நான் செய்த எல்லா தவறுக்கும் இதுதான் எனக்கு தண்டனையாக இருக்கும் 30

என் பெயர் ஜெயசூர்யா. நான் ஒரு எம்பிபிஎஸ் டாக்டர். இந்த டிசம்பர் வந்தால் எனக்கு வயது 50. எனக்கு இருப்பதோ ஒரே வீடு, ஒரே கிளினிக், ஒரே மனைவி, ஒரே பெண் குழந்தை.
என் மனைவிக்கு வயது 40, என் குழந்தைக்கு வயது 19.

நாங்கள் இருப்பது ஊட்டி, எங்கள் இருவருக்குமே சொந்த ஊரு கோயம்புத்தூர் தான், ஆனால் கல்யாணம் ஆன முதல் வருடத்திலேயே ஊட்டியில் வந்து செட்டில் ஆகிவிட்டோம். எங்களுக்கு நாங்கள் மூவர் தான்,

கல்யாணம் ஆகி 20 வருடமாகிறது. என் மனைவி பக்கத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் தலைமையாசிரியையாக பணிபுரிகிறாள். அவள் பெயர் சந்திரா.
அப்புறம் எங்களின் ஒரே செல்ல மகள் கீர்த்திகா. 12ஆவது வரை எங்களுடன் ஊட்டியில் தான் கான்வென்ட்டில் படித்தாள், இப்பொழுது கோயம்புத்தூரில் உள்ள ஒரு மெடிக்கல் காலேஜில் இரண்டாமாண்டு ஹாஸ்டலில் தங்கி படித்துக்கொண்டிருக்கிறாள். மிகவும் அன்பான குடும்பம் எங்களுடையது. என் மனைவியே பேரழகி, எங்கள் குழந்தை என் மனைவியைவிட அழகாக இருக்கும்.

அவள் எங்களுடன் இல்லாத இந்த இரண்டு வருடமும் ரொம்ப கஷ்டமாக இருந்தது, சனிக்கிழமை ஆனால் போதும், நாங்கள் இருவரும் எங்கள் குழந்தையை பார்க்க கிளம்பி விடுவோம். ஒவ்வொரு வாரமும் இப்படித்தான். அந்த ஏரியாவிலேயே கிளினிக் வைத்திருக்கும் ஒரே டாக்டர் நான்தான், அதனால் ரொம்ப பிரபலம் நாங்கள்.

காசுக்கும், அன்புக்கும் பஞ்சமில்லை. இந்த 20 வருடத்தில் ஒருமுறை கூட எங்களுக்குள் சண்டை சச்சரவு வந்ததில்லை. பொறுமையின் சிகரம் என்று என்னை எல்லோரும் சொல்வார்கள், நான் கோபப்பட்டதே இல்லை. எதற்கும் அழட்டிக்கொள்ள மாட்டேன்.

எங்கள் மகள் குழந்தையாக இருக்கும் போதே முடிவெடுத்துவிட்டோம், ஒருவர் அன்பு காட்ட வேண்டும், இன்னொருவர் கண்டிப்புடன் இருக்க வேண்டும் என்று.
நான் அன்பானவனாகவும், என் மனைவி கண்டிப்பானவளாகவும் நடிக்க ஆரம்பித்து, இன்று வரை வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது. எங்கள் குழந்தைக்கு எங்கள் இருவர் மேலும் உயிர். நான் கொஞ்சம் ஜாலி டைப் என்பதால் என்னுடன் தான் அதிகமாக ஷேர் செய்துகொள்வாள். சில விஷயங்களை அம்மாக்கு தெரிய வேணாம்பா என்று சொல்வாள். ஆனால் நான் என் மனைவியிடம் சொல்லி விடுவேன். அவளிடம் எதையும் நான் மறைத்ததில்லை.

மிகவும் சந்தோசமாக போய் கொண்டிருந்தது எங்கள் வாழ்க்கை. ஒருநாள் கிளினிக்கில் இருக்கும் போது என் மகள் கால் பண்ணினாள். டாடி இதுபோல் எங்கள் காலேஜில் ஹாஸ்பிடல் விசிட் கூட்டி கொண்டு போகிறார்கள், பெங்களூரு போகணும் என்று சொன்னாள். அம்மாகிட்ட கேட்டுக்கடா செல்லம் என்றேன். நீங்க ஓகேவா சொல்லுங்க என்றாள். எனக்கு ஓகேமா, ஆனா அம்மாகிட்ட கேட்டுக்க என்றேன். எப்படியோ என் மனைவியிடமும் சொல்லி பெர்மிஸ்ஸன் வாங்கிவிட்டாள். 30 பேர் போவதாகவும், 4நாட்கள் என்றும் சொன்னாள்.

கொஞ்ச நேரத்தில் மீண்டும் கூப்பிட்டாள், எப்போமா போகணும் என்றேன், நாளைக்கு டாடி என்றாள், என்ன ஒடனேவா என்றேன். ஆமாம் டாடி என்றாள். நானும் அம்மாவும் ட்ரெயின் ஏத்தி விட அப்போ வந்தர்றோம்மா என்றேன். இல்ல வேணாம், பேரண்ட்ஸ்லாம் வர அல்லோடு இல்ல, அதில்லாம நான் என்ன குழந்தையா என்றெல்லாம் சொல்ல, செரி என்றும் நானும் விட்டுவிட்டேன்.

இருந்தாலும் எனக்கு உள்ளுக்குள் ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. ஏதோ எனக்கு செரியாகபடவில்லை.

வீட்டுக்கு வந்ததும் இரவு மனைவியிடம் சொன்னேன், அவளும் ரொம்ப யோசிக்காதீங்க என்று மட்டும் சொல்லி விட்டு படுக்க போனாள். முதல் நாள் ஃபோனில் பேசினாள் என் குழந்தை, இங்கே வந்துசேர்ந்துவிட்டோம் என்று. அடுத்த இரண்டு நாட்கள் ஃபோன் வரவில்லை, ட்ரை பண்ணி பார்த்தாலும் சுவிட்ச் ஆஃப் என்று வந்தது.

4 Comments

  1. Good father Revenge is correct. but the girl feel is our heart broken.the stroy was good

  2. .the stroy was good

  3. மன்னிச்சிடுங்க ராம்..நம்ம குழந்தைக்காக இதை பண்றேன் – 12

    எப்போ போடுவிக we are waiting admin bro

  4. Nan kalyanam pannikalama antha ponna ……..

Comments are closed.