எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 12 49

ஆப்டெக் சென்டரில் விசாரித்தாயிற்று.. மீரா அங்கு பயிலவில்லை என்பதை அவர்கள் உறுதிபடுத்தி விட்டனர்..!! வெறும் பெயரை மட்டும் வைத்தல்ல.. உருவ அமைப்பு, அங்க அடையாளங்கள் எல்லாம் சொல்லியும் விசாரணை நடத்தியாயிற்று.. அந்த சென்டரில் மாயா கோர்ஸ் படித்த மாணவர்களிடமும் பேசிப் பார்த்தாயிற்று..!! அவள் நிச்சயமாய் கோர்ஸ் படிப்பதற்காக இங்கு வந்து செல்லவில்லை.. வேறு ஏதோ வேலை விஷயமாக தினசரி வடபழனி வந்து சென்றிருக்கிறாள்..!!

வடபழனியை பற்றி.. அதை சுற்றியிருக்கிற பகுதிகளை பற்றி.. அவள் நிறைய தெரிந்து வைத்திருந்ததை அசோக்கால் நினைவுகூர முடிந்தது..!! வடபழனியை சுற்றிய ஏதோ ஒரு ஏரியாவில்தான்.. அவளுடைய வசிப்பிடம் அமைந்திருக்க அதிக வாய்ப்பிருக்கிறது..!! இல்லை.. ஒருவேளை அப்படி இல்லாமல் கூட இருக்கலாம்..!!

வடபழனி பேருந்து நிலையத்தையும்.. அதனுடனான மீராவின் நினைவுகளையும்.. யோசித்துக் கொண்டிருந்த அசோக்குக்கு.. திடீரென ஒரு விஷயம் மூளையில் பளிச்சிட்டது..!! அசோக்தான் அந்த பேருந்து நிலையத்துக்கு உள்ளே சென்றது இல்லை.. ஆனால்.. மீராவை பிக்கப் செய்யும்போது, அவள் அந்த நிலையத்துக்கு உள்ளே இருந்துதான் வெளிப்படுவாள்.. அதேபோல அவளை ட்ராப் செய்யும்போதும், உள்ளே சென்றுதான் ஏதோ ஒரு பேருந்தில் ஏறி மறைந்து போவாள்..!! அதை வைத்துப் பார்க்கையில்.. வடபழனி பேருந்து நிலையத்தை ஒரு முடிவிடமாக கொண்ட.. ஏதாவது ஒரு வழித்தடத்தில் செல்கிற.. ஏதோ ஒரு பேருந்தில்தான் அவள் தினசரி வந்து சென்றிருக்க வேண்டும்..!!

அசோக்கின் மூளை இப்போது சற்றே கிளர்ந்து எழுந்தது.. மேலும் தீவிரமாக யோசித்தான்..!! மீரா செல்கிற பஸ் ரூட் எதுவாக இருக்கும் என்று திரும்ப திரும்ப யோசித்துக் கொண்டே இருந்தான்..!! அப்போதுதான் அவனுடைய புத்தியில் ஒரு பொறி தட்டியது..!! ஒரு வாரத்திற்கு முன்பாக.. மீரா அவனுடன் ஃபோனில் தொடர்பு கொண்டு பேசிய அந்த நிகழ்வு.. இப்போது அவனுடய நினைவுக்கு வந்தது..!!

“ஹலோ அசோக்..!!”

“ஹேய் மீரா.. என்னாச்சு.. பத்து மணிக்கு வருவேன்னு சொன்ன.. நான் இங்க உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..!! நீ வருவேன்னு பார்த்தா.. கால் வருது..??”

“வீட்ல இருந்து அப்போவே கெளம்பிட்டேன்டா.. ட்ராஃபிக்ல மாட்டிக்கிட்டேன்..!!”

“ப்ச்.. போச்சா..?? வர்றதுக்கு அப்போ லேட் ஆகுமா..??”

“இல்ல இல்ல.. இப்போ கிளியர் ஆயிடுச்சு.. இன்னும் 15, 20 மினிட்ஸ்ல வந்துடுவேன்..!!”

“அப்போ சரி..!!”

“நீ வெயிட் பண்ணிட்டு இருப்பேல.. அதான் கால் பண்ணேன்..!!”

“என்னது..?? சரியா கேக்கல மீரா.. ஒரே எரைச்சலா இருக்கு.. கொஞ்சம் சத்தமா பேசு..!!” அசோக் சொல்ல, மீரா இப்போது கத்தி பேசினாள்.

“இல்லடா.. ‘நீ வெயிட் பண்ணிட்டு இருப்பேல.. அதான் கால் பண்ணேன்..’ன்னு சொன்னேன்..!!”

“ஓ..!! ஓகே ஓகே..!! பரவால வா.. நான் வெயிட் பண்றேன்..!! ஷ்ஷ்ஷ்ஷ்.. ப்பாஆஆ.. பயங்கர எரைச்சல்.. காது வலிக்குது..!!”

“இங்க ஏதோ ஊர்வலம் நடக்குதுடா.. அதான் எரைச்சல்.. ட்ராஃபிக்கும் அதனாலதான்..!!”

“என்ன ஊர்வலம்..??”

“ஈழப் படுகொலையை கண்டிச்சு.. ஸ்டூடண்ட்ஸ்லாம் ஊர்வலம் போறாங்க..!!”

“ஓ..!! சரி சரி.. நீ வா.. நேர்ல பேசிக்கலாம்..!! இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே பேசிட்டு இருந்தேன்.. என் காது டமாரம் ஆயிடும் போல இருக்கு..!!”

“ஹாஹா..!! ஓகேடா.. வெயிட் பண்ணு.. வந்துடறேன்..!!”

அவ்வளவுதான்..!! அந்த உரையாடல் நினைவுக்கு வந்ததுமே.. அசோக்கின் மூளை சுறுசுறுப்பானது.. அவன் மிகவும் பரபரப்பானான்..!! தடதடவென படியிறங்கி கீழே வந்தான்..!! அவசரமாக ஆபீசுக்குள் நுழைந்தவனை பார்த்து..

“டேய்.. என்னடா.. என்னாச்சு..??”

என்று நண்பர்கள் குழப்பமாய் கேட்டதை கண்டுகொள்ளாமல், பைக் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

அடுத்த அரை மணி நேரத்தில்.. மீண்டும் ஆபீசுக்குள் பிரவேசித்தான்..!! கையிலிருந்த நான்கைந்து பழைய செய்தித்தாள்களை டேபிளில் போட்டான்.. சுவற்றில் ஒட்டியிருந்த சென்னை ஸிட்டி மேப்பை கிழித்தெடுத்தான்.. தனது லேப்டாப்பையும் திறந்து அருகில் வைத்துக் கொண்டான்.. மார்க்கர் பேனா திறந்தவன், மூடியை வாயில் கவ்விக்கொண்டான்..!!

“ஏய்.. என்னடா பண்ற..?? கொஞ்சம் சொல்லிட்டு பண்ணுடா..!!” நண்பர்களுக்கு இன்னுமே குழப்பம்.

“ப்ச்.. இருங்கடா..!!” அவர்களுக்கு பதில் சொல்வதை பற்றி எல்லாம் அசோக் யோசிக்கவில்லை.

Updated: June 14, 2021 — 8:33 am

1 Comment

  1. Super.i realy enjoyed.pls continued.dont stopped.

Comments are closed.