நான் செய்த எல்லா தவறுக்கும் இதுதான் எனக்கு தண்டனையாக இருக்கும் 30

இதற்கிடையே என் மனைவி வேற கால் செய்து என்னாச்சு, எங்க போனீங்க என்று கேள்வி வேறு, நான் எதையோ சொல்லி சமாளித்தேன்,
பேசாமல் போலீஸ் ஸ்டேஷன் போகலாம் என்றால், நம்மூரு என்றால் பரவாயில்லை, வேறு மாநிலம் வேறு, என்ன செய்வது. குழப்பத்தில் எனக்கு பைத்தியமே பிடிப்பது போல இருந்தது.

செரி வீட்டுக்கு போகலாம் என்று முடிவெடுத்து கிளம்ப ஆரம்பிக்கும் போது, டீன் கால் செய்தார். நான் சொல்லுங்கமேம் என்றேன். பவித்ரா அப்பாக்கு கூப்பிட்டேன், அவரு அவகிட்ட பேசி இருக்காரு, பேசுனதுல அவளுக்கும், உங்க பொண்ணுக்கும் ஆக்சிடன்ட் ஆனதா சொல்றாங்க, என்றார்.

அவர் ஆக்சிடன்ட் என்று சொன்னதுமே எனக்கு அதிர்ச்சியில் அந்த இடமே ஃபேடு அவுட் ஆகி, மயக்கம் வந்தது, நல்ல வேலையாக கீழே விழுகவில்லை, உட்கார்ந்து விட்டேன். ஃபோன் கைதவறி கீழே விழுந்தது, மூச்சு இறைத்து, நெஞ்சு பக்கம் வலி வேறு. கொஞ்சம் ஆசுவாசப்படுத்தினேன்.

மீண்டும் அவருக்கு கால் பண்ணினேன், என்னாச்சு சார் என்றார், ஒண்ணுமில்ல மேம், ஃபோன் கீழ விழுந்திடுச்சு என்றேன், எந்த இடத்துல இருக்காங்க, எந்த ஹாஸ்பிடல் என்று கேட்டேன், அவர் சொன்னதும் நோட் பண்ணிக்கொண்டேன்,

மணி: 11:00
பொழுது: காலை
என் மனைவியிடம் நான் வெளியூர் போகிறேன் என்று மட்டும் சொல்லி ஃபோனை கட் செய்து, காரை அங்கேயே போட்டுவிட்டு, ஃபிலைட் பிடித்து ஒரு மணிநேரத்தில் பெங்களூரு போனேன்,

ஹாஸ்பிட்டலையும் சென்றடைந்தேன், கண்களெல்லாம் கண்ணீர், தேடி ஓடினேன், பேரை கண்டுபிடித்தேன் ஐசியுவில் இருப்பதாக சொன்னார்கள், எனக்கு அப்போதே எதோ பெரிய அடி போல என்று புரிந்தது, ஐசியு போனேன், அங்கே என்னை உள்ளே அனுமதிக்கவில்லை, பிறகு நானும் டாக்டர் என்று சொல்ல, என்னை அனுமதித்தார்கள், என் அன்பு மகளை நான் பார்த்தேன், முகமெல்லாம் காயம், கீறல், கையில் கட்டு, காலில் கட்டு, உடம்பில் அடிபடாத இடமே இல்லை, அவள் இதய துடிப்பு சத்தமும், மெஷினின் கிலிங் கிலிங் சத்தம் மட்டுமே கேட்டது.

அவளை பார்க்கும்போது, ஆக்சிடன்ட்டில் அடிபட்டதுபோல தெரியவில்லை. எனக்கு சந்தேகம் வந்தது, என் மகள்கூட இருந்த பெண் எங்கே என்று கேட்டேன், அவளுக்கு சாதாரண அடிதான், கீழே ஜெனரல் வார்டில் இருப்பதாக நர்ஸ் சொன்னார்.

என் மகளின் ரிப்போர்ட்ஸை கேட்டேன், டாக்டர் வருவாரு அவர்கிட்டயே கேட்டுகங்கோ, கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோ என்று, கன்னடம் கலந்த தமிழில் சொன்னார்.

கொஞ்ச நேரத்தில் ஒரு பெண் டாக்டர் வந்தார், அவர் ஓரளவு நல்ல தமிழ் பேசினார், நானும் என்னை டாக்டர் என்று அறிமுகம் செய்து கொண்டேன். அப்போ உங்ககிட்ட சொல்ல பிரச்னை இருக்காது என்றார். என்ன மேம் என்றேன், நர்ஸ் என்னனு சொன்னாங்க என்றார், ஆக்சிடன்ட் என்று சொன்னார்கள் என்றேன்.

பொம்பளபுள்ள பாருங்க அதான் நாங்க அப்படி சொல்ல சொன்னோம், என்றார், எனக்கு புரியவில்லை மேம் என்றேன். ஏக்ச்சுவளி உங்க பொண்ண கேங் ரேப் பண்ணிருக்காங்க என்றார். எனக்கு தலையில் இடி இறங்கியது, நான் அமைதியாக காட்டிகொண்டேன்.

அவர் எக்ஸ்பிளைன் பண்ண வந்தார், வேணாம் மேம், ரிப்போர்ட்ஸ் குடுங்க நானே படுச்சு பாத்துக்கிறேன் என்றேன். படிக்க படிக்க எனக்கு கண்ணீர் ஊத்தியது, நான்கு பேர் என் பெண்ணை சீரழித்திருக்கிறார்கள்,

கொலை செய்வது நோக்கம் இல்லை என்று எழுதி இருந்தது, அவர்களிடம் சண்டை போட்டிருக்கிறாள், அதில் கடுமையாக தாக்கி இருக்கிறார்கள், இன்னும் பலது இருந்தது, இன்னும் தாங்கவன்னா கொடுமையை என் குழந்தைக்கு செய்திருக்கிறார்கள், எனக்கு அதற்க்கு மேல் படிக்க முடியவில்லை.

இதெல்லாம் உண்மை இல்லை, எல்லாமே கனவு, கனவு என்று கண்மூடி திறந்தேன், இல்லை எல்லாம் நிஜம் தான், என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. செத்துவிடலாம் போல இருந்தது, என் குழந்தை எவ்வளவு துயரத்தை அனுபவித்து இருப்பாளோ தெரியவில்லை.

நினைக்கயில் நெஞ்சில் ரத்தம் வழிவது போல இருந்தது. எல்லோரும் எங்கள் ஏரியாவில் என்னை பொறுமையான டாக்டர், நல்ல டாக்டர், என்பார்கள், ஏழைகளிடம் நான் காசு வாங்கியதே இல்லை, எல்லோரும் என்னை வாழ்த்தி விட்டு தான் போவார்கள்,

ஒருவரின் வாழ்த்து கூடவா என் குழந்தையை காப்பாற்றவில்லை. என்று எனக்குள் புலப்பினேன், மீண்டும் அந்த டாக்டரிடம் போனேன், அவரிடம் விசாரிக்க, கர்ப்பப்பை severeஆக டேமேஜ் ஆகி இருப்பதால், எடுக்க வேண்டும் என்றார், என் மகளுடனே என் வம்சம் முடிந்து விட போகிறதே என்று கவலையாக இருந்தது, எனினும் என் குழந்தை உயிரோடு இருந்தாலே போதும் என்று தோன்றியது.

ஏதாவது முன்னேற்றம் இருக்கிறதா என்றேன், இப்போ அன்கான்சியஸாக இருக்கிறாள், தலையிலும் அடிபட்டு இருக்கு, ஸ்கேன் செய்யவேண்டும் என்றார். இன்னும் ஒரு 10 நாட்களில் கண் முழித்து விடுவார். வலி தெரியக்கூடாது என்பதற்காக ஹெவி செடேடிவ் குடுத்திருப்பதாக கூறினார்.

பார்க்க allow பண்ணுவீர்களா என்றேன், ஓகே என்றார், நான் பக்கம் போனேன், என் குழந்தை வெறிபிடித்த ஓநாய்களிடம் சிக்கி சின்னாபின்னமான ஒரு ஆட்டிக்குட்டியை போல கிடந்தாள். என்னை அறியாமல் என் கண்ணில் இருத்து கண்ணீர் ஊற்றியது.

உங்க ஊருக்கு கொண்டு போவது என்றால் கொண்டு செல்லுங்கள் என்றார். இல்லை டாக்டர் இங்கேயே இருக்கட்டும் என்றேன். நாளை என் மனைவியை கூட்டி வருவேன், அவளிடம் ஆக்சிடன்ட் என்றே சொல்லுங்கள் என்றேன். அவர் சிரித்து, யு டோன்ட் ஒர்ரி டாக்டர் என்றார். நான் தேங்க்ஸ் சொல்லிவிட்டு என் குழந்தையுடன் போன அந்த பெண்ணை தேடி போனேன்.

4 Comments

  1. Good father Revenge is correct. but the girl feel is our heart broken.the stroy was good

  2. .the stroy was good

  3. மன்னிச்சிடுங்க ராம்..நம்ம குழந்தைக்காக இதை பண்றேன் – 12

    எப்போ போடுவிக we are waiting admin bro

  4. Nan kalyanam pannikalama antha ponna ……..

Comments are closed.