அப்புறம் கடைசியா மதம் மாற சம்மதமா அப்படின்னு கேட்டாங்க நான் அதுக்கும் சரின்னு பதில் சொன்னேன் .அப்புறம் சரி போயிட்டு வாம்மா நாங்க வீட்ல பேசிட்டு சொல்றோம்னு சொன்னங்க
நானும் சரின்னு மும்பை வந்து வேலையே பாக்க ஆரம்பிச்சேன் .அதுக்கு அப்புறம் ஒரு ரெண்டு வாரம் கழிச்சு டேவிட் மும்பை வந்தான் .வந்து என் கிட்ட பேசுனான் .
அவங்க வீட்ல என்னையே பிடிக்கலன்னு சொன்னான் .நான் நீ என்ன யோசிச்சு வச்சு இருக்க அப்படின்னு கேட்டேன் .அதான் ஒன்னும் புரியல அப்படின்னு சொன்னான் .சரி இப்ப என்ன பண்ண சொல்லு
தெரியல அப்படின்னு சொன்னான் .சரி வா ரெண்டு பேரும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிகிருவோம் அப்படின்னு நான் சொன்னேன் .முடியாதுன்னு அவன் சொன்னான்
ஏன்ன்னு நான் கேட்டேன் .அவன் அது முடியாது வேணாம் அப்படின்னு மட்டும் திரும்ப திரும்ப சொல்லி கிட்டு இருந்தான் .நான் ஏன் முடியாது என்னையே பிடிக்கலையா அப்படின்னு கேட்டேன் .உன்னையே பிடிச்சு இருக்கு ஆனா என்னால என் குடும்பத்த மீறி எதுவும் பண்ண முடியாது அப்படின்னு சொன்னான் .
நான் ஏன் முடியாதுன்னு திரும்ப கேட்க அவன் வேணாம் விட்ருனு சொன்னான் .காரணம் சொல்லுடா அப்படின்னு நான் கோபத்தோட கத்தி கேட்கவும் அவன் கோப பட்டு நான் ஒன்னும் உன்னையே மாதிரி அநாதை இல்ல அப்படின்னு சொன்னான்
எனக்கு பயங்கரமா கோபம் வந்துருச்சு ஆனா அவன ஒன்னும் திட்டாம நான் அப்படியே வந்துட்டேன் அதுக்கு அப்புறம் நடந்தது தான் உனக்கும் எனக்கும் தெரியுமே என்றாள் .
யெஸ் ரைட் என்றான் விக்கி .உனக்கு ஏதும் டேவிட் பிரிஞ்சது வருத்தம் இல்லையா என கேட்டான் .ம்ம் ஒரு ரெண்டு மூனு நாள் இருந்துச்சு உண்மைய சொல்ல போனா நம்ம ரெண்டு பேரும் செக்ஸ் வச்சப்ப கூட நான் கொஞ்சம் கில்ட்டியா பீல் பண்ணேன் .
ஆனா அதுக்கு அப்புறம் அவன யோசிச்சு பாத்து அவன மறந்துட்டேன் அதுக்கு அப்புறம் எனக்கு குழந்தை வயுத்துல உருவான பிறகு அவன சுத்தமா மறந்துட்டேன் இன்னைக்கு நீ ஞாபக படுத்துனதுக்கு அப்புறம் தான் அவன் ஞாபகமே வருது என்றாள் .
ம்ம் நிஜமாவே இந்த 5 மாசத்துல அவன நினைக்கவே இல்லையா என்றான் விக்கி .5 மாசம் இல்ல 7 மாசமா அவன நினைக்கல என்றாள் .அது என்ன உன் குழந்தை உருவாக்கி 5 மாசம் தானே ஆகுது என்றான் .
இல்ல வர வாரத்துல இருந்து 6 வது மாசம் ஆக போகுது பட் நான் என்னைக்கு பப்ல தண்ணி அடிச்சுட்டு உன் அப்பர்ட்மெண்ட் வந்தேனோ அப்பவே முழுசா அவன மறந்துட்டேன் இப்ப நான் என் குழந்தை மட்டும் தான் என்றாள் .
அப்புறம் நிஜமாவே கனடா போறயா என்றான் .எஸ் என் பிரண்டு அங்க எனக்கு வேல பாத்து வச்சுட்டா எப்ப போனாலும் வேல கன்பார்ம் இந்தியால எனக்கு நல்லதுன்னு எதுவுமே நடக்கல .யாருக்குமே என்னையே பிடிக்கல எனக்கும் யாரையும் பிடிக்கல சோ புதுசா ஒரு வாழ்க்கைய வாழ கனடா போறேன் என்றாள் .
அதை கேட்ட விக்கிக்கு ஒரு மாதிரி தான் இருந்துச்சு என்ன அடுத்து பேசுவது என்று விக்கிக்கு ஒன்றும் தோன்ற வில்லை .
அதன் பின் அடுத்த நாள் ஆபிசில் வழக்கம் போல சுவாதியை பற்றி யோசித்து கொண்டு இருந்தான் .சுவாதிய நான் உண்மைலே லவ் பண்றானா இல்லையா இல்ல அவளுக்குத்தான் என் மேல எதாச்சும் பிலிங் இருக்கா அவ கிட்ட எப்படி என் லவ்வ சொல்றது சே இத பத்தியெல்லாம் முதல யார்கிட்டயாச்சும் பேசனும் .பேசி ஒரு suggustion கேக்கணும் .யார்கிட்ட கேக்கலாம் வள்ளி கிட்ட கேக்கலாம் .
ஆனா அவ விஷயம் தெரிஞ்சா வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சு உடனே எதாச்சும் முட்டாள் தானமா பண்ணிடுவா மணி கிட்ட சொல்ல முடியாது வருண் கிட்டயும் சொல்ல முடியாது வருணுக்கு தெரிஞ்சா கண்டிப்பா மணிக்கு தெரிஞ்சுடும் இப்ப என்ன பண்ணலாம் யார் கிட்ட பேசலாம் என்று யோசித்து கொண்டு இருந்த போதுதான் விக்கிக்கு தீடிரென சிமியின் ஞாபகம் வர போனை எடுத்தான் .
சிமிக்கு போன் அடித்தான் .ஹலோ சிமி என்றான் .எஸ் யாரு என்றாள் .நான் தான் விக்கி என்றான் .எந்த விக்கி என்றாள் .வருண் பார்ட்டி ஞாபகம் இல்லையா என்றான் .
இல்லையே எனக்கு எதுவும் ஞாபகம் இல்ல என்றாள் .ஓகே சாரி ராங் நம்பர் என்று போனை கட் பண்ண போகும் முன் எ எ நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்டா மத்தபடி உன்னையே மறப்பனா cutie .ஓகே என்ன விஷயம் என்றாள் .நீ பிரியா இருந்தா உன்னைய பாத்து கொஞ்சம் பேசணும் என்றான் .
சாரி டா நீ ரொம்ப லேட் நீ ட்ரை பண்றேன்னு புரியுது ஆனா என் ஆளு ஸ்டேட்ஸ்ல இருந்து வந்துட்டேனா இப்ப என்ன பண்ண என்று சொல்லி சிரித்தாள் .
Konjam fast ah next story podunga plz
Story samaiya erukku iam waiting for part 7
Wonderful story… Please continue and post next one soon
Update next part soon
Kindly upload daily without any break
We waiting daily for urs story
Oru story potta next part seekirama podanum dude. 7 epo varum