“என்ன கேள்வி இது சங்கீதா, one minute please” – என்று சொல்லிவிட்டு பக்கத்தில் உள்ள intercom phone ல் சஞ்சனாவை அழைத்து “சங்கீதா வீட்டுக்கு உடனே நம்ம company வண்டிய அனுப்புங்க please” என்றான். அவன் பேசுவதை phone ல் கவனித்து “thanks டா..” – என்றாள் சங்கீதா. “என்ன விஷயமா சங்கீதா பார்க்கணும்?” – என்றான் ராகவ் ஒன்றும் தெரியாதவனாய் . “உம்…. பஜ்ஜி மாவு பத்தியும் வடை மாவு பத்தியும் பேசுறதுக்கு டா” – என்று பொய்யான கோவத்தில் சிரித்து பேசினாள் சங்கீதா. “ஹா ஹா ஹா, சரி சரி சொல்லுங்க..” “கொஞ்சம் மணசு சரி இல்லைடா…..(சில நொடி மௌனங்களுக்கு பிறகு தொடர்ந்தாள்) நீ ஏண்டா இப்படி எனக்கு ஒரு லெட்டர் குடுத்த?” – வார்த்தைகளை முடிக்கும்போது லேசாக அழ ஆரம்பிக்கும் குரல் கேட்டது ராகவ்க்கு. சங்கீதா ப்ளீஸ்… என்னாச்சு? நான் சொன்னது தப்புன்னு தொனுச்சின்னா விட்டுடுங்க. நீங்க உங்க வேலை குடும்பம்னு கவனிங்க – என்று ராகவ் அக்கறையாக பேசிக்கொண்டிருக்கும்போது நடுவில் குறுக்கிட்டு நிறுத்தினாள் சங்கீதா. “என்னுடைய தனிப்பட்ட இறுதி முடிவை நாந்தான் எடுக்கணும், அதைப் பத்தி சொல்லுறதுக்கு நீ யாருடா?” – அமர்ந்திருக்கும் chair நுனிக்கு நிமிர்ந்து வந்து எதிரில் உள்ள கண்ணாடியின் முன் முறைத்துக் கொண்டு சத்தமாக உரிமையுடன் கொஞ்சம் கோவமாக கத்தினாள். ஏதோ தன்னிடம் இருந்து பறிக்கப் படுவது போல. “இல்ல அது வந்து…” – ராகவ் க்கு ஒரு நொடி ஏன் இப்படி பேசினோம் என்றிருந்தது. இன்று வரை சங்கீதா இப்படி கோவத்தில் கத்தி அவன் கேட்டதில்லை. “Will you just shut up?” – மீண்டும் குரல் உச்சத்துக்கு போனது சங்கீதாவுக்கு… கண்ணாடியில் கண்கள் முறைத்தன. “நீ கொட்ட வேண்டியத எல்லாம் கொட்டிட்ட நான் என்ன சொல்லணும் னு நினைக்கிறேனோ அதை நான் தான் சொல்லணும், அதுக்கும் நீயே பதில் சொல்லிகிட்டா அப்புறம் நான் நடுவுல உப்புச்சப்பானா?” correct… correct னா?, அப்போ நான் உப்புச்சப்பானா? அய்யோ…. இல்ல இல்ல உங்க முடிவு உங்கள் கையில் னு நீங்க சொன்னது correct னு சொன்னேன். (சில நொடிகளுக்குப் பிறகு தொடர்ந்தான்) ஹ்ம்ம்.. என் கடிதத்துல ஒரு விஷயம் எழுத மறந்துட்டேன். என்னது? – சங்கீதாவின் முகத்தில் ஒரு மெல்லிய சிரிப்பு இருப்பதை அவள் முன்பு இருக்கும் கண்ணாடி மட்டும் அறிந்தது. ஆனால் அவனுடன் பேசும்போது வாயின் மீது கை வைத்து மூடி அந்த சிரிப்பின் சத்தத்தை மறைத்தாள் இந்த தேவதை. “வெடிக்கும் எரிமலையிடம் என் தேவதையின் கோவத்தைப் பார்த்தால் நீ கூட அமைதியாய் அடங்கி விடுவாய்” னு எப்படி? correct தானே?” – என்று ராகவ் சொல்ல…. அதற்கு பாதி கோவமும், பாதி சிரிப்பும் கலந்து என்ன பேசுவதென்றே தெரியாமல் அமைதியாய் இருந்தாள் சங்கீதா. “ஹலோ என்ன ஆச்சு?” – என்றான் ராகவ். “ஒன்னும் இல்ல.” – மெதுவாக முந்தானையின் நுனியை பிடித்து திருகிக் கொண்டே சத்தமில்லாமல் முணுமுணுத்தாள் . – இது அப்படியே ஒரு காலத்தில் ரமேஷ் அவளது வாழ்க்கையில் இருக்கும்போது சங்கீதாவுக்கே உரிய அக்மார்க் குணம்….. ஏன் பல பெண்களுக்கே உரிய குணமும் கூட. “ஒன்னும் கேட்கல, திருப்பி சொல்லுங்க please” – என்றான் ராகவ். “ஒன்னும் இல்ல னு சொன்னேன்..” – சத்தமாக கத்தி கூறினாள்..
“நான் ஒன்னு கேட்டா தப்பா நினைசிகாதீங்க ப்ளீஸ்..” “நீ கேட்க்குறதை ப் பொறுத்துதான் அது இருக்கு.. கேளு’” – என்றாள் “சரி, ஆரம்பத்துல நல்லாதானே பேச ஆரம்பிச்சீங்க? ஏன் போக போக என் கிட்ட கோவத்துல கத்துறீங்க?” “கோவமா..? கோவம் இல்லையே…. எதுக்கு நான் உன் கிட்ட கோவப்ப்படனும்?” “ஒஹ்ஹ்… அப்போ அதுக்கு பேரு கோவம் இல்லையா?” “இல்ல….” – கண்களை மூடி மென்மையாக சிரித்து பேசினாள். “நிஜம்மா?” சங்கீதாவிடம் மௌனம்…. “ஹலோ ஹலோ ஹலோ….” மீண்டும் சங்கீதாவிடம் மௌனம்…. “சரி line கட் ஆயிடுச்சி போல இருக்கு….” – என்று சொல்லி ராகவ் mobile cut செய்யும் போது… “ஹலோ….” – என்றாள் மெதுவாக. “ஹ்ம்ம்… line cut பண்ணுறேன்னு சொன்னாதான் சத்தமே வருது..” “அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல நான் பேசிட்டுதான் இருந்தேன் உனக்கு கேட்கல.. காது செவிடாகிடுச்சி போல இருக்கு” – மீண்டும் அவளின் முந்தானையின் நுனி அவளிடம் மாட்டிக்கொண்டு “யாராவது காப்பாத்துங்க” என்று தவித்தது.
நீங்க மனசுக்குல்லையே பேசிக்கிட்டா எனக்கு எப்படி கேட்க்கும்? ஹா ஹா…” “சப்.. போடா…” – இப்போது காற்று அதிகம் + குரல் கம்மி சங்கீதாவிடம். “ஹா ஹா ஹா….” – சங்கீதாவின் மனதை திருடிய அதே வசீகர சிரிப்பு ராகவிடம். “உன் மனசுல ஏன் என்னைப் பத்தி அப்படி ஒரு எண்ணம் ராகவ்?” “என்ன எண்ணம்?” “உனக்கு தெரியும்? பதில் சொல்லு..” “ஹ்ம்ம்…. நிறைய காரணம் உண்டு..” “என்னென்ன சொல்லு, எனக்கு தெரிஞ்சிக்கணும். மணசு குழப்பத்துல இருக்கு.. உன்னைப் பத்தின விஷயத்தை உன் கிட்டேயே பேச வேண்டியதா இருக்கு.” “ஏன்?” என்ன ஒரு confusion இருந்தாலும் உன் கிட்டதான் மணசு விட்டு பேசுவேன், நீ சொல்லுற பதில்ல அர்த்தம் இருக்கும், convincing ஆ இருக்கும். அதாண்டா… இதைப் பத்தி நான் ரம்யா கிட்ட கூட பேசல.
Bro next part podunga story interesing a irukku pls
Sunday na 2 paret podunga
Next week 10
Next week 10
Next week 10
Next 10
Next post please
Next post please, we are waiting eagerly
Why delayed. Please update
Next 10 Pro