எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 3 77

ஹேமா ரகு கோயிலுக்கு சென்றபோது நடந்தது,

ஹேமாவும் ரகுவும் பைக்கில் சென்று கோயிலுக்கு அருகாமையில் பைக்கை பார்க் செய்து விட்டு கோயிலுக்குள் சென்றனர். சாமிக்கு அலங்காரம் செய்து தீபம் காட்டிக் கொண்டிருந்தனர். ஹேமாவும் ரகுவும் சாமி கும்பிட்டு கொண்டிருக்க, அவர்களுக்கு எதிரில் சேகர் அவன் அம்மா அவனது அப்பா மூவரும் நின்று சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பூசாரி தீபம் காட்டிவிட்டு விளக்கை எடுத்து வர அதை ஹேமாவும் ரகுவும் தொட்டுக் கும்பிடும் போது ஹேமா எதிரில் சேகர் இருப்பதை கண்டால். ஆனால் அதற்கு முன்பே சேகர் ஹேமாவை பார்த்து சொக்கி நின்றுகொண்டிருந்தான். ஹேமா அவனைப்பார்த்து பிரெண்ட்லி யாக சிரிக்க சேகரும் பதிலுக்கு சிரித்தான். ஹேமா பக்கத்தில் இருப்பவர்கள் யார்? எனக்கேட்க சேகர் அம்மா அப்பா என அறிமுகப்படுத்தினான். சேகர் அவன் அம்மாவிடம் அம்மா அவங்கதான் ராஜாவோட அண்ணன் அண்ணி என்றான். அதற்கு சேகர் அம்மா அவன் அண்ணனை தெரியும்டா இப்பதான் அவன் அன்னிய பார்க்கிறேன், நல்லா லட்சணமா இருக்கா. சேகர் போய் பேசுமா என்றான். அவன் அம்மாவும் என்ன ரகு எப்படி இருக்க என்று கேட்க? சேகரின் அப்பா ரகுவை பார்த்து என்னப்பா எப்படி இருக்க என்று மறுபடியும் கேட்டு அவன் தோளில் கைபோட்டு பேசிக்கொண்டே நடந்து முன்னாடி சென்றனர். பின்புறம் ஹேமாவும் சேகரும் பேசிக்கொண்டே நடந்து வந்தனர்.

சேகர் : என்ன அக்கா டிரஸெல்லாம் சூப்பரா இருக்கு

ஹேமா : தேங்க்ஸ்ங்க

சேகர் : என்ன வாங்க போங்கன்னு சொல்லிக்கிட்டு சும்மா வாடா போடா சேகர்னு சொல்லுங்க

ஹேமா : அது எப்படி சொல்ல முடியும்?

சேகர் : நானும் உங்களுக்கு தம்பி மாதிரிதான் சும்மா சொல்லுங்க

ஹேமா : சரி சேகர்

சேகர் : அப்புறம் எப்போ ஊருக்கு போறீங்க

ஹேமா : தெரியலங்க அவங்கதான் டிக்கெட் போட்டு இருக்காங்க

சேகர் : பாத்தீங்களா இப்பதான சொன்னேன்

ஹேமா : சாரி சாரி

சேகர் : அடுத்து எப்போ ஊருக்கு வருவீங்க

ஹேமா : தெரியல சேகர் பட் வந்தா கண்டிப்பா உங்களை வந்து பார்க்கிறேன்

சேகர் : இப்படித்தான் நிறைய பேர் சொல்றாங்க

ஹேமா : இல்ல இல்ல நான் கண்டிப்பா மறக்கமாட்டேன் உங்கள, ஏன்னா நீங்க எனக்காக பண்ணுன விஷயம் அப்படி

1 Comment

Comments are closed.