இடை அழகி மேடம் சங்கீதா 7 90

டிங்ங்.. டிங்ங்…..” என்று calling bell சத்தம் கேட்டு கண் திறந்து கடிகாரத்தை ப் பார்த்தாள் சங்கீதா, மணி sharp 9:00 am ஆகி இருந்தது. வாசலில் இருந்து “மேடம்.. ரம்யா வந்திருக்கேன்….” என்ற குரல் கேட்டு. ஜன்னல் வழியே பார்த்தாள் சங்கீதா, அவளது கணவன் ஷங்கர் ரம்யாவை இறக்கிவிட்டு தனது bike ஐ ஸ்டார்ட் செய்து கிளம்பிக்கொண்டிருந்தான். அதை ப் பார்த்து “one minute please” என்று சொல்லி கிளம்பின ரம்யாவின் வீட்டுக்காரரை நிறுத்தினாள் சங்கீதா.

கதவைத் திறப்பதற்கு முன் தன் கணவனைப் பார்த்து “Sometimes I want to give importance to my small wishes in between my routine robotic life, அதுல நீங்க குருக்கிடாதீங்க. இதுக்கும் மேல எனக்கு பேச நேரமும் இல்ல தெம்பும் இல்ல. இப்போ என் friend ம் அவ கணவரும் வந்திருக்காங்க, அவங்க எதிர்ல ஓவரா சீன் போடாதீங்க, எதுவா இருந்தாலும் ராத்திரி வந்த பிறகு நாம பேசிக்கலாம். புரிஞ்சிதா?” – என்று கண்டிப்பாக பேசினாள். “உம்..” – என்று மெல்லிய குரலில் அடித் தொண்டையிலிருந்து வந்தது குமாரின் குரல். வீட்டோடு மனைவியாய் இருந்து கொண்டு, அடுப்பினில் சமைத்துக்கொண்டு இருக்கும் பெண்களிடம் ஏகத்துக்கும் கத்தலாம். ஆனால் சந்கீதாவைப் போல வேலைக்கு சென்று சம்பாதிக்கின்ற , அதுவும் வங்கியில் கணமான பதவியில் இருக்கும் ஒருவளிடம் அதிக பட்சம் இவ்வளவுதான் பேசமுடியும், கூடவே இப்பொழுது ஓடிக்கொண்டிருக்கும் வேலையும் அவள் பார்த்து வைத்தது என்பதால் வார்த்தைகள் கம்மியாகத் தான் வந்தன குமாரின் வாயிலிருந்து. முகத்தை கண்ணாடியில் ஒரு முறைப் பார்த்து சரி செய்துகொண்டு விரைந்து சென்று கதவை திறந்தாள் சங்கீதா. வாங்க வாங்க… இவ்வளோ நாளா இல்லாம இன்னைக்கிதான் உங்களுக்கு time கிடைச்சிதா ஜோடியா வர்றதுக்கு? – சிரித்து அன்புடன் வரவேற்றாள் சங்கீதா. அப்படி இல்ல மேடம், எனக்கும் labaratory ல சில நேரம் லேட் ஆயிடும். ஏற்கனவே நோன்பு பூஜை, கொலு பண்டிகை நேரத்துல எல்லாம் என்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்லி விடாம தொந்தரவு பண்ணுவா ஆனா எனக்குதான் முடியாம போய்டும். மேடம் எதிர்க்கவே sorry கேட்டுக்குறேன் மா மகாராணி – என்று சங்கீதாவின் முன் ரம்யாவிடம் அவளது கணவன் ஷங்கர் தன் காதை பிடித்து தொப்புகர்ணம் போடுவது போல பாவனை செய்தான், இதைக்கண்டு சங்கீதாவும், ரம்யாவும் சிரித்தார்கள். சங்கீதாவிடம் மரியாதை நிமித்தமாக சற்று நேரம் நின்று பேசினான் ஷங்கர்…. ஒஹ்ஹ்…. பரவாயில்லையே.. ரம்யா கிட்ட ரொம்ப நல்லா sorry கேட்க்குரீங் ஹாஹாஹ். உட்காருங்க ஷங்கர், ரம்யா நீயும்தான்.. feel free like your home – என்று சொல்லி ஹாலில் அவர்கள் அமர்ந்த இடத்தில் fan போட்டாள் சங்கீதா. குழந்தைகள் ஸ்நேஹாவும் ரஞ்சித்தும் ரம்யாவை நோக்கி வந்தார்கள். ரம்யா ஸ்நேஹாவின் red colour frock பத்தி அவளிடம் புகழ்ந்தாள், கூடவே ஒரு BOURNBON biscuit packet ஒன்றை குடுத்தாள். ஷங்கர் ரஞ்சித்தை கொஞ்சிக்கொண்டிருந்தான். இதற்கிடையில் சங்கீதா மீண்டும் பெட்ரூமுக்கு சென்று, தன் கணவனிடம் “வந்திருக்குற விருந்தாளிங்க கிட்ட மரியாதைக்கு ஒரு வார்த்தையாவது பேசணும். போயி பேசிட்டு இருங்க நான் coffee எடுத்துட்டு வரேன்.” என்று சொல்லி விட்டு coffee போட்டு அனைவருக்கும் எடுத்து வந்தாள் சங்கீதா. குமார் சுருக்கமாக தான் என்ன வேலை செய்கிறேன். எப்படி இருக்கிறேன் என்பதை கஷ்டப்பட்டு சிரித்து மென்மையாக சொல்லிவிட்டு அமைதியாக அமர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் ஆதித்யா channel ஐ ப் பார்த்துக்கொண்டிருந்தான். சங்கீதா அனைவரிடமும் சிரித்து பேசிக் கொண்டிருந்ததைப் பார்க்கும் யாருக்கும் சற்று முன் அவள் வீட்டில் எந்த வித வாக்குவாதமும் நடக்கவில்லை என்றுதான் தோன்றும். அந்த அளவுக்கு தனது பேச்சில் அனைத்தையும் மூடி மறைத்து அழகாக சமாளித்தாள் சங்கீதா. அனைவரும் coffee குடித்து முடிக்க, மீண்டும் “டிங்ங்…. டிங்ங்….” என்று calling bell சத்தம் கேட்டது. கதவை திறந்தாள் சங்கீதா. “good morning மேடம்” – என்றார் டிரைவர் தாத்தா, அகலமாக சிரித்துக்கொண்டு நெற்றியில் சுருக்கம் தெரிய புருவத்தை உயர்த்தி. ஒஹ்ஹ்… வந்துட்டீங்களா?… ஒரு நிமிஷம் இருங்க.. வந்துடுறோம். என்று சொல்லிவிட்டு சங்கீதா bedroom க்கு விரைந்து pack செய்த costumes எல்லாம் எடுத்து வைக்க, ஷங்கர் “அப்போ நான் கிளம்புறேன், நீங்க பார்த்துக்கோங்க” என்று சொல்லி விடை பெற்றான். “நானும் கிளம்புறேன்” – என்று சொல்லிவிட்டு குமார் அங்கிருந்து அமைதியாக விலகி நகர்ந்தான். “எங்க கூட வண்டியில வந்துடுங்க. நாங்களும் IOFI க்கு தான் போகிறோம்.” – என்று சங்கீதா அக்கறையாக சொல்ல.. “இல்ல பரவாயில்ல, வழியில கொஞ்சம் வேலை இருக்கு” – என்று சொல்லும்போது சேர்ந்து வர விருப்பம் இல்லை என்பதை கண்களால் சொல்லி விடை பெற்றான். okay take care, பார்த்து போங்க – என்று சொல்லி விட்டு திபு திபுவென அங்கும் இங்கும் பம்பரம் போல அனைத்தையும் எடுத்துக் கொண்டோமா என்று பார்த்தாள் சங்கீதா. நடுவில் “ஏய்ய் ரம்யா, அந்த naihaa கவரை அப்படியே வை. திருப்பி கலைச்சிட்டா எனக்கு எது எது எங்கே இருக்குன்னு confuse ஆகிடும்டி” என்று naihaa கவரை நொண்டும் ரம்யாவை லேசாக கடித்துக்கொண்டு, “ஏய் கண்ணுங்களா, சீக்கிரம் bathroomக்கு ஏதாவது போகணும்னா போய்டுங்க, வழியில அம்மாவ தொந்தரவு பண்ணாதீங்க” என்று ஸ்நேஹாவையும் ரஞ்சித்தையும் பார்த்து அன்பாக கண்டித்தாள்.

2 Comments

  1. No next part update New story update please

Comments are closed.