எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 12 49

இருவரும் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தனர்..!! வெளியே இப்போது கதிரவன் காணாமல் போயிருக்க.. காரிருள் வந்து உலகத்தை கவ்வியிருந்தது.. ஆங்காங்கே ஒளிர்ந்த மின்விளக்குகள்.. அந்த இருளை நீக்க முடிந்த அளவுக்கு முயன்று கொண்டிருந்தன..!! ஸ்ரீனிவாச பிரசாத் ஜீப்பில் ஏறி அமர்ந்து.. கதவை அறைந்து சாத்தினார்.. அசோக்கும் வண்டியில் ஏறி, அவருக்கு அருகே அமர்ந்துகொள்ள.. ஆக்சிலரேட்டரை மிதித்து ஜீப்பை கிளப்பினார்..!! வண்டி ஆர்காட் ரோட்டில் விரைந்து கொண்டிருந்தது.. ஸ்ரீனிவாச பிரசாத் எதுவுமே பேசாமல், ஸ்டியரிங்கை இப்படியும் அப்படியுமாய் வளைத்துக் கொண்டிருந்தார்..!! அவருடைய இறுகிப்போன முகத்தை.. சற்று மிரட்சியுடன் பார்த்தவாறே அசோக் சென்று கொண்டிருந்தான்..!!

“எ..எங்க ஸார் போறோம்..??”

என்று அவன் தயங்கி தயங்கி கேட்டதற்கு.. ஸ்ரீனிவாச பிரசாத் அவன் பக்கமாய் திரும்பி, ஒரு முறைப்பையே பதிலாக தந்தார்..!! அசோக்கும் அதற்கு மேல் அவரை எதுவும் கேட்கவில்லை..!! சாலையில் ஏகத்துக்கும் வெளிச்சத்தை தெளித்தவாறு.. சர்ரென எதிர்த்திசையில் பறக்கிற வாகனங்களையே.. வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்..!!

அதன்பிறகு ஒரு மணி நேரம் கழித்து.. நெல்சன் மாணிக்கம் சாலையில்.. சற்று ஒதுக்குப்புறமாக அமைந்திருக்கிற ஒரு தனியார் பார்..!! அரசின் அனுமதியும் பெறாமல்.. அதிக பிரபலமும் ஆகாமல்.. அமைதியும், அலங்கோலமுமாய் காட்சியளித்தது அந்த பார்..!! சுற்றியிருந்த சுவர்களில்.. சட்டை கழற்றிய சல்மான்கான்கள்.. கையில் சோடாவை வைத்துக்கொண்டு.. மறைமுகமாக விஸ்கிக்கு விளம்பரம் செய்தனர்..!! மூலையில் கிடந்த ஒரு டேபிளில்.. ஸ்ரீனிவாச பிரசாத்தும் அசோக்கும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர்..!! இருவருமே அல்ரெடி நிறைய ஆல்கஹாலை விழுங்கியிருந்தனர்..!!

“அ..அவ கண்ணு இருக்கே.. அ..அது.. அதை எப்படி சொல்றதுன்னு தெரியல.. அப்டியே பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கும்..!! எனக்கு கோவமானாலும் சரி.. சோகமானாலும் சரி.. அந்தக்கண்ணை பாத்துட்டா.. அவ்வளவுதான்.. அப்படியே எல்லாம் காணாம போயிரும்..!!”

“…………………………….”

“ஹ்ம்ம்… அ..அவளை எவ்ளோ லவ் பண்ணினேன் தெரியுமா..?? அவ மேல உசுரையே வச்சிருந்தேன்.. அவதான் என் பொண்டாட்டின்னு மனசுக்குள்ள அவ்வளவு கற்பனை..!! எ..எல்லாத்தையும்.. தூக்கிப்போட்டு மிதிச்சுட்டு போயிட்டா..!! அ..அப்டியே.. அப்டியே தூசி மாதிரி தட்டிவிட்டுட்டு போயிட்டா..!!”

“…………………………….”

“நல்லா தின்னுவா.. மெட்ராஸ்ல இருக்குற ஒரு ஹோட்டல் விடாம அவளுக்கு தீனி வாங்கிப் போட்டிருக்கேன்..!! பொடவை.. நகை.. லிப்ஸ்டிக்.. நெயில் பாலிஷ்.. லொட்டு.. லொசுக்கு.. மசுரு.. மட்டை..!!! ச்சை..!!!”

“…………………………….”

“இவளுகளலாம்.. நடுரோட்டுல ஓடவிட்டு.. அ..அப்டியே என்கவுன்டர் பண்ணனும்..!!”

“…………………………….”

“காதலிக்கிறப்போ தெரியலையா.. கட்டிப்புடிச்சு படுத்துக் கெடக்குறப்போ தெரியலையா..?? கல்யாணம்னு வந்தவுடனே மட்டும் கண்ணு தெரிஞ்சுடுச்சாக்கும்.. நான் போலீஸ்காரன்னு..!!”

“…………………………….””அந்த பன்னாடை நாயை பாக்குறதுக்கு பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இருந்தே.. போலீஸ் ஆகணும்னு ஆசை எனக்கு..!! திடீர்னு வந்து.. அப்பன் திட்றான்.. ஆத்தா வையிறான்னு மூக்கை சிந்தினா..??”

“அந்த பன்னாடை நாயை பாக்குறதுக்கு பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இருந்தே.. போலீஸ் ஆகணும்னு ஆசை எனக்கு..!! திடீர்னு வந்து.. அப்பன் திட்றான்.. ஆத்தா வையிறான்னு மூக்கை சிந்தினா..??”

Updated: June 14, 2021 — 8:33 am

1 Comment

  1. Super.i realy enjoyed.pls continued.dont stopped.

Comments are closed.