எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 8 43

“எ..என்ன மீரா..??”

“வா..” முடிக்கும் முன்பே ‘உப்ஹ்’ என்று அவளுக்கு எதுக்களிப்பு ஏற்பட, முகத்தை சுருக்கி கண்களை மூடிக் கொண்டாள்.

“வாட்டர் வேணுமா..??”

மீரா இப்போது பேசவில்லை. ‘ம்ஹூம்’ என்பது போல தலையை அசைத்தவள், முகத்துக்கு முன் கையை வைத்து சுழற்றி சைகையால் ஏதோ சொல்ல முயன்றாள். அசோக்குக்கு புரியவில்லை.

“பு.புரியல மீரா.. என்னன்னு வாயை தெறந்து சொன்னாத்தான புரியும்..??”

“வா..வாமிட்..”

சொல்லி முடிக்கும் முன்பே.. மீராவின் நெஞ்சுக்குள் இருந்து ஒரு உந்துதல்..!! மார்பின் மீது கைவைத்து பிடித்துக் கொண்டவள்.. ‘ஓவ்..!!’ என்று.. வாய் திறந்து வாந்தியே எடுத்துவிட்டாள்.. அப்படியே தன் முன் நின்ற அசோக்கின் மீது..!! அவன் வலுக்கட்டாயமாக அவளுடைய வாய்க்குள் திணித்த உணவெல்லாம்.. ஆல்கஹாலுடன் சேர்ந்து வாந்தியாக வெளிப்பட்டிருந்தது.. அசோக்கின் முகம்.. அவனுடைய டி-ஷர்ட்.. பேன்ட்.. எல்லாம்..!! செய்வதறியாது திகைத்த அசோக்.. முகத்தை ஒருமாதிரி சுளித்தவாறு.. பரிதாபமாக நின்றிருந்தான்..!!

“ஸாரி அசோக்.. ஸாரி..!!”

குற்ற உணர்ச்சியுடன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே.. மீராவுக்கு மீண்டும் குடலை புரட்ட.. வாயை மூடிக்கொண்டு ‘உப்ஹ்’ என்று மீண்டும் ஒரு குமட்டல்..!! அவள் திரும்பவும் வாந்தி எடுக்கப் போகிறாள் என்பதை.. இந்தமுறை அசோக் முன்கூட்டியே புரிந்து கொண்டான்..!! ஆனால்.. நின்ற இடத்தை விட்டு அவன் அசையவில்லை.. கண்களை மட்டும் இறுக்கி மூடிக் கொண்டான்..!!

“ஓவ்வ்..!!!!” மீரா மறுபடியும் அவன் மீது வாமிட் செய்தாள்.

அடுத்த நாள் காலை..

மீராவுக்குத்தான் முதலில் விழிப்பு வந்தது. விழிகளை திறப்பதற்கு முன்பே ‘வின்வின்’என்று தலை வலிப்பதை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது. தலையை பிடித்துக்கொண்டு, கண்களை சுருக்கிப் பார்த்தாள். இடம் புதிதாக இருப்பதை அறிந்து ஒருகணம் துணுக்குற்றாள். இரவு மூன்று ரிப்பீட் வரை அவளுக்கு ஞாபகம் இருந்தது. மற்றவை எல்லாம் நினைவடுக்குகளில் சரியாக பதிந்திருக்கவில்லை.

‘என்ன ஆயிற்று அதன் பிறகு..?? எப்படி இங்கே வந்தேன்..??’

மீரா குழப்பத்துடனே தலையை திருப்ப, கீழே தரையில் படுத்திருந்த அசோக் பார்வையில் பட்டான். இவளுக்கு முதுகு காட்டி படுத்திருந்தான். மேலே போற்றியிருந்த போர்வை விலகியிருந்தது. இடுப்பில் ஒரு ஜட்டியை தவிர, வேறெதுவும் அவன் அணிந்திருக்கவில்லை. குளிரை தாங்க முடியவில்லை போலிருக்கிறது. கால்கள் இரண்டையும் மடக்கி வைத்து, கைகள் ரெண்டையும் ஒன்றாக்கி தொடைகளுக்குள் செருகி, குழந்தை போல படுத்திருந்தான்.

வெறும் ஜட்டியுடன் அவன் படுத்திருந்த கோலம்.. மீராவின் மூளையை சுரீர் என்று தாக்கியது.. சுருசுருவென ஒரு ஆத்திரம் அவளுக்குள்.. என்ன நடந்தது என்று நினைவில் இல்லாத குழப்பம்.. ஏதாவது நடந்திருக்குமோ என்று ஒரு பயம்.. தனது மயக்க நிலையை உபயோகப்படுத்தியிருப்பானோ என்று ஒரு சந்தேகம்.. எல்லாம் ஒன்று சேர்ந்து அவளை சூடாக்கி விட.. படுக்கையில் இருந்து விருட்டென எழுந்தாள்..!! கோல்கீப்பர் ஃபுட்பாலை ஓடிவந்து உதைப்பது போல.. அசோக்கின் புட்டத்திலேயே ஓங்கி ஒரு உதை விட்டாள்..!!

“எந்திரிடா..!!!”

“ஆஆஆஆ..!!”

அசோக் பதறியடித்துக் கொண்டு எழுந்தான். எழுந்ததுமே.. தன் எதிரில் மீரா நிற்பதையும்.. தன் உடலில் ஜட்டி தவிர வேறு ஆடை இல்லை என்பதையும்.. உடனடியாய் உணர்ந்து கொண்டான்..!! வெட்கத்தில் கூசிப்போய்.. தரையில் கிடந்த போர்வையை வாரி சுருட்டி எடுத்தான்.. தன் உடம்பில் அவசரமாய் சுற்றிக் கொண்டான்..!! மீராவின் பார்வைக்கு பயந்து.. சற்றே நகர்ந்து.. சுவரோரமாய் சென்று பம்மினான்..!!

“என்னடா பண்ணின என்னை..??” மீரா சீற்றமாக கேட்டாள்.

“என்ன பண்ணேன்னா..??”

“நைட் என்ன பண்ணின என்னை..??”

“நைட்டா..?? ஒ..ஒன்னும் பண்ணலையே..??”

“ஏய்..!! பொய் சொன்ன.. அப்படியே கழுத்தை நெறிச்சு கொன்னுருவேன்..!! உண்மையை சொல்லு..!!”

“ஐயோ.. சத்தியமா மீரா.. ஒன்னும் பண்ணல..!! நைட்டு உனக்கு ரொம்ப ஓவராயிடுச்சு.. உன்னால நடக்க கூட முடியல.. அதான் இங்கயே ரூம் எடுத்து.. உன்னை அந்த கட்டில்ல படுக்க வச்சுட்டு.. நான் தரைல படுத்துக்கிட்டேன்.. அவ்வளவுதான்.. வேற எதுவும் பண்ணல..!!”

“அப்புறம் ஏன் ட்ரஸ் இல்லாம கெடக்குற..??”

“நான்தான ட்ரஸ் இல்லாம கெடக்குறேன்.. நீ ட்ரஸ் இல்லாம கெடந்தாத்தான் தப்பு..!!”

“ப்ச்.. கேட்டதுக்கு பதில் சொல்லு.. எங்க உன் ட்ரஸ்லாம்..??”

“அதோ.. அங்க..” சேரில் காய்ந்து கொண்டு கிடந்த உடைகளை நோக்கி, அசோக் கை நீட்டினான். மீராவும் திரும்பி பார்த்தாள்.

“அதை எதுக்கு அங்க அவுத்து போட்ருக்குற..??” மீரா இன்னுமே கோவம் குறையாமல் கேட்க,

“ம்ம்.. வேண்டுதலு..!!” அசோக் சலிப்பாக சொன்னான்.

“இப்போ அறை வாங்க போற நீ..!!”

“ஹையோ..!! நைட்டு என் ட்ரஸ் ஃபுல்லா நீ வாமிட் பண்ணிட்ட.. போதுமா..?? பயங்கர ஸ்மெல்.. அதோட எப்படி படுக்குறது.. அதான் அலசி காயப்போட்டுட்டு படுத்திருந்தேன்..!!”

“ஓ..!! வாமிட் பண்ணிட்டனா..??”

3 Comments

  1. இந்த கதை ரொம்ப குழப்பமா இருக்கு !

  2. Mannichudnga ram story continue
    Panunga admin

  3. Mannichudnga ram story continue
    Panunga admin

Comments are closed.