நான் செய்த எல்லா தவறுக்கும் இதுதான் எனக்கு தண்டனையாக இருக்கும் 30

அவள் கீழே ஜெனரல் வார்டில் இருந்தாள், ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு இருந்தது, கையில் லேசான சிராய்ப்பு காயங்களும் இருந்தது, இந்த பெண்ணிற்கு ஏதும் பெரிய பாதிப்பு இருப்பதாக தெரியவில்லை. என்னைப் பார்த்ததும் எழும்பி உட்கார முயற்சி செய்தாள், நான் உட்காருமா என்றேன்.

அவளை இப்பொழுது தான் முதல் முதலாக பார்க்கிறேன், எப்டிமா இருக்கு ஒடம்பு என்றேன், இப்போ பரவாயில்லை அங்கிள் என்றாள். உன் அம்மா, அப்பாலாம் எங்கமா என்றேன், அவங்கலாம் வரமாட்டாங்க என்றாள், செரி அது எனக்கு எதுக்கு என்று நான் ஏதும் கேட்கவில்லை, எங்க போனீங்க, எதுக்கு போனீங்க என்று கேட்க அவள் பதில் சொல்லவே இல்லை.

பாப்பா உன் ஃப்ரெண்ட மேலே போய் ஒரு நிமிஷம் பாத்துட்டு வா, அப்புறம் நீயே சொல்லுவ என்றேன். அழுக ஆரம்பித்தாள், சொல்லுமா என்றேன். என் அண்ணாவோட ஃபிரெண்டு தான் விக்கி, எங்கண்ணா மூலமா தான் எனக்கு தெரியும், அதில்லாம எங்க சீனியர் அவன்.

கீர்த்தியை லவ் பண்றதா சொன்னான், என்கிட்டே ஹெல்ப் கேட்டான், நானும் அவ நம்பரை குடுத்தேன், அதற்கப்பறம் ரென்டு பெரும் பேசி லவ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு இதையெல்லாம் கேட்க ஆச்சரியமாக இருந்தது. அப்பறம் என்றேன். இப்படியே ஒரு 6 மாசம் இருக்கும். ஒருநாள் அவுட்டிங் போலாம்னு முடிவு பண்ணோம், ஆனா டைம் கிடைக்கல, சோ இந்த சந்தர்ப்பத்தை யூஸ் பண்ணி,

உங்ககிட்ட பொய் சொல்லி பெர்மிஸ்ஸன் வாங்கிட்டா கீர்த்தி. 3 நாள் முன்னாடியே விக்கி கார்ல கெளம்புனோம், அப்புறம் என்றேன், அவன் கூட 3 ஃபிரெண்ட்ஸ் வந்தாங்க, அவங்க மூணு பேருமே எங்க சீனியர்ங்கிற நால நாங்க சகஜமா பழகுனோம்.

பெங்களூர்ல இருக்க விக்கி ரிசார்ட்க்கு போனோம், அவங்களுக்குலாம் ஒரு ரூம், நானும் கீர்த்தியும் ஒரு ரூம். நைட்லாம் ரொம்ப ஜாலியா பேசிட்டு சிருச்சுட்டு இருந்தோம். கீர்த்தி என்கிட்டே இதுதான் என் வாழ்க்கையிலேயே நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்த நாளு, அத ஏற்படுத்தி குடுத்த உனக்கு தேங்க்ஸ்டின்னு சொன்னா.

நான் அப்புறம் என்றேன். நாங்க எல்லாரும் ட்ரிங்க்ஸ் பண்ணிருந்தோம், கீர்த்தி வேணாம்னு சொல்லிட்டா, ஒரு 1 மணி இருக்கும் போது கீர்த்தி அழுகுற, மொனகுற சத்தம் கேட்டுச்சு, என்னன்னு பாத்தா, அவங்க 3 பேரு கீர்த்தி கை கால பிடுச்சுக்க, விக்கி கீர்த்திக்கிட்ட தப்பு பண்ணிட்டு இருந்தான்.

நான் கத்துனேன், அவங்க என்ன உள்ளே போடினு சொல்லி கதவை பூட்டிட்டாங்க, விடியற வரை கீர்த்தி அலறல் சத்தம் மட்டும் தான் கேட்டுட்டே இருந்துச்சு, என்றாள். காலைல கதவை திறந்து விட்டாங்க, நான் கீர்த்தி எங்கன்னு கேட்டேன், அவ மாடில இருந்து குதிச்சுட்டா, கீழ கெடப்பா அப்டின்னாங்க.

4 Comments

  1. Good father Revenge is correct. but the girl feel is our heart broken.the stroy was good

  2. .the stroy was good

  3. மன்னிச்சிடுங்க ராம்..நம்ம குழந்தைக்காக இதை பண்றேன் – 12

    எப்போ போடுவிக we are waiting admin bro

  4. Nan kalyanam pannikalama antha ponna ……..

Comments are closed.