“மாலை நேரம் கிளம்பும் வேலையில் ரம்யா அவளது things அனைத்தும் pack செய்யும் போது அவளது handbag ல் இருந்து ஒரு cone மருதாணியை எடுத்து வந்து சங்கீதாவிடம் குடுத்தாள்.” “இன்னைக்கி காலைல வீட்டுக்கு பக்கத்து கடைல கிளம்பும்போது வாங்கினேன், அப்படியே உங்களுக்கும் சேர்த்து ஒன்னு வாங்கினேன். வச்சிக்கோங்க மேடம். நாளைக்கு பார்க்கலாம் bye.” “thanks டி” – உற்சாகமாய் சொன்னாள் சங்கீதா, மருதாணி என்றால் அவளுக்கு உயிர். அதை பத்திரமாக வைத்துக் கொண்டாள். “ஏய், கோபியை பார்த்தியா டி?” என்றாள் சங்கீதா “இல்லை, ஆளே காணும்” என்றாள் ரம்யா. Mr.unknown number என்று store செய்த நம்பரை டயல் செய்து பார்த்தாள் சங்கீதா. அதற்க்கு “நீங்கள் அழைக்கும் நம்பர் switch off செய்யப் பட்டுள்ளது” என்று மெசேஜ் வர ஒன்றும் புரியாமல் கடவுளிடம் கோபி நன்றாக இருக்க வேண்டுமென்று வேண்டிவிட்டு கிளம்பினாள். மாலை traffic ஐ சமாளித்து ஒரு வழியாக வீட்டை சென்றடைந்தாள் சங்கீதா. ரஞ்சித்தும் ஸ்னேஹாவும் அமைதியாய் விளையாடிக் கொண்டிருந்தார்கள். வழக்கம் போல சங்கீதா வர தாமதம் ஆகும் தருவாயில் நிர்மலா இவர்களுக்கு வீட்டை திறந்து விட்டு குடிக்க ஒரு டம்ளர் பால் குடுப்பது வழக்கம். இந்த முறையும் அப்படியே செய்திருந்தாள் நிர்மலா.
ஹலோ அக்கா, நல்ல ரெஸ்ட் எடுத்தீங்களா?” “நான் எடுக்குறது இருக்கட்டும், நீதான் முக்கியமா எடுக்கணும். நீ எப்போ வருவேன்னு காத்திட்டு இருக்குது இதுங்க ரெண்டும். கொஞ்சம் நேரம் இதுங்களுடன் விளையாடிட்டு படுத்து ரெஸ்ட் எடும்மா. உனக்கும் உள்ள சூடா காபி போட்டு வெச்சி இருக்கேன்.”
“thanks அக்கா, இன்னைக்கி வர கொஞ்சம் லேட் ஆகிடுச்சி. நீங்க ஏதாவது சாப்டீங்களா?” “இப்போ எதுவும் வேணாம்டா, நீ பார்த்துக்கோ, நான் இப்போ கிளம்புறேன். கொஞ்சம் வீட்டுலயும் வேலை இருக்கு.” – என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் நிர்மலா. “என்னங்கடா பண்ணீங்க ரெண்டு பேரும் இன்னைக்கி?” – என்று பேசிக் கொண்டே சங்கீதா சமையல் அறைக்கு செல்ல பின்னாடியே ஸ்நேஹா மெதுவாக வந்தாள். “என்னடா கண்ணா?” – என்றாள் சங்கீதா.. “அம்மா, நேத்து கேட்கனும் னு இருந்தேன், அன்னிக்கி என்னையும் ரஞ்சித்தயும் ஸ்கூல் ல இருந்து ஒரு நாள் கூட்டிட்டு வந்தாரே ராகவ் மாமா, அந்த மாமா தானே அன்னிக்கி function ல stage மேல இருந்தாரு?” “ஹா ஹா, ஆமாம், ஏண்டா கேட்குற?” – ராகவ் பத்தி கேட்டவுடன் சங்கீதாவுக்கும் மனதில் ஒரு வித சந்தோஷம். “ஒன்னும் இல்லைமா, எனக்கு அந்த மாமவ ரொம்ப பிடிச்சி இருக்கு, திரும்பவும் பார்க்க முடியுமா மா?” “எதுக்கு? இன்னொரு talking barbie doll வாங்கிக்கவா? ஹா ஹா..” “அது இல்லைமா, வேற ஏதாவது புதுசா பொம்மை வாங்கிக்கலாமே னு கேட்டேன்..அதான்.” – பால்வடியும் முகத்துடன், வெளிப்படையாக பேசினாள் ஸ்நேஹா. “எப்போ நினைச்சாலும் பார்க்கலாம், அம்மா நாளைக்கு அவரை தான் பார்க்க போறேன்”. – தன் மகளிடம் இதை சொல்லும்போது சங்கீதாவின் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷ சிரிப்பு. பேசிக் கொண்டிருக்கும்போது phone பீப் பீப் என்று சத்தம் குடுக்க, உற்சாகமாய் மொபைலை எடுத்தாள். அதில் “I wont come home today also, I will stay with my friend tonight” என்று குமார் sms அனுப்பியதைப் பார்த்துவிட்டு சற்று சலிப்புடன் “ஹ்ம்ம்…. இன்னைக்கி night ஒருத்தருக்கு குறைச்சி சமைக்கணும்” என்று மட்டுமே எண்ணினாள் சங்கீதா. டிக் டிக் என்று கடிகாரத்தில் பெரிய முள் சுழன்று சுழன்று சிறு முள்லை கிட்டத்தட்ட 10 நோக்கி அழைத்து சென்றது. நீண்ட நேரம் pogo, மற்றும் chutti tv என குழந்தைகள் இருவரும் மாறி மாறி பார்த்துக் கொண்டு சங்கீதா குடுத்த உணவை சமத்தாக சாப்பிட்ட பிறகு தூக்கம் அவர்களது இமைகளை இழுக்க அவர்கள் இருவரையும் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு, வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு தனிமையில் சற்று ஹாலில் வந்து வழக்கமாக கண்ணாடியின் முன் fanனின் கீழ் அமர்ந்தாள். இப்போது ராகவ் குடுத்த கவரை ப் பிரிப்பதற்கு முன் அதில் என்ன எழுதி இருக்கிறதென்று பிரித்துப் பார்த்தாள் “newly designed saree for working women” என்று எழுதி இருந்தது. I am honouring the saree by giving the first piece to my தேவதை சரா – என்று எழுதி ராகவ் சிக்னேச்சர் போட்டிருந்தான். புடவைப் பார்ப்பதற்கு நைசாகவும் அதே சமயம் கனம் கம்மியாகவும், உடுத்தினால் transparent ஆக இல்லாத விதமாகவும், கூல் effect குடுப்பது போல் இருக்கும் என்று அந்த புடவையின் தன்மையைப் பற்றி அந்த கவரில் படித்து தெரிந்து கொண்டாள். உற்சாகமாய் பிரித்துப் பார்த்தாள், வானத்தின் நீல நிறம் காட்டிலும் சற்று dark ஆக இருந்தது புடவையின் நிறம். அதில் அழகாக சிறிய பளபளக்கும் கல் வைத்து design செய்யப்பட்டிருந்தது, இன்னும் ஏராளமான புதிய விஷயங்கள் அந்த புடவைக்கு சிறப்பம்சம் சேர்த்தது. சங்கீதாவுக்கு தனது குழந்தைகள் தூங்கும் அறைக்கு சென்று night lamp on செய்து அங்குள்ள கண்ணாடியின் முன்பு இந்த புடவையை கட்டிப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது.
Bro next part podunga story interesing a irukku pls
Sunday na 2 paret podunga
Next week 10
Next week 10
Next week 10
Next 10
Next post please
Next post please, we are waiting eagerly
Why delayed. Please update
Next 10 Pro