பத்துப் பேரை கட்டிப் போடுற இரும்பு சங்கிலிக்கு கூட இவ்வளவு சக்தி இருக்காது ஆனால் இந்த கயிறு ஒரு பொம்பளையோட வாழ்க்கையையே புரட்டி ப் போடுதே. ஒரு பெண்ணுக்குரிய தனிப்பட்ட ஆசைகளையும், விருப்பு வெறுப்புகளையும் உட்பட” என்று எண்ணிக் கொண்டிருக்கையில் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் தாலியின் மீது விழுந்தது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் தன்னை ராகவிடம் இழந்து கொண்டிருக்கிறோம் என்ற உண்மை கண்ணாடியில் தெரியும் சங்கீதாவின் கண்கள் அவளுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது. அம்மாவைத் தேடி ஸ்நேஹா படுக்கையில் இருந்து எழுந்து வெளியே வந்தாள், “அம்மா….அம்மா எங்கம்மா இருக்கே, வாமா?” என்று அழைத்த அந்த சிறுமி பாத்ரூமை கடந்து செல்லும்போது கதவின் கீழ் மஞ்சள் வெளிச்சம் எரிவதைப் பார்த்தாள் ஸ்நேஹா, அம்மா…. அழைத்ததுக்கு சத்தம் இல்லை… அம்மா இருக்கியா மா.. சங்கீதா லேசாக விசும்பும் சத்தம் கேட்டது ஸ்நேஹாவுக்கு…. அம்… – முழுதாக “மா” என்று ஸ்நேஹா முடிப்பதற்குள் உள்ளுக்குள் இருந்து சங்கீதா “ஹம்மாஆஆ” என்று கதறி அழும் சத்தம் கேட்டது. “அம்மா….” – ஸ்நேஹா பயந்தாள். “அம்மா என்னம்மா ஆச்சு? ஏன்மா அழுவுற? வாமா வெளியே..” – என்று சற்று பயத்தில் சொன்னாள் “சங்கீதா தன்னை சுதாரித்துக் கொண்டு “ஒன்னும் இல்லடா செல்லம், “இஸ்ஸ்.. இஸ்ஸ்..” (மூக்கை உறிந்தால்) நீ போய் படுத்துக்கோ நான் வரேன்.” கண்களை சரிந்த முந்தானை நுனியால் எடுத்து துடைத்துக் கொண்டு கண்ணாடியைப் பார்த்தாள். கண்களில் மை அழிந்திருந்தது. அதையும் முந்தானையால் துடைத்தாள்.
“ப்ராமிஸ்ஸா சீக்கிரம் வரணும்?” – என்றாள் ஸ்நேஹா “ப்ராமிஸ் டா என் செல்லம், நீ… நீ போயி படுத்துக்கோ…நா” – கண்ணீர் எந்த தடைகளுமின்றி வந்துகொண்டிருந்தது. வந்த அழுகையால் முழுதாய் பேசி முடிக்க முடியவில்லை. என்னாச்சும்மா? பேசுமா… இஸ்ஸ்….. நீ போயி படுத்துக்கோ….. அம்மா வரேன், சரியா.. – அழுதுகொண்டே பேசினாள். சரிமா… – ஒன்றும் விளங்காதவளாய் ஸ்நேஹா மீண்டும் அறைக்கு சென்று படுத்தாள். பாத்ரூம் உள்ளே உள்ள கண்ணாடியில் அழுது சிவந்த கன்னங்களை பார்த்து தண்ணீரால் கழுவினால். மனதில் உள்ள எண்ணங்களை கழுவ முடியவில்லை அவளாள். முந்தானையை சரி செய்து, பெட்ரூமுக்கு சென்று குழந்தைகளுடன் படுத்து உறங்க முயற்ச்சி செய்தவளுக்கு தூக்கம் வரவில்லை. ஸ்நேஹா வை தன் நெஞ்சுடன் அனைத்து தலையில் தடவி தூங்க வைக்க…. இப்போது அவளுக்கும் கண்கள் சற்று லேசாக அயர்ந்தது சிறிய கண்ணீர் துளியுடன். கடைசியாய் ஏதாவது ஒரு முடிவை எடுக்கலாம் என்றவளுக்கு தூக்கம் குறுக்கிட்டது. நல்ல தூக்கம் தூங்கினாள். அடுத்த நாள் காலை…. படுக்கையில் எழுந்து அமைதியாய் அமர்ந்திருந்தாள். இரவு நேரம் அழுதது கொஞ்சம் கண்களை லேசாக வீங்கச் செய்திருந்தது. அமைதியாய் சில நிமிடங்கள் அப்படியே இருந்தவள் இப்போது ராகவின் கடிதத்தைப் பார்த்தாள். அதில் உள்ள வார்த்தைகளை பொறுமையாக படித்து எப்படி எல்லாம் தன்னை வர்னிச்சி இருக்கான் என்று வியந்தாள். இரவு நேரம் முழுதும் அவளது எண்ணங்களை அதிகாரம் செய்த ராகவின் சிந்தனைகள் அதிகாலை எழுந்த பிறகும் கூட இறக்கம் இல்லாமல் அவளின் சிந்தனைகளை தனது கட்டுக்குள் வைத்திருந்தது. மனதில் ஒரு புறம் பயம் இருந்தாலும் அவள் அதில் ஒரு ரகசிய இன்பம் கண்டாள். டிங்..டிங். – என்று calling bell சத்தம் கேட்டு கடிதத்தை தனது handbag உள்ளே வைத்தாள். உள்ளே வந்தது குமார். கண்கள் சற்று சோர்வாக இருந்தது, கூடவே போதிய தூக்கம் இல்லை என்று சங்கீதாவுக்கு குமாரைப் பார்க்கும்போது நன்றாக தெரிந்தது. எப்படியும் மீண்டும் ஒரு வாக்கு வாதம் தொடரலாம் என்று மனதில் எண்ணி இருந்தாள் சங்கீதா. குமார் சங்கீதாவை நேரடியாக பார்க்காமல் தனது ஷர்ட்டை கழட்டிவிட்டு நேராக படுக்கை அறையை நோக்கி நடக்க சங்கீதா பேச ஆரம்பித்தாள்.
“ராத்திரி எங்கே தங்கி இருந்தீங்க?” “உனக்கு எதுக்குடி சொல்லணும்?” “சொல்ல விருப்பம் இருந்தா சொல்லுங்க இல்லைனா வேணாம். நான் கட்டாய படுத்தல.” “நீ மட்டும் எல்லாத்தையும் சொல்லிட்டு செய்ரியாடி?” – முறைத்து பேசினான் குமார். கண்கள் லேசாக சிவந்திருந்தது. சற்றே அருகினில் நிற்க அவனது கோலம் முந்தைய இரவு கொஞ்சம் குடித்திருக்கிறான் என்று தெரிய வைத்தது. “ஹ்ம்ம்.. again asusual I expected this kumar” – சலித்துக் கொண்டே பேசினாள். வாயில் ஏதோ கோவமாக முணுமுணுத்துக் கொண்டே இருந்தான் குமார். அதைக் கேட்டு சங்கீதா ஏதுவா இருந்தாலும் சத்தமா சொல்லுங்க என்றாள். “ஆங்… நல்லா ஆடுனியே மேடைல “ஷீலா கி ஜவாணி” பாட்டுக்கு, அந்த மாதிரி நாலு பார் ல ஆடினா கூட இன்னும் நிறைய காசு குடுப்பாங்க.” – கையில் watch அவிழுத்து அருகில் உள்ள மேஜையில் விசிறி அடித்தான். “என்ன சொன்னீங்க?” – முன்புறம் இருந்த முடியை கைகளால் எடுத்து பின்னாடி போட்டு அவன் அருகில் வந்து கோவமான கண்களால் கேட்டாள் சங்கீதா. “நல்ல்ல்லா நாலு இடத்துல இப்படியே ஆடுடி, ஏற்கனவே அவனவன் என்னை இளக்காரமா பார்க்குறான், இன்னும் நல்லா கேவலமா பார்ப்பான்.” – இதைச் சொல்லும்போது குமாரின் முகம் ஆரோக்கியமற்ற உணர்ச்சிகளின் அவல உச்சிக்கு சென்றது. வார்த்தையைப் பார்த்து பேசுங்க குமார், நான் ஒன்னும் நாலு இடத்துல ஆடி போழைக்குரவ இல்ல.. – சங்கீதாவுக்கும் கண்கள் சிவந்தது.
Bro next part podunga story interesing a irukku pls
Sunday na 2 paret podunga
Next week 10
Next week 10
Next week 10
Next 10
Next post please
Next post please, we are waiting eagerly
Why delayed. Please update
Next 10 Pro