நான் செய்த எல்லா தவறுக்கும் இதுதான் எனக்கு தண்டனையாக இருக்கும் 30

எப்படி அங்கிள் இவ்ளோ கூலா ஹாண்டில் பண்றீங்க என்றாள், முடுஞ்ச விஷயத்துக்கு ரியாக்ட் பண்ணி என்னமா யூஸ் இருக்கு என்றேன். செரி காலேஜ்ல ஏதும் சொல்லவேண்டாம் என்றேன். ச்ச ச்ச கண்டிப்பா சொல்லமாட்டேன் அங்கிள் என்றாள்.

இருவரும் ஃபிலைட் பிடித்து கிளம்பினோம்,
அவளை காலேஜ் ஹாஸ்டலில் விட்டிவிட்டு நான் ஊட்டி போனேன்.

என் மனைவி என்ன நடக்கிறது என்று தெரியாத குழப்பத்தில் தலையில் கைவைத்தப்படி உட்கார்ந்து இருந்தாள்.
போனவுடம் என்னங்க என்று ஓடி வந்தாள், எங்க நம்ம குழந்தை என்றாள், நான் அவளை கட்டிப்பிடித்துக்கொண்டேன், ஷாக் ஆகாத என்று சொல்லி, கீர்த்திக்கு பெங்களூர்ல ஆக்சிடன்ட் ஆயிடுச்சு என்றேன் அய்யயோ என்று அழுதாள், நான் இறுக்கி அணைத்துக்கொண்டேன், ஒன்னும் பயப்பட்றமாதிரி இல்ல, சீக்கிரம் குணம் ஆயிடுவா என்றேன். வாங்க உடனே போலாம் என்று அழுதாள், போ உனக்கு 10 நாளுக்கு தேவையான எல்லா துணியையும் எடுத்துக்க என்றேன். எதுக்கு 10 நாளு அவ்ளோ அடியா சொல்லுங்க என்றாள், என்னால் ஏதும் பதில் கூற முடியவில்லை, கொஞ்சம் கோபமாக சொல்றத மட்டும் செய் என்றேன்.

மணி: 5:00
பொழுது: மாலை
10 நிமிடத்தில் வந்தாள், உடனே கோயம்புத்தூர் போனோம், ஃபிலைட் பிடித்தோம், என் தோளில் சாய்ந்தபடி அழுதுகொண்டே இருந்தாள், என்னவள் அழுது அழுது கலையிலந்து இருந்தாள், அவளை என் நெஞ்சோடு அனைத்துக்கொண்டு, கவலைப்படாத தங்கம், நாம யாருக்கும் எந்த தீங்கும் செஞ்சதில்லை, நமக்கு எந்த கெடுதலும் நடக்காது என்றேன். என் நெஞ்ஜோடு தன் முகத்தை அழுத்திக்கொண்டாள். அவள் வெளியே அழுதாள், நான் உள்ளுக்குள் அழுதேன்.

மணி: 6:30
பொழுது: மாலை
ஹாஸ்பிட்டல் வந்தடைந்தோம், எனக்கு தெரிந்த அதே டாக்டரிடம் சொல்லி ஐசியு போனோம், என் மகளின் கோலத்தை பார்த்து கதறித்துடித்தாள், நான் அவளை அணைத்து பிடித்துக்கொண்டேன். அவள் கதறிய கதறலால் அங்கே இருப்பவர்களுக்கு கூட நெஞ்சம் கலங்கி இருக்கும்.

அவளை உட்கார வைத்தேன், ஒரு வார்த்தை தான் அவளிடம் சொன்னேன், நீ ஸ்ட்ராங்கா இருந்தா தான் நானும் ஸ்ட்ராங்கா இருப்பேன், நீயே இப்படி கலங்கிட்டா நான் அவ்ளோதான் என்றேன், கண்களை துடைத்துக் கொண்டாள், நான் என்றால் உயிர் அவளுக்கு, அதன் பின் அவள் அழுகவில்லை.

நான் ஊட்டி போகணும் என்றேன், ஏன் எதற்கு என்று கேட்கவில்லை, எப்போ வருவீர்கள் என்றாள், நான் கூப்படறேன் என்று மட்டும் சொல்லி மீண்டும் ஏர்போர்ட் கிளம்பினேன்.

4 Comments

  1. Good father Revenge is correct. but the girl feel is our heart broken.the stroy was good

  2. .the stroy was good

  3. மன்னிச்சிடுங்க ராம்..நம்ம குழந்தைக்காக இதை பண்றேன் – 12

    எப்போ போடுவிக we are waiting admin bro

  4. Nan kalyanam pannikalama antha ponna ……..

Comments are closed.