“பாக்கலைடா.. பாத்திருந்தாத்தான் வெலகிருப்பனே..??”
“ப்ச்.. அதை சொல்லலைடா..!!”
“அப்புறம்..??”
“என்ன ப்ராண்ட்ன்னு பாத்தியா..??”
“ம்க்கும்.. பின்னாடிருந்த அந்தப்புள்ள மூஞ்சை கூட சரியா பாக்க முடியலன்னு, நானே வெறுப்புல இருக்கேன்..??”
“அ..அது.. அது கவாஸாக்கி பைக்குடா..!!”
“ஸோ..??” சாலமன் கேள்வியாக அசோக்கை பார்க்க, அவனோ முகத்தில் ஒரு புதுவித பிரகாசத்துடன்
“கண்டுபுடிச்சிடலாம் மச்சி அவளை..!!” என்றவாறு, சாலமனின் புஜத்தை இறுகப் பற்றினான்.
“ஆஆஆஆ..!! கண்டுபுடிச்சிடலாம்ன்னு சொல்லிட்டு.. என் கையை உடைச்சு எடுத்துடாதடா.. வுடு..!!” வலியால் சுருங்கிப்போன முகத்துடன், சாலமன் அசோக்கின் கையை தட்டிவிட்டான்.
“ஹேய்.. வாடா..!!”
சொன்ன அசோக் சாலமனின் பதிலுக்கு கூட காத்திராமல்.. பார்க் செய்யப்பட்டிருந்த அவனுடைய பைக்கை நோக்கி ஸ்பீடாக நடந்தான்.. இல்லையென்றால், ஸ்லோவாக ஓடினான் என்றும் வைத்துக் கொள்ளலாம்..!! என்னவென்று புரியாமலே.. சாலமனும் அவசரமாக அவன் பின்னால் ஓடினான்..!!
அடுத்த இரண்டு நிமிடங்களில்.. அசோக்கின் பைக் ஆர்காட் ரோட்டில் விரைந்துகொண்டிருந்தது..!! குழப்பத்தை அடக்க முடியாமல் சாலமன் கேட்டான்..!!
“எங்கடா போறோம்..??”
“பாலாஜி அட்வர்டைஸிங்..!!”
“அங்க எதுக்கு..??”
Super.i realy enjoyed.pls continued.dont stopped.