள் அலைபாய்ந்து.. மரங்களையும் மனிதர்களையும் இதமாய் வருடிச் சென்றது..!!

அசோக்கின் பைக் விருகம்பாக்கம் தாண்டி விரைந்து கொண்டிருந்தது. மந்தமான போக்குவரத்துடன் கூடிய மாநில நெடுஞ்சாலையில், மிதமான வேகத்தில் சீறிக் கொண்டிருந்தது. அசோக்கின் கண்கள் சாலையில் பதிந்திருக்க, அவனது தலைகவச வார்ப்பட்டை காதோரமாய் தடதடத்துக் கொண்டிருந்தது. பில்லியனில் அமர்ந்திருந்த மீராவின் கை அசோக்கின் தோளில் படர்ந்திருக்க, அவளது கூந்தல் குளிர்காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது. அசோக்கின் உதடுகள் ஒரு புன்னகையை பூசியிருக்க, மீராவின் முகமோ ஒருவித குழப்பத்தில் குளித்திருந்தது.

“ப்ளீஸ் அசோக்.. எங்க போறோம்னு சொல்லு..!!”

“நோ.. இட்ஸ் சர்ப்ரைஸ்..!!”

“ப்ச்.. ப்ளீஸ் அசோக்..!!”

“ம்ஹூம்.. எத்தனை நாள் நீ இந்த மாதிரி என்னை மண்டை காய வச்சிருப்ப..?? இன்னைக்கு உன் மண்டை கொஞ்ச நேரம் காயட்டும்.. நான் சொல்ல மாட்டேன்..!!”

“இ..இங்க பாரு அசோக்.. மூவின்னா ஐ’ம் ரியல்லி ஸாரி.. மூவி பாக்குறதுக்குலாம் எனக்கு இப்போ சுத்தமா மூட் இல்ல.. ஓகே..??”

“மூவிலாம் இல்ல..!!”

“அப்புறம்..?? வே..வேற எங்கதான் போற..?? இந்தப்பக்கம் நல்ல ரெஸ்டாரன்ட் கூட இல்ல..??”

“நீயே கெஸ் பண்ணு..!!”

“ப்ளீஸ் அசோக்..!!”

“ம்ஹூம்..!!” அசோக் பிடிவாதமாக இருக்க, மீரா இப்போது பொறுமை இழந்தாள்.

“ப்ச்..!! இப்போ நீ சொல்லப் போறியா.. இல்ல நான் பைக்ல இருந்து குதிக்கட்டுமா.?? ஐ’ம் சீரியஸ்..!!” என்றவாறே அவள் எழ முயல, அசோக்கிடம் உடனடியாய் ஒரு பதற்றம்.

“ஹேய்ய்ய்.. இரு இரு.. சொல்றேன்.. நீ பாட்டுக்கு குதிச்சாலும் குதிச்சிடப் போற..!!”

“அப்போ சொல்லு..!! எங்க போயிட்டு இருக்குறோம்..??”

“ஹ்ம்ம்.. எப்படி சொல்றது.. இந்த ஸ்பெஷல் டே’யை செலிப்ரேட் பண்ண போயிட்டு இருக்குறோம்..??” அசோக் உற்சாகமாக சொல்ல, மீராவுக்கு நெற்றி சுருங்கியது.

“ஸ்பெஷல் டே’யா..?? எ..என்ன ஸ்பெஷல் இன்னைக்கு..??”

“ஹேய்.. கமான்.. நடிக்காத..!! இன்னைக்கு என்ன நாள்னு ஞாபகம் இல்ல..??”

“ம்ஹூம்.. இல்ல..!!”

“ஹேய் மீரா.. இன்னைக்கு பிப்ரவரி – 14.. வேலண்டைன்ஸ் டே..!!”

“ஓ..!!” அசோக்கின் குரலில் இருந்த குதுகலம், மீராவிடம் துளியும் இல்லை.

“அது மட்டும் இல்ல.. யு நோ ஒன்திங்.. நாம ரெண்டு பேரும் ஐ லவ் யூ சொல்லிக்கிட்டு.. இன்னைக்கோட நூறு நாள் ஆகிப் போச்சு..!! என்ன ஒரு கோ-இன்சிடன்ஸ்.. இல்ல..??”

“ஹ்ம்ம்..!!”

“இப்போ சொல்லு.. இன்னைக்கு ஸ்பெஷல் டே’யா.. இல்லையா..??”

“ம்ம்.. ஸ்பெஷல்தான்..!!”

“ஆர்டினரி ஸ்பெஷல் இல்ல மீரா.. இட்ஸ் அல்ட்ரா ஸ்பெஷல்.. ஹாஹா..!!”

“அதுசரி.. அதுக்கு இப்போ.. என்னை எங்க கூட்டிட்டு போயிட்டு இருக்குற..??”

“அது சர்ப்ரைஸ்..!! சொல்ல மாட்டேன்..!!”

“ப்ளீஸ் அசோக்.. சொல்லு..!!”

“ப்ச்.. இன்னும் அஞ்சு நிமிஷத்துல உனக்கே தெரிஞ்சிடும் மீரா.. கொஞ்ச நேரம் பல்லை கடிச்சுட்டு உக்காந்திரு..!!”