மாலதி : மணி சுரேஷ் கிட்ட பைக் சாவி வாங்க போய் இருக்காண்டா என்ன இங்க நில்லு ன்னு சொல்லிட்டு போனான்.
சேகர் : சரி நான் வேணும்னா கொண்டுபோய் விடட்டுமா
மாலதி : வேணாண்டா அப்புறம் வந்து கத்துவான்
தூரத்தில் மணி வருவதை சேகர் பார்த்துகொண்டான்.
சேகர் : அதோ பாரு வந்துட்டான் உன் தம்பி
மாலதி திரும்பிப்பார்க்க அங்கே மணி வந்துகொண்டிருந்தான். மணி பைக் பக்கத்தில் வந்தான்.
மணி : நீ இங்க என்னடா பண்ற
சேகர் : பைக்கை எடுக்க வந்தேன். அக்கா நின்னுட்டு இருந்தாங்க அதான் பேசிட்டு இருந்தேன்
சேகர் : நீ சுரேஷ் கிட்ட சாவி வாங்கிட்டியா
மணி : வாங்கிட்டேன் டா
சேகர் : சரி. அக்கா நீங்க பாத்து வீட்டுக்கு போங்க நான் நாளைக்கு வீட்டுக்கு வரேன்
மாலதி : சரிடா
சேகர் : டேய் சுரேஷ் எங்கடா?
மணி : அவன் கோயிலுக்கு முன்னாடி ராஜா கூட நிக்கிறான்
சேகர் : ஓ ராஜா வந்துட்டானா
மணி : வந்துட்டாண்டா இப்பதான் வந்தான்
சேகர் : சரி நான் பாத்துக்குறேன்
குமார் பைக் வெளியிலெடுத்து ஸ்டார்ட் செய்தான் மாலதி பின்னே உட்கார்ந்துகொண்டு சேகரை பார்த்து “பாய்” என்று சைகை காண்பித்தாள். சேகரும் பாய் என்று பிளேன் கிஸ் கொடுத்தான். அதைப்பார்த்து மாலதி கொன்னுடுவேன் என்று சிரித்துக்கொண்டே சைகை காண்பித்தாள். இது எதுவும் வண்டி முன்னே அமர்ந்திருக்கும் மணிக்கு தெரியாது.
மணி : உட்கார்ந்துடியா, போலாமா
மாலதி : போலாம் (என்று சொல்ல வண்டி கிளம்பியது)
சேகர் பைக்கை எடுத்துக்கொண்டு கோவில் முன் வாசலுக்கு செல்ல .அவனைக் கடந்து ரகு மற்றும் அவனது நண்பர்கள் சென்றனர் .அப்போது ரகு சேகரின் பைக்கை நிறுத்தி “என்னடா எப்படி இருக்க” என்று கேட்டான்.
Supper