“ஹாஹா..!!”
“ஓகே.. இந்த சந்தோஷத்தை கொண்டாட.. எனக்கு ஒரு ஜானி ரிப்பீட் சொல்லேன்..!!”
“ப்ச்.. போதும்.. ஏற்கனவே உனக்கு ரொம்ப ஓவராயிடுச்சு..!! சாப்பிட்டுட்டு கெளம்பலாம்.. நீ வேற வீட்டுக்கு போகணும்ல..??”
“ம்ஹூம்.. வீடு வேணாம்.. நோ வீடு.. வீடு எனக்கு புடிக்கல..!!”
“என்ன வெளையாடுறியா.. வீட்டுக்கு போகலனா உன்னை தேட மாட்டாங்க..??”
“தேட மாட்டாங்க.. வீட்ல யாரும் இல்ல.. நான் மட்டுந்தான்..!!”
“ஓ.. எங்க போயிருக்காங்க..??”
“ம்ம்ம்ம்.. ஊர்ல திருவிழா..!!”
“நீ போகலையா..??”
“போனேன்.. புடிக்கலன்னு நான் மட்டும் வந்துட்டேன்..!!”
“ஓஹோ.. திருவிழா போயிட்டுத்தான்.. மூணு நாளா மேடம் எனக்கு கால் பண்ணலையா..??”
“ம்ம்.. ஆமாம்..!!”
“ஹ்ம்ம்.. வீட்ல யாரும் இல்லன்னதும் தண்ணியடிக்க ஆசை வந்துடுச்சாக்கும்..??”
“ஹாஹா.. ஆமாம் ஆமாம்..!!” மீரா பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டினாள்.
“பரவால.. வீட்ல யாரும் இல்லனாலும் பரவால.. நான் கொண்டு போய் ட்ராப் பண்ணிர்றேன்..!! நீயாச்சு.. உன் வீடாச்சு..!!”
“ஏன்.. உன்கூட தங்க வச்சுக்க மாட்டியா..?? உன் ஆபீஸ்லதான் யாரும் இருக்க மாட்டாங்களே..??” மீரா ஒருவித குறும்பு சிரிப்புடன் கேட்டாள்.
“ஹ்ஹ.. நீ எதுக்கு இந்த கேள்வி கேக்குறேன்னு எனக்கு நல்லா தெரியும்..!! உனக்கு சந்தேகமே வேணாம்.. நான் ஒன்னும் அலைஞ்சான் இல்ல.. எனக்கு அப்படிலாம் எதும் ஆசை இல்ல.. எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் நடந்தா போதும்..!!”
“ச்சோ.. ச்ச்வீட்..!!”
“ஹாஹா.. போதும் போதும்.. இன்னைக்கு நெறைய ‘ச்சோ ச்ச்வீட்’ சொல்லிட்ட..!!”
சொல்லிவிட்டு அசோக் புன்னகைத்தான். மீராவும் போதை ஏறிய கண்களுடன், பற்கள் தெரிய பளீரென்று சிரித்தாள். அப்புறம் திடீரென முகத்தை சீரியசாக மாற்றிக்கொண்டு,
இந்த கதை ரொம்ப குழப்பமா இருக்கு !
Mannichudnga ram story continue
Panunga admin
Mannichudnga ram story continue
Panunga admin