நான் செய்த எல்லா தவறுக்கும் இதுதான் எனக்கு தண்டனையாக இருக்கும் 30

சொல்லுங்க அங்கிள் என்றாள், கீர்த்தி கண் முழுச்சுட்டாலா என்றாள், இன்னும் இல்லமா ஊட்டில இருக்கா, நான் ஒரு வேலை விஷயமா வெளியூர் போனும், உன்னால ஒருநாள் அவளைபாத்துக்க முடியுமா என்றேன், நீ ஒன்னும் பயப்பட வேணாம் கூட என் மனைவி இருப்பா என்றேன், கொஞ்சம் தயங்கினாள், நான் வரியாமா என்றேன், உன்ன கூட்டிட்டு போயிட்டி திரும்ப விட்டுர்றேன் என்றேன். ஓகே அங்கிள், சூர் என்றாள். யார்கிட்டயும் சொல்லிக்க வேண்டாம்மா என்றேன்.

ஓகே அங்கிள் இப்போ எங்க இருக்கீங்க என்றாள், உன் காலேஜ் முன்னாடி தான் நிக்கறேன் என்றேன். ஓ அப்படியா இன்னிக்கேவா என்றாள், இருங்க ஒரு 20 நிமிடத்தில் வந்துர்றேன் என்று வந்தாள், என்னை பார்த்ததும் சிரித்தாள். ஒரு கொலைகார புன்னகை போல எனக்கு இருந்தது.

நேராக ஊட்டி கிளம்பினேன், வழியில் முழுக்க நல்லவள் போல என் பெண்ணை பற்றியே விசாரித்து வந்தாள். உன்ன மாதிரி ஃபிரெண்ட் கிடைக்க என் பொண்ணு குடுத்து வெச்ருக்கணும்மா என்றேன். அப்படியே சிலாகித்தாள். அவளை பார்த்தேன், நல்லவள் போலவே இருந்தாள், ஒருவேளை அவர்கள் இவளை பற்றி பொய் சொல்லி இருந்தால் என்ன செய்வது என்று இருந்தது, இருந்தாலும் வாழ்க்கை முடியும் சமயத்தில் எவனும் பொய் சொல்ல மாட்டான் என்று நினைத்து கொண்டேன்,

நேராக என் பழைய கிளினிக்குக்கு போனேன், அவர்கள் நால்வரும் போன பின்பு வருத்தபட்ட என் கிளினிக், பவித்ராவின் வருகைக்கு பின் புத்துயிர் பெற்றது, வாமா என்று உள்ளே கூப்பிட்டேன், இதென்ன அங்கிள் என்றாள், இது என்னோட பழைய கிளினிக் என்றேன்,

சின்ன இடமா இருந்தாலும் நல்லா இருக்கு அங்கிள் என்றாள். உனக்கு பிடுச்சிருக்காமா என்றேன் ரொம்ப பிடுச்சிருக்கு அங்கிள், இந்த இடம், க்ளைமேட் எல்லாமே சூப்பர் என்றாள். இதென்ன பெட், கட்டில் லாம் போட்டு வெச்ருக்கீங்க என்றாள், எல்லாம் யூஸ் பண்ண தான் என்றேன். அவள் வேடிக்கை பார்க்கும் போது மெதுவாக பின்னால் வந்து ட்ராங்களைசர் உதவியுடன் மயக்க மருந்து செலுத்தி மயக்கம் ஆக்கினேன், அப்படியே பெட்டில் போட்டேன், கையை bedஉடன் சேர்த்து சங்கிலியால் பூட்டி விட்டேன்.

அரை மயக்கத்தில் ஏன் அங்கிள் என்றாள், என்னோட பொண்ணுக்கு நீ செஞ்ச உதவிக்கு நான் செய்யும் கைம்மாறு என்றேன், உங்களுக்கு எப்படி தெருஞ்சுச்சு என்றாள். எனக்கு இவள் இப்படி கேட்ட பின்பு தான் என் 4 பெண்கள் சொன்னது உண்மை என ஊர்ஜிதம் ஆனது. நீ செய்த த்ரோகத்துக்கு இதுதான் என் தண்டனை, அப்படினா என்றாள், இனிமேல் நான் சாகிற வரை இங்க தான் எனக்கு துணையா எங்கூட இருக்க போற என்றேன், அதை கேட்டு ஷாக் ஆகி, முழு மயக்கம் அடைந்தாள். எனக்கு அவள் வருகை ஒரு புதிதான மகிழ்ச்சியான உணர்வை கொடுத்தது.

உடனே என் கிளினிக்கை பூட்டினேன், என் மனைவிக்கு கால் பண்ணினேன், ஏங்க வேலையெல்லாம் முடுஞ்சுச்சா என்றாள், சிறப்பா முடிந்தது, நான் இப்போ அங்க வர்றேன்.இன்றே கீர்த்தியை டிஸ்சார்ஜ் செய்து விடலாம் என்றேன். செரி சீக்கிரம் வாங்க என்றாள், ஹ்ம்ம் இதோ 2 மணி நேரத்தில் அங்கே இருப்பேன் என்று சொல்லி போனை துண்டித்து என் காரில் ஏறினேன்.

ஹாஸ்பிடல் சென்றடைந்தேன், அங்கே போனதும் என் மனைவி சந்தோசமாக ஓடி வந்து என்னை கட்டிக்கொண்டாள், நான் என் குழந்தையை பார்க்க சென்றேன், காயங்கள் முழுவதும் ஆறி தேறிவிட்டாள், எனக்கு என் குழந்தை மீண்டும் கிடைத்து விட்டதை போல உணர்ந்தேன், அன்றைய பொழுது முழுவதையும் அங்கேயே கழித்தோம், ஏங்க ரொம்ப நேரம் ஆயிடுச்சு இன்னிக்கு வேணா, இங்கே எதாது hotelல தங்கிக்கலாம் என்றாள்,எனக்கும் அதான் செறி என பட்டது, நன்றாக முதலில் சாப்பிட்டோம், நல்ல சாப்பாடு சாப்பிட்டு மாச கணக்கு ஆனது,

மூவரும் உறங்கினோம், என் பெண் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டால் என்று தோன்றியது, ஒரு 3 மணிக்கு எனக்கு விழிப்பு வந்தது, எழுந்தேன் பார்த்தால் என் மகளை காணவில்லை, மெதுவாக என் மனைவியை எழுப்பாமல் எழுந்து பார்த்தேன், பக்கத்து ரூமில் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு வாயில் கைவைத்த படி வெளியே சத்தம் கேட்காமல் அழுது கொண்டிருந்தாள், அதை பார்த்ததும் என் இதயம் சுக்கு நூறாய் உடைந்து போனது, என் குழந்தை நார்மலாக தான் இருக்கிறாள் என்று நினைத்தேன், ஆனால் அப்படி இல்லை என்று புரிந்தது,

மெதுவாக அவள் பக்கம் அமர்ந்தேன், என் மீது சாய்ந்து கொண்டாள், அப்பா நடந்தது எனக்குள் ஓடி கொண்டே இருக்கிறது, என்னை நினைத்தால் எனக்கு அருவருப்பாக இருக்கிறது, ஏதோ என் மீது அசிங்கம் பட்டது போல இருக்கிறது, செத்தரலாம் போல இருக்குப்பா என்றாள், நான் மார்போடு அணைத்து கொண்டேன், நீ செத்தா உன் ஒருத்தி உயிர் மட்டும் போகாதுமா, உன் அம்மா உயிரு, என் உயிருன்னு சேர்ந்து போகும், ஏன்னா உன் உயிர்ல தான் எங்க ரெண்டு பேரோட உயிரும் கலந்து இருக்கிறது என்றேன்,

அப்பா இருக்கேன்ல உன்மேல பற்றுக்க கலங்கத்தை நான் போக்குவேன், உன்மேல ப்ராமிஸ் என்றேன், அந்த 4 பேரு பா என்றாள், எல்லாம் நான் பாத்துகிறேன் என்றேன், மீண்டும் படுத்து கொண்டாள், காலை பொழுது விடிந்தது, இன்னும் ஒருநாள் இங்கேயே இருக்கலாம் என்று முடிவு செய்து நன்றாக ஊரை சுத்தி பார்த்தோம், இரவு அறைக்கு வந்து படுத்து கொண்டேன், எனக்கு திடீரென்று பவித்ரா ஞாபகம் வந்தது, அய்யயோ அவளை மறந்து விட்டேனே, இரண்டு நாட்கள் 6 வேளை சாப்பிடவில்லை, குளிர் வேற, ஹீட்டர் போடாமல் வந்து விட்டேனே, போர்வை கூட போர்த்த வில்லையே, கையையும் கட்டி வைத்து விட்டேன், எனக்கு மனம் படபடத்தது, எனக்கு ஒருகட்டத்தில் அவள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது, மணியை பார்த்தால் 12,

என்ன சொல்லி நான் கிளம்புவது என்று மனம் பதபதைத்தது, செறி எல்லாம் விதிப்படி என்று முடிவு செய்து என்னை அமைதியாக்க முயற்சி செய்தேன், என்னதான் அவள் கெட்டவள் என்றாலும் எனக்குள் இருக்கும் மனிதாபிமானம் என்னை torture செய்தது, அவ்வளவு தீங்கு செய்த அந்த நால்வருக்கு கூட நான் வேளா வேளைக்கு நல்ல உணவழித்து பார்த்து கொண்டேன், ஆனால் இவளை விட்டுவிட்டேனே என்று தோன்றியது.

எப்போடா விடியும் என்று wait செய்தேன், 9 மணிக்கு flight, கிளம்பினோம், 11:15க்கு ஊட்டி வந்தடைந்தோம், நாங்கள் வீட்டுக்கு வந்ததும், இரு வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு என் பழைய கிளினிக் இருக்கும் இடத்திற்கு சென்றேன், 99 சதவிகிதம் அவள் இறந்திருப்பாள் என்று தெரிந்தாலும் 1 சதவீதம் அவள் உயிரோடு இருப்பாள் என்று என் மனதிற்கு தோன்றியது…

என் கிளினிக் கதவை திறந்தேன், உள்ளே பார்த்தேன், பெட்டில் இருந்து கீழே விழுந்து சுயநினைவு இல்லாமல் இருந்தாள்,

ஹார்ட்beat செக் செய்தேன் மெதுவாக துடித்தது, எல்லாம் சீராக இருப்பது போல தான் இருந்தது, உடம்பு ஐஸ் கட்டி போல இருந்தது, உடனே அவளை தூக்கி கொண்டு என் இப்போதைய கிளினிக் சென்றேன், அங்கே உயிர் காக்கும் உபகரணங்கள் எல்லாமே இருக்கும், ஹீட்டர்ஐ fullஇல் வைத்து, வாளியில் சூடு நீரை நிரப்பு அவளை உள்ளே உட்கார வைத்தேன், அதற்குள் அவளுக்கு இன்ஜெக்ஷன் மற்றும் saline போட்டேன், ஒரு 3 மணி நேரம் கழித்து கண் விழித்தாள்,

அப்பாடா என்று பெருமூச்சு விட்டேன், உடம்பில் சுத்தமாக சத்துஇல்லை அவளுக்கு, கொஞ்ச நேரத்தில் நார்மல் ஆகினாள், நான் வாங்கி வைத்த சாப்பாட்டை தட்டில் போட்டு கொடுத்தேன், 10 நாள் சாப்பிடாதவள் போல வேகமாக சாப்பிட்டாள், எனக்கு பார்க்க பாவமாக இருந்தது, எதுவும் பேசாமல் போய் படுத்துக்கொண்டாள்,

4 Comments

  1. Good father Revenge is correct. but the girl feel is our heart broken.the stroy was good

  2. .the stroy was good

  3. மன்னிச்சிடுங்க ராம்..நம்ம குழந்தைக்காக இதை பண்றேன் – 12

    எப்போ போடுவிக we are waiting admin bro

  4. Nan kalyanam pannikalama antha ponna ……..

Comments are closed.