நான் செய்த எல்லா தவறுக்கும் இதுதான் எனக்கு தண்டனையாக இருக்கும் 30

flight ஏறியவுடன் யோசிக்க ஆரம்பித்தேன், மிகப்பெரிய காரியத்தில் இறங்க போகிறேன், என்னால் இது முடியுமா, என்னிடம் இதை செய்து முடிக்க சக்தி இருக்கிறதா, என்னால் என் குடும்பத்துக்கு எந்த தீங்கும் வராதபடி என்னால் முடிக்க முடியுமா என்று 1000 முறை யோசித்து பார்த்தேன், அப்போது எனக்கு இருந்த கோபத்தை என் செயலில் காட்ட வேண்டும் என்று முடிவெடுத்தேன், நான் செய்யப்போவது தர்மமா அதர்மமா என்று தெரியாது, ஆனால் என்னை பொறுத்தவரை என் மனசு அமைதி ஆகும் வரை நான் எது செய்தாலும் தர்மம் தான் என்று முடிவெடுத்தேன்.

மணி: 8:00
பொழுது: இரவு
ஊட்டியே வந்தடைந்தேன், வீட்டுக்கு போனேன், ஒரு பெட்டி எடுத்தேன், நான் சேமித்து வைத்திருந்த ஒரு 10லட்சத்தை எடுத்துக்கொண்டேன். எங்கள் ஏரியாவில் ராஜபாண்டி என்று ஒருவர் இருக்கிறார், மில்அதிபர், அதுமட்டுமில்லாது கட்டப்பஞ்சாயத்து எல்லாம் செய்பவர்.

அவர் வீட்டின் குடும்ப டாக்டர் நான் தான். நேராக அவரை பார்க்க வீட்டுக்கே போனேன், என்ன டாக்டர் இந்த நேரத்தில என்றார். உங்களால எனக்கு ஒரு காரியம் ஆகனும் என்றேன், சொல்லுங்க பண்ணிடுவோம் என்றார். ஒரு 4பேரை கடத்தி என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றேன்.

கொஞ்சம் அதிர்ச்சியானார், என்ன டாக்டர் என்ன விஷயம் என்று ஆரம்பித்தார், ப்லீஸ் காரணம்லாம் கேட்காதீங்க உங்களால முடியும்னா பண்ணி குடுங்க என்றேன், அவர் ஆச்சரியமாக, கேக்காதவரு உதவின்னு கேற்றுகீங்க செய்யாம எப்படி என்றார். அட்ரஸ் குடுங்க என்றார், நான் அந்த நாலு பேர் இப்போ தங்கி இருக்கும் அட்ரெஸ்ஸை கொடுத்தேன், சிரித்தார்,

ஏன் ராஜா என்றேன், ரொம்ப நல்லதா போச்சி, எங்க பசங்க ஒரு பார்ட்டிகிட்ட பணம் வாங்க பெங்களூரு தான் போயிருக்கானுக இதோ தூக்கிருவோம் என்றார். எப்போ என்றேன், நாளைக்கு காலைல 5 மணிக்கி நீங்க தூக்க சொன்ன ஆளுக இங்க இருப்பாங்க என்றார். பணம் என்றேன், நீங்க அந்த பசங்ககிட்ட பேசிக்கங்க என்றார். என் நம்பரை கொடுத்து அவர்கள் வந்ததும் என்னை அழையுங்கள் என்றேன், அவர் கண்டிப்பாக அழைப்பதாக கூறினார், செரி என்று நான் கிளம்பினேன்,

ஒரு 5 வருடம் முன்பு எனக்கு கொஞ்சம் காட்டை ஒட்டி ஒரு கிளினிக் இருந்தது, அதிக மாசுபடும் ஏரியா என்பதால் அதை கவர்மண்ட் அதிகாரிகள் மூடிவிட்டார்கள். அந்த இடத்தை மேடான பகுதியாக ஆக்கிவிட்டதால், என் இடம் கீழே பாதாளத்தில் இருப்பது போலவே இருக்கும். யார் பார்வைக்கும் இப்படி ஒரு இடம் இருப்பது கூட தெரியாது. நான் முதன் முதலில் பார்த்து பார்த்து கட்டிய இடம், 20க்கு 20 என்ற சதுரமான இடத்தில், எல்லா வசதிகளும் செய்து வைத்திருந்தேன், குழாயுடம் தண்ணீர் வசதி, எலக்ட்ரிக் அடுப்பு, பிரிட்ஜ், ஹீட்டர், கழிவறை, டிவி, கம்ப்யூட்டர், சில சமயம் அங்கேயே உறங்கி கொள்வதற்காக அங்கேயே பெட் கூட இருந்தது, எனக்கு மிகவும் பிடித்தமான இடம், இப்பொழுதும் நான் relax செய்ய அங்கே தான் போவேன், என்ன ஒரே குறை, அந்த இடத்தை தடை செய்து விட்டதால் மின்சாரம் கிடையாது, ஆனால் generator வசதியும் செய்து வெய்துள்ளேன், நான் இப்போ இருக்கும் ஏரியாவிக்கு ஒரு 4கி.மீ தள்ளி இருக்கும், மனித நடமாட்டம் இல்லாத ரெஸ்ட்ரிக்டெட் ஏரியா. ஆனால் வாகனங்கள் செல்ல முடியும், என்ன செய்ய போகிறேன் என்பதை திட்டம் போட்டேன்,

அதன் முதல் படியாக எங்கள் ஊட்டியில் உள்ள பெரியாஸ்பத்திரிக்கு போனேன். அங்கே போக எனக்கு சிறப்பு அனுமதி உண்டு. போகும் போதே ஒரு டிராவல்பேக் கொண்டு போனேன், அறுவை சிகிச்சை பிரிவு பிளாக்குக்கு போனேன், ஆபரேஷன் செய்ய தேவையான அனைத்து உபகரணங்களையும் திருடி எடுத்துக்கொண்டேன். ஒரு ஹார்ட்வார் ஸ்டோர் சென்று, ச்சைன் ஷா, நாய்களை கட்டி வைக்கும் இரும்புச்சங்கிலிகள், பெரிய பாலித்தீன் விரிப்புகள், ட்ரில்லர் மெஷின், வாங்கிக்கொண்டேன்.

மெடிக்கல் ஷாப் சென்று, 15 சாலைன் பாட்டில்கள், 10 இன்ஜெக்ஷன் செட்கள், பஞ்சு, கை உரைகளும் வாங்கிக்கொண்டேன்.
மணி 9:30 இருக்கும், மீண்டும் என் பழைய கிளினிக் போனேன், எல்லாவற்றையும் சுத்தம் செய்தேன், அதிலேயே ஒரு மணிநேரம் ஆனது. இன்றைய நாள் ரொம்ப அலைச்சல் என்பதால் அப்படியே படுத்து உறங்கினேன். காலையில் ஒரு செல்போன் அழைப்பு என்னை எழுப்பியது, மணி 4 இருக்கும், யாரென்று கேட்டேன் நான் பாபு சேகர் என்றார். யாருன்னு தெரிலேயே என்றேன், ராஜா அண்ணன் என்றார், ஓஹ் தூக்கியாச்சா என்றேன், இங்க தான் இருக்கானுக என்றார்.

நான் எங்கே வரட்டும் என்றார். நான் என் வீட்டு அட்ரெஸ்ஸ குடுக்க, ஒரு எய்ச்சேர் வேனில் வந்தார்கள். நான் அதற்குள் பல் விளக்கி, குளித்தேன். ஒரு 20 நிமிடத்தில் வந்தார்கள், எனக்கு பதற்றம் தொற்றிக் கொண்டது. நான் வெளியில் நின்றேன், சேகர் வந்தார் ஒரு 40 வயது இருக்கும், 4 சாக்கு மூட்டைகளை கீழே இறக்கினார்கள், கூட ஒரு பய்யன் இருந்தார், அவன் அப்படியே இழுத்து வந்தான், எங்கே வைக்கணும் டாக்டர் என்றான், நான் உள்ள வெச்சுடுபா என்று சொல்ல, நாலையும் வைத்தான்.

நான் பாக்கலாமா என்றேன், இருங்க என்று சேகரே மூட்டையை திறந்தார், நான்கு மூட்டையையும் திறக்க, அதே நான்கு பேர் தான், விக்கி, விஷ்ணு, சம்பத், ராஜ். நான் இவர்களே தான் என்றேன்.

ஒன்னும் பிரச்சனை வராதே என்றேன், இல்லை டாக்டர் யாருக்கும் தெரியாமல் கிளீன் ஸ்கெட்ச் போட்டு தூங்கினோம், அதும் வீட்டில் இல்லை, வெளியில் வைத்து என்றார். நல்லது நல்லது என்றேன்.
எவ்வளவு என்றேன் 4 பேருக்கு 2 லட்சம் என்றார். நான் 2 லட்சமும் கூட 10ஆயிரம் சேர்த்து கொடுக்க, சந்தோசமாக வாங்கிக்கொண்டார்.

அப்புறம் ஏதாச்சுனா கூப்டுங்க என்றார், உங்க நம்பர் என்றேன், விசிட்டிங் கார்டு கொடுத்தார், அதுல பி.எஸ் என்று போட்டு இருந்தது, பாபு சேகர் அவர் பெயரில் முதல் எழுத்துக்கள். கண்டிப்பாக உதவி வேண்டுமென்றால் கூப்பிடுகிறேன் என்றேன். அவர்கள் கிளம்பினார்கள்.

4 Comments

  1. Good father Revenge is correct. but the girl feel is our heart broken.the stroy was good

  2. .the stroy was good

  3. மன்னிச்சிடுங்க ராம்..நம்ம குழந்தைக்காக இதை பண்றேன் – 12

    எப்போ போடுவிக we are waiting admin bro

  4. Nan kalyanam pannikalama antha ponna ……..

Comments are closed.