இடை அழகி மேடம் சங்கீதா 7 90

“பார்த்து பார்த்து… அரக்க பறக்க அங்கயும் இங்கயும் ஓடி நீ எங்கயாவது கீழ விழுந்துட போற டி” – இந்த குரலை க் கேட்டு வாசல் பக்கம் திரும்பிப் பார்த்தாள் சங்கீதா.. நிர்மலா பளிச்சென்று maroon கலர் பட்டுப் புடவையில் நின்றுகொண்டிருந்தாள். அவளை ப் பார்த்ததில் சங்கீதாவுக்கு மிகவும் தெம்பு வந்தது. wow… அக்கா வந்துட்டீங்களா? இருங்க ஒரு 2 minutes ல வந்துடுறேன். இவதான் ரம்யா, என் கூட bank ல வேலை பார்க்குறா. நான் சொல்லி இருக்கேனே அடிக்கடி இவளை ப் பத்தி உங்க கிட்ட.. “ஒஹ்ஹ் இவதானா அது? எப்படி இருக்கே மா..” – அக்கறையாக கேட்டாள் நிர்மலா. நல்லா இருக்கேங்க…. எப்படிமா வந்த?.. வீட்டுகாரர் இறக்கி விட்டுட்டு போனாருங்க – என்றாள் ரம்யா.. ரம்யாவும் நிர்மலாவும் பேசிக்கொண்டிருக்க, வீடு முழுவதும் அனைத்து கதவுகளும் சாத்தி இருக்கிறதா, விளக்குகள் அணைக்கப் பட்டிருக்கிறதா என்று ஒரு முறை check செய்து விட்டு ஒரு கையில் பசங்களை ப் பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் கதவை ப் பூட்டினாள். இப்போது அந்த மூன்று தேவதைகளும், IOFI executives Benz கார் கதவை தாத்தா திறக்க, தங்களது புடவை கசங்காத வண்ணம் கையால் தங்களது பின் புறத்தை தடவி அமர்ந்தார்கள், முன் பக்கம் அக்கறையாக தம்பி ரஞ்சித்தை மடியில் வைத்து அமர்ந்தாள் ஸ்நேஹா. வண்டி லேசாக உறுமி நகர ஆரம்பித்தது.

செப்பா… எப்படியோ ஒரு வழியா timeக்கு கிளம்பிட்டோம். என்று ஒருவரை ஒருவர் பார்த்து சொல்லிக் கொண்டார்கள். சங்கீதா ரம்யாவின் புடவை அழகாக இருக்கிறதென்று புகழ நிர்மலா மஞ்சள் புடவையில் இருக்கும் சங்கீதாவை புகழ மீதி இருவரும் சேர்ந்து நிர்மலாவின் புடவையையும் necklace யும் புகழ டிரைவர் தாத்தாவுக்கு Rear view mirror ல் அவர் கண்ணுக்கு ஒரு சிறப்பு விருந்து அமைந்தது. ஓட்டும்போது தாத்தா தங்களை அதிகம் கவனிப்பதை க் கண்ட சங்கீதா உடனே அவளது mobile phone எடுத்து “ஏய் சஞ்சனா, நீ இல்லாம டிரைவர் தாத்தாவுக்கு போர் அடிக்குதுடி, நீயும் வந்திருக்கலாம் இல்ல?” என்று சும்மா பேசுவது போல பாவனை செய்ய, தாத்தாவின் கவணம் சட்டென்று முழுக்க முழுக்க road மீது பாய்ந்தது.. இதைப் பார்த்து பின்னாடி அமர்ந்திருக்கும் மூவரும் சேர்ந்து சிரித்தனர். ஏன் சிரிக்கிறார்கள் என்ற அர்த்தம் புரியாமல் தன் பங்குக்கு அந்த இரு மழலைகளும் கூட கொஞ்சம் சிரித்தார்கள். அனைவரும் IOFI function பத்தியும், அவரவர் வீட்டு விஷயங்களையும் பேசி சிலாகித்துக் கொண்டிருக்க சட்டென்று சங்கீதாவின் phone பீப் பீப் என்று ஒலித்தது. ரகாவிடம் இருந்து sms வந்திருக்கும் என்று எண்ணினாள் சங்கீதா. ஆனால், phone எடுத்து பார்த்தபோது தெரிந்தது “unknown number” என்று. மெசேஜ் என்ன என்று படித்தாள் சங்கீதா. “You can do anything with IOFI, but dont indulge in investigating about that wooden piece, its not good for you, I am warning you second time.. treat it seriously” – என்று இருந்ததை அருகில் ரம்யாவும் பார்த்தாள். மேடம், என்னது இது? எனக்கு பயமா இருக்கு “I will give it up” னு reply பண்ணி தொலைங்க மேடம்.. ஏன் இந்த வம்பு நமக்கு? நமக்கு குடும்பம் குழந்தை னு இருக்கு, அதுல இந்த ரோதன வேறயா? சொன்னா கேளுங்க மேடம் please.. – என்று மன்றாடினாள் ரம்யா. sshhhh, finger on the lips – என்று சொல்லி ரம்யாவை அமைதி படுத்தினாள் சங்கீதா. சற்றும் அச்சம் இல்லாமல் கூலாக reply செய்தாள் சங்கீதா “you are too late Mr.Unknown number, I have already identified that wooden piece is used for making fake money, still I will proceed finding who is behind it. stop me if you can. & moreover if you have guts let me know your name, my name is sangeetha.” – என்று சங்கீதா reply செய்ததை ப் பார்த்து ரம்யாவுக்கு பயத்தில் கொஞ்சம் வேர்த்தது. மேடம் என்ன பண்ணுறீங்க?.. யாரவது ஒரு பேச்சுக்கு உங்களை விஜய சாந்தி னு புகழ்ந்தா நிஜமாவே அப்படி நினைச்சிகாதீங்க. – கொஞ்சம் பயந்துதான் பேசினாள் ரம்யா.

“ஹாஹாஹ், பைத்தியக்காரி, இதுதான் என்னோட இயல்பு, யாரும் என்னை உசுப்பேத்த முடியாது.” – என்று சொல்லி ரம்யாவின் கண்ணத்தை அன்பாக தடவினாள் சங்கீதா. சற்று நிமிடம் கழித்து மீண்டும் பீப்… பீப்… என்று sms ஒலித்தது, எடுத்து பார்த்தாள் சங்கீதா… அதில் “You will have to face the consequences then… be prepared” (விளைவுகளை சந்திக்க தயாராய் இரு) என்று message வந்தது. இதற்கு சங்கீதா “So still you dont have guts to say who you are right? okay no issues….” – என்று reply செய்ததை ப் பார்த்து, இப்போ எதுக்கு இந்த வில்லங்கமான message என்று ரம்யா சொல்ல… “இப்படி குத்துரா மாதிரி மெசேஜ் அனுப்பினாவாவது ரோஷம் வந்து யாருன்னு சொல்லுவான்னு பார்த்தா வேண்டிய பதில் வர மாட்டேன்குதே…” என்று மெதுவாக முனு முனுத்தாள்..

2 Comments

  1. No next part update New story update please

Comments are closed.