எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 3 79

பாலா : இங்க ஏண்டா கூட்டிட்டு வந்த

குமார் : இன்னிக்கு இதுல வச்சிதான் சரக்கு அடிக்க போறோம்

ரகு : ஏண்டா இங்க

குமார் : டேய் நேத்து நைட்டு அந்த போஸ்ட் ஆபிஸ்
உள்ள சம்பவம் நடந்திருக்கு .இன்னைக்கும் அவங்க வர வாய்ப்பு இருக்கு. இங்கிருந்து பார்த்தால் அந்த போஸ்ட் ஆஃபீஸ் நல்லா தெரியும். எப்படி என்னோட ஐடியா. இன்னைக்கு மட்டும் அவ கிடைச்சா நானும் பாலாவும் என்ஜாய் பன்னுவோம்.

பாலா : செம டா

வினோத் : டேய் நீ திருந்தவே மாட்டியா டா .உங்க அம்மா கிட்ட சொல்லி உனக்கு கல்யாணம் பண்ண சொல்லட்டுமா டா

குமார் : டேய் நான் கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு டெஸ்ட் டிரைவ் பண்ணனும்னு நினைக்கிறேன் டா

வினோத் : இவன் பேச்சைக் கேட்கமாட்டான் டா இங்கேயே அடிப்போம் நல்லா காத்தோட்டமா இருக்கு.

குமார் : சரி சரக்கு வாங்க யார் போறீங்க ?

அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்

குமார் : சொல்லுங்கடா

ரகு : நானும் வசந்தும் போறோம்

குமார் : சரி போய் வாங்கிட்டு வாங்க( என்று அவரவர்கள் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து ரகுவிடம் கொடுத்தனர்)

குமார் : டேய் நாளைக்கு உன்னோட ட்ரீட்னு சொன்னதுனால தான் இப்ப எல்லாரும் பைசாவின் கொடுக்கிறோம் சரியா. ஏமாத்தின மவனே கொன்றுவேன்

ரகு : மச்சான் சத்தியமா சொல்றேன் டா நாளைக்கு என்னோட ட்ரீட்

பாலா : சரி சரி புடி என்று சொல்லி பணத்தை கொடுத்தான்.

ரகுவும் வசந்தம் பைக்கை எடுத்துக்கொண்டு சரக்கு வாங்கி சென்றனர் .குமார், பாலா, வினோத் மூன்று பேரும் டெய்லருக்குள் ஏறி உட்கார்ந்தனர்.

9 மணிக்கு சேகர் பைக்கை எடுத்துக்கொண்டு கோயிலுக்கு வந்தான் ராஜாவுக்கு கால் செய்தான் அவன் போனை எடுக்கவில்லை. பின் சுரேஷுக்கு போன் செய்தான் அவன் அட்டென்ட் செய்தான்

1 Comment

Comments are closed.