இந்த வீட்டின் உரிமையாளர் 1 140

நவீன் வேலைக்கு கிளம்பிய பின் ரெட்னு முறை அண்ணனின் நம்பரை போட்டு பேசுவதற்கு முன்பே கட் செய்தேன். மனம் எனக்கு சப்போர்ட் செய்யவில்லை. ஒரு வழியாக மனசை திடப்படுத்தி கொண்டு அண்ணாவின் நம்பரை டையல் செய்தேன். உடனே அவன் எடுத்து சொல்லு பாப்பா எப்படி இருக்கே என்று கேட்க (அண்ணா எப்போவுமே என்னை பாப்பா என்று தான் அழைப்பான் ) நான் ஒண்ணும் இல்லை அண்ணா சும்மா தான் கூப்பிட்டேன் எப்படி இருக்கே என்று கேட்க அவன் நவீன் எப்படி இருக்கார் நல்லா இருக்கியா சந்தோஷமா இருக்கியா என்று கேட்க நான் இருக்கேன் அண்ணா ஒரு சின்ன பிரெச்சனை என்று ஆரம்பிக்க அவன் ஹே என்ன நவீன் ஏதாவது தகராறு செய்யறாரா நான் வரட்டுமா என்று கேட்க நான் ஐயோ அப்படியெல்லாம் இல்லை இப்போ இருக்கிற வீடு எனக்கு அவ்வளவா பிடிக்கவில்லை வேறு வீடு போகலாம்னு நினைக்கிறேன் அதுக்கு கொஞ்சம் பணம் தேவை என்று இழுத்தேன். அண்ணா உடனே என்ன சொல்லறே நித்யா இப்போ இருக்கிற வீட்டிற்கு மூன்று வருட லீஸ் பணத்தை அப்பா குடுத்து இருக்கறே இப்போ ஒரு வருஷத்தில் வீடு மாறினா அந்த பணம் வராதே யோசிச்சு செய் அப்புறம் இது பற்றி பேசலாம் நான் ஒரு வேலையா போய் கொண்டிருக்கிறேன்.

அடுத்த முயற்சியும் தோல்வி என்று தெரிய நான் மிகவும் மனம் உடைந்தேன். கண்டிப்பா ரோஷன் நவீனை நிர்பந்திப்பான் அதன் விளைவாக நவீன் இன்னும் அதிகமாக குடிச்சுட்டு வேலைக்கு போவதை தவிர்ப்பான் என்ன செய்யலாம் என்று மண்டையை போட்டு குழப்பினாலும் பலன் இல்லை. சரி கடைசி முயற்சி அப்பாவிடம் பேசலாம் என்று அப்பாவிடம் அதே விஷயத்தை சொல்ல அப்பா நித்தியா உனக்கு தெரியாதது இல்லை என் தகுதிக்கும் மீறி செலவு செய்து தான் கல்யாணம் செய்து குடுத்தோம். ஒண்ணு பண்ணு உனக்கு குடுத்த நகையை அடமானம் வைத்து பணம் புரட்ட பாரு என்று சொல்லி ஒரு ஒளி கீற்றை காட்டினார்.

நவீன் வீட்டிற்கு வந்ததும் நகை அடமானம் பற்றி பேச அவன் என்ன நித்தி நீ தானே எல்லா நகையும் இங்கே இருந்தா பத்திரமா இருக்காதுன்னு என் வீட்டிலே அம்மா கிட்டே குடுத்து வச்சு இருக்கே இப்போ எல்லா நகையும் கேட்டா அவங்க என்ன நினைப்பாங்க என்று மடக்கினான். இருவரும் படுத்து உறங்க ஆரம்பித்தோம். எனக்கு நினைப்பு முழுக்க ரோஷன் பிரெச்சனை எப்படி சால்வ் செய்வது என்று தான். இறுதியில் நானே நவீனுக்கு தெரியாமல் ரோஷன் கிட்டே பேசி கொஞ்சம் அவகாசம் கேட்கலாம் என்று முடிவு செய்தேன். திரும்பி பார்த்தால் நவீன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். நான் அவர் போனை எடுத்து ரோஷன் நம்பரை குறித்து கொண்டேன்.

நவீன் வேலைக்கு சென்றதும் ரோஷன் நம்பர் என் மொபைலில் இருந்து போடாமல் அருகே இருந்த பொது தொலைபேசியில் இருந்து போட்டேன். அவன் எடுக்க சற்று நேரம் ஆனது, அவன் ஹலோ என்று சொன்னதும் நான் ரோஷன் அண்ணா நித்யா நவீன் மனைவி என்று சொன்னதும் அவன் சொல்லுங்க நித்யா நவீனுக்கு எதாவது ப்ரெசனையா நீங்க போன் செய்யறீங்க அதுவும் பொது தொலை பேசியில் இருந்து என்று கேட்க நான் அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை நான் உனக் கிட்டே வீடு விஷயமா பேசணும் அதுக்கு தான் கால் செய்தேன் என்றேன்.

Updated: December 14, 2021 — 6:01 am